search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியிருப்புகளை"

    • சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.
    • இந்த நிலையில் பி. நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியில் கடந்த 20 நாட்களாக குடியிருப்புகளில் ஊற்றெடுத்து தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக மழை இல்லாததால் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்து வருகிறது.

    இந்த நிலையில் பி. நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியில் கடந்த 20 நாட்களாக குடியிருப்புகளில் ஊற்றெடுத்து தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இங்கிருந்து தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை அருகே உள்ளவர்கள் அடைத்து உள்ளதால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

    எனவே உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடியிருப்பு சுற்றியுள்ள பகுதியில் உள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி, காவிரி நகர் பகுதியில் தாழ்வான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • அவர்களுக்கு தேவையான உணவு வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உபரி நீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து 16 மதகு வழியாக வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதனால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி உட்பட காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வருவாய்த்து றையினர் முடிவு செய்து உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி, காவிரி நகர் பகுதியில் தாழ்வான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை இரவு முதல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மெல்ல மெல்ல அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் 3 நாட்களாக பவானியில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ×