என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உணவு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதித்துள்ளதை கண்டித்தும், அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும்.
சென்னிமலை:
சென்னிமலை பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதை கண்டித்தும் அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றியச் செயலாளர் செங்கோட்டையன் தலை மை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி., மாநிலச் செயலாளர் சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் நாகப்பன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கண்ணுசாமி,மகேந்திரன், நகர செயலாளர் ராஜ்குமார், ஒன்றியக்குழு குழு உறுப்பினர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டதில் அரிசி, கோதுமை, பருப்பு, கோதுமை மாவு, ரவை, பால், தயிர், மோர், பன்னீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
தங்கும் விடுதி கட்டணம், மருத்துவமனை அறை கட்டணம், மயானக் கட்டணம், மை, கத்தி, பிளேடு உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டு உள்ள ஜி.எஸ்.டி வரி உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும்.
தமிழக அரசு வீடுகள், கடைகள் மற்றும் நிறுவன ங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது/
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்