search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுப்புத்தூரில் மழை நீர் சீராக செல்ல கால்வாய் தூர்வாரும் பணி
    X

    காட்டுப்புத்தூரில் மழை நீர் சீராக செல்ல கால்வாய் தூர்வாரும் பணி

    • பார்பர் காலனி குடியிருப்பகுதியில் பெத்தான் பகுதியிலிருந்து வடிகால் மூலம் வாய்க்காலில் செல்லும் உபரிநீர் தேங்கி, பொதுசுகாதாரத்திற்கும் மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருந்தது.
    • காட்டுப்புத்தூரில் மழை நீர் சீராக செல்லும் வகையில் கால்வாய் தூர்வாரும் பணி நடை பெற்றது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதி வார்டு ஒன்றில் மேற்கு தவிட்டுப்பாளையம் பார்பர் காலனி குடியிருப்பகுதியில் பெத்தான் பகுதியிலிருந்து வடிகால் மூலம் வாய்க்கால் செல்லும் உபரிநீர் தேங்கி அதன்மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதரத்திற்கும், பொதுசுகாதாரத்திற்கும் மிகவும் சிரமமாக இருந்து வந்தது.

    இதைத் தொடாந்து முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் ஆலோசனையின்படி பெத்தான் பாறை குட்டை மழையினால் கொள்ளவை தாண்டி வெளியேரிய உபரிநீர் வார்டு ஒன்றில் மேற்கு தவிட்டுப்பாளையம் பார்பர் காலனி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காத வண்ணம் போர்கால அடிப்படையில் பெத்தான் பாறை குட்டை முதல் காட்டுப்புத்தூர் வாய்க்கால் வரை மழைநீர் வடிகாலினை தூர் வாரும் பணி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில் நடை பெற்றது.

    பணியின் போது பேரூராட்சி மன்றதலைவர்சு.சங்கீதாசுரேஷ், துணைத்தலைவர் சி.சுதாசிவசெல்வராஜ், 1-வது வார்டு உறுப்பினர் பா.சிவஜோதி பாலசுப்பிரமணியன், துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×