search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Bhawani"

    • கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதிகளின் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
    • ஓட்டு வீடானது வெள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளது. அவர்கள் முகாமில் தங்கி இருந்ததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

    பவானி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அதிக அளவில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் 16 மதகு கண் வழியாக திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் கன அடி வரை காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பவானி நகர பகுதியில் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் வருவாய் துறையினர் மூலம் தங்க வைக்கப்பட்டனர்.

    இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் தண்ணீரின் அளவு குறை ந்தது. இதனைத்தொடர்ந்து கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதிகளின் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.

    கந்தன் பட்டறை பகுதியில் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர் சந்திரன் (31). இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மீனவர் ஆன இவர் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வந்த நிலையில் கோவைக்கு சென்று மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் அவரின் வீடு கடந்த வாரம் இடிந்து விழுந்தது.இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (45). இவரது மனைவி சாந்தி மற்றும் ஒரு மகன் ஒரு மகளுடன் தனது ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

    அவரின் ஓட்டு வீடானது வெள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளது. அவர்கள் முகாமில் தங்கி இருந்ததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

    கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தாங்கள் தற்பொழுது வீட்டை சுத்தமட்டும் செய்து வைத்துக் கொள்ளவும், ஒரு வாரம் கழித்து தண்ணீர் அளவு எப்படி உள்ளது என பார்த்த பின்னர் தாங்கள் தங்கள் வீட்டுக்கு குடியேற வலியுறுத்தி உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி, காவிரி நகர் பகுதியில் தாழ்வான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • அவர்களுக்கு தேவையான உணவு வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உபரி நீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து 16 மதகு வழியாக வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதனால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி உட்பட காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வருவாய்த்து றையினர் முடிவு செய்து உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி, காவிரி நகர் பகுதியில் தாழ்வான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை இரவு முதல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மெல்ல மெல்ல அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் 3 நாட்களாக பவானியில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ×