search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Demonstration against"

    • கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் கொங்காடை, தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த தாமரைக்கரையில் பர்கூர் மலை ப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்த தை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோ ட்டையன் எம்.எல்.ஏ. தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அப்போது கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

    அனைத்து கட்சியினரும் அ.தி.மு.க, உடைந்துவிட்டது என நினைக்கின்றனர். ஆனால் அப்படியில்லை. ஆகஸ்ட் 20-ந் தேதி நடக்கும் பொதுக்கூட்டம், அனை வரும் ஒன்றாகத்தான் உள்ள னர் என்பதை வெளிப்படு த்தும். அடித்தட்டு மக்கள் மேன்பட கல்வி ஒன்றால் தான் முடியும். அதை கவனத்தில் கொண்டு பள்ளி க்கல்வித்துறை அமைச்சர் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரமணீதரன், கோவை மண்டல தகவல் தொழி ல்நுட்பப்பிரிவு பொரு ளாளர் மோகன்குமார், அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், அந்தியூர் ஒன்றிய செயலாளர் தே வராஜ், துணை செயலாளர் எஸ்.ஜி. சண்முகானந்தம், மேற்கு மாவட்ட மாணவ ரணி செயலாளர் குருராஜ், சசி பிரபு, அத்தாணி அ.தி.மு.க. கவுன்சிலர் வேலு மருதமுத்து,

    ஒன்றிய ஜெயலலிதா பேரவை செய லாளர் ஓட்டல் கிருஷ்ணன், நகர இளைஞரணி செய லாளர் பார் மோகன், நகர பேரவை செயலாளர் பாலு சாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா சம்பத், பர்கூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையன், சவுந்தரராஜன்,

    நகைக்கடை அதிபர் கிருஷ்ணமூர்த்தி, முருக பிரகாஷ், கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராயண்ணன், இ.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அலையோசை அந்தோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்காடை, தாமரைக்கரை, தட்டக்கரை. பர்கூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    • பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பவானி:

    திருச்சி மாவட்டம் துறை யூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு நரசிங்கபுரம் பகுதியில் மணல் கடத்தப்படு வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடம் சென்றார். அப்போது டிராக்டர் மூலம் சிலர் கிராவல் மண் அனுமதி இன்றி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து அவர்களிடம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் கேட்டு தடுத்து நிறுத்தினார். அப்போது 4 பேர் அவரை தகாத வார்த்தையால் பேசி அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து துறையூர் போலீசில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பவானி தாசில்தார் அலு வலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பவானி வட்டக் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். செய லாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பறிக்கப்பட வேண்டும். அவர் மீதும் மறறவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். வருவாய் துறை அலுவலர்க ளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பி னர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், தாசில்தார் அலுவலக பணி யாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உதவி யாளர் சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

    • புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார்.

    பவானி:

    ஈரோடு வடக்கு மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பவானி- மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் பவானி உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் செங்கைரவி, பொருளாளர் வினோத் குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் சுடலை, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கண்டன உரை ஆற்றினர். பவானி-மேட்டூர் மெயின் ரோடு தற்போது அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணி முடிக்கும் போது பவானி அருகில் உள்ள சிங்கம்பேட்டை பகுதியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளதை கண்டித்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் எனவும் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார்.

    இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டண கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவிப்பின்படி இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. தலைவரும், முதல்-அமை ச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி -மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதன்படி ஈரோடு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பா ளர்கள் கே.இ.பிரகாஷ், சேகர், மாணவரணி அமைப்பாளர் திருவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட அறங்காவல் குழு தலைவர் எல்லபாளையம் சிவக்குமார், அந்தியூர் செல்வராஜ் எம்.பி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன்,

    கோபி நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான என்.ஆர்.நாகராஜன், கோபி முன்னாள் நகர செயலாளர் மணிமாறன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன், கோட்டைப்பகுதி செயலாளர் ராமச்சந்திரன்,

    பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு, வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளர் வீ.சி.நடராஜன், கவுன்சிலர்கள் புனிதா சக்திவேல், புவனேஸ்வரி பாலசுந்தரம், ஜெகதீஷ், சுகந்தி, கீதாஞ்சலி செந்தில்குமார், சுபலட்சுமி, தலைமைக் கழக பேச்சாளர் இளைய கோபால்,

    பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, வட்டச் செயலாளர் தங்கமணி, தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் கோபால், பொருளாளர் தங்கமுத்து உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டண கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டதால் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதித்துள்ளதை கண்டித்தும், அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னிமலை பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதை கண்டித்தும் அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஒன்றியச் செயலாளர் செங்கோட்டையன் தலை மை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி., மாநிலச் செயலாளர் சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் நாகப்பன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கண்ணுசாமி,மகேந்திரன், நகர செயலாளர் ராஜ்குமார், ஒன்றியக்குழு குழு உறுப்பினர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டதில் அரிசி, கோதுமை, பருப்பு, கோதுமை மாவு, ரவை, பால், தயிர், மோர், பன்னீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

    தங்கும் விடுதி கட்டணம், மருத்துவமனை அறை கட்டணம், மயானக் கட்டணம், மை, கத்தி, பிளேடு உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டு உள்ள ஜி.எஸ்.டி வரி உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும்.

    தமிழக அரசு வீடுகள், கடைகள் மற்றும் நிறுவன ங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது/

    ×