search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானியில்"

    • பவானி நகர் பகுதியில் புதிய தினசரி காய்கறி சந்தை கட்டி டம் கட்டுவது குறித்த அவசரக் கூட்டம் நடைபெற்றது.
    • காய்கறி சந்தை ரூ.1.30 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி நகராட்சி கூட்ட அரங்கில் தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் அறிவிப்பு எண் 13-ன் படி பவானி நகர் பகுதியில் புதிய தினசரி காய்கறி சந்தை கட்டி டம் கட்டுவது குறித்த அவசரக் கூட்டம் நடைபெற்றது.

    பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ வன் தலைமை வகித்தார். ஆணை யாளர் மோகன் குமார், துணைத்தலைவர் மணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த அவசரக் கூட்ட த்தில் பவானி நகராட்சிக்கு உட்பட்ட பழைய வார சந்தை ரோட்டில் அமை ந்துள்ள காய், கனி தினசரி மார்கெட் அமைந்துள்ளது. இநத காய்கறி சந்தை ரூ.1.30 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வா கத் துறை மூலம் பவானி நக ராட்சி பகுதியில் மார்க்கெட் அமைப்பது குறித்து நகர்மன்ற கூட்ட த்தொடர் நடத்தி தீர்மா னம் நிறைவேற்றி முடிவை அறிவிப்பது என நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.

    இதில் எடுக்கப்படும் முடிவுகள் நகராட்சி துறை உயர் அதிகாரிகளுக்கு வழங்கி கட்டிடம் கட்ட பணிகள் தொடங்க ஆய்வு மேற்கொ ள்ளப்படும் வகையில் இந்த அவசரக் கூட்டம் நடைபெ ற்றது.

    பவானியில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 25 கவுன்சிலர்கள் உள்ளனர். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு .க. 4, சி.பி,ஐ. மற்றும் சுயேச்சை கலந்து கொண்டு இந்த தீர்மானம் குறித்து விவா தத்தில் ஈடுபட்டனர்.

    இதில் 16 பேர் ஆதரவும், 8 பேர் ஆதரவு இல்லை என்றும், ஒருவர் பரா மரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரி வித்தனர்.

    இதை தொடர்ந்து தினசரி காய்கறி மார்க்கெட் இருக்கும் இடத்திலே புதியதாக காய்கறி மார்க்கெட் கட்டப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பவானி:

    திருச்சி மாவட்டம் துறை யூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு நரசிங்கபுரம் பகுதியில் மணல் கடத்தப்படு வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடம் சென்றார். அப்போது டிராக்டர் மூலம் சிலர் கிராவல் மண் அனுமதி இன்றி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து அவர்களிடம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் கேட்டு தடுத்து நிறுத்தினார். அப்போது 4 பேர் அவரை தகாத வார்த்தையால் பேசி அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து துறையூர் போலீசில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பவானி தாசில்தார் அலு வலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பவானி வட்டக் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். செய லாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பறிக்கப்பட வேண்டும். அவர் மீதும் மறறவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். வருவாய் துறை அலுவலர்க ளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பி னர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், தாசில்தார் அலுவலக பணி யாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உதவி யாளர் சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

    • பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.

    பவானி:

    பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் பவானி நகர் முழுவதும் மற்றும் மூன்ரோடு, ஊராட்சி கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்ப நாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கண்ணடிபாளையம், மயிலம்பாடி, ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்டகாட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.

    • பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
    • இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யாவிட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதி களில் பரவலாக மழை பெய்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பவானி, வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், பவானிசாகர், கொடிவேரி, சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் இன்னும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய வில்லை. இனி வரும் நாட்களில் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பவானி-23, வரட்டுபள்ளம்-7.40, அம்மாபேட்டை-6.60, குண்டேரிபள்ளம்-5.20, பவானிசாகர்-4, கொடி வேரி, சென்னிமலை-2, பெருந்துறை-1. 

    • கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதிகளின் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
    • ஓட்டு வீடானது வெள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளது. அவர்கள் முகாமில் தங்கி இருந்ததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

    பவானி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அதிக அளவில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் 16 மதகு கண் வழியாக திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் கன அடி வரை காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பவானி நகர பகுதியில் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் வருவாய் துறையினர் மூலம் தங்க வைக்கப்பட்டனர்.

    இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் தண்ணீரின் அளவு குறை ந்தது. இதனைத்தொடர்ந்து கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதிகளின் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.

    கந்தன் பட்டறை பகுதியில் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர் சந்திரன் (31). இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மீனவர் ஆன இவர் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வந்த நிலையில் கோவைக்கு சென்று மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் அவரின் வீடு கடந்த வாரம் இடிந்து விழுந்தது.இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (45). இவரது மனைவி சாந்தி மற்றும் ஒரு மகன் ஒரு மகளுடன் தனது ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

    அவரின் ஓட்டு வீடானது வெள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளது. அவர்கள் முகாமில் தங்கி இருந்ததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

    கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தாங்கள் தற்பொழுது வீட்டை சுத்தமட்டும் செய்து வைத்துக் கொள்ளவும், ஒரு வாரம் கழித்து தண்ணீர் அளவு எப்படி உள்ளது என பார்த்த பின்னர் தாங்கள் தங்கள் வீட்டுக்கு குடியேற வலியுறுத்தி உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி, காவிரி நகர் பகுதியில் தாழ்வான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • அவர்களுக்கு தேவையான உணவு வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உபரி நீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து 16 மதகு வழியாக வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதனால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி உட்பட காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வருவாய்த்து றையினர் முடிவு செய்து உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி, காவிரி நகர் பகுதியில் தாழ்வான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை இரவு முதல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மெல்ல மெல்ல அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் 3 நாட்களாக பவானியில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ×