search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "construction of toll booth"

    • புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார்.

    பவானி:

    ஈரோடு வடக்கு மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பவானி- மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் பவானி உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் செங்கைரவி, பொருளாளர் வினோத் குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் சுடலை, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கண்டன உரை ஆற்றினர். பவானி-மேட்டூர் மெயின் ரோடு தற்போது அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணி முடிக்கும் போது பவானி அருகில் உள்ள சிங்கம்பேட்டை பகுதியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளதை கண்டித்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் எனவும் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார்.

    இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×