search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி"

    • மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.
    • நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று காலையில் டெல்லியில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார். அவருடன் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் வழங்கினார். அந்த கடிதத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் எழுதி இருப்பதாவது:-

    காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 2018 பிப்ரவரி 16-ம் நாளிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணையின்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது.

    இருப்பினும், ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டி.எம்.சி. என உள்ள நிலையில், 22.54 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையாக உள்ளது. பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டி.எம்.சி நீர்வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்கு கீழே, கட்டுப்பாடற்ற இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பிலிகுண்டுலு வரை பாய்கிறது.

    தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும், குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அது 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    எனவே, நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்திட இயலும்.

    தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் கடந்த 5.7.2023 அன்று ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சனையில் தலையிட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டிருந்தார்.

    3.7.2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்றதாகவும் கூறினோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 4.7.2023 தேதியிட்ட தனது கடிதத்தில், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழ்நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடு செய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிடவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ஜல் சக்தி துறை அமைச்சர் , கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் மற்றும் நீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்கு தேவையான முறையை செயல்படுத்து வதற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
    • ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு நலத்திட்டங்களால் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்துள்ளனர். முத்ரா கடனுதவித் திட்டம், மருத்துவ காப்பீடுத் திட்டங்களால் கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களால் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்துத் தரப்பினரும் பயனடைந்து வருவதால் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வே அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவார்.

    உலக அளவில் புகழ் பெற்ற தலைவராக அவர் உள்ளார். அவருக்கு நிகரான தலைவராக ராகுல்காந்தி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.

    அவரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளில் அனைத்துக்கட்சித் தலைவர்களுமே தங்களை பிரதமராக எண்ணிக்கொள்கின்றனர்.

    புதுச்சேரியில் இலவச கியாஸ் இணைப்பு திட்டம், காப்பீடு திட்டங்களில் தலா 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். பா.ஜ.க.வுடன் இணைந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஏராளமானோர் கோரிக்கை வைக்கின்றனர். தமிழகத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். நாட்டில் பலரும் கோரி வருகின்றனர்.

    எனவே அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

    எனவே அச்சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் உட்பட யாரும் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
    • தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளை பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாகவே பார்க்கலாம். தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது. இங்கு திராவிட கட்சிகள் பல ஆண்டுகள் ஆண்ட நிலை–யில், அந்த போதையில் இருந்து தெளிந்த பிறகே மாற்றத்தை பற்றி பேச வேண்டும். சமீபத்தில் நடந்த ரெயில் விபத்து என்பது 21-ம் நூற்றாண்டில் நடந்திருப்பது கண்டிப்பாக ஒரு தலைகுனிவுதான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரெயில் விபத்து சதி என்று கூறப்படும் நிலையில் அப்படி இருந்தால் அது பயங்கரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்
    • வந்தே பாரத் ரெயில் ஒன்றினை கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்ல ஒதுக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய ெரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்ந் திடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம்தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். பணி யாளர்கள், மாணவர்கள், மருத்துவ வசதி தேடுபவர்கள், தொழில் முனைபவர்கள் மற்றும் பல்வேறு விஷயங்களுக்காக கன்னியாகுமரி மற்றும் சென்னை இடையே மக்கள் அடிக்கடி பயணம் செய்கின்றனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சுற்றுலா தலமாக அமைந்திருப்பதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். ஆனால் கன்னியாகுமரி வந்து சேர ெரயில் வசதி மிக குறைவாக காணப்படுகிறது. ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு தினசரி ெரயில் தேவை என்ற கோரிக்கையை ெரயில்வே துறையிடம் எழுப்பி உள்ளோம். ஆகவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில் ஒன்றினை கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்ல ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இதுகன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பயனளிப்பதுடன் தென் தமிழகத்தின் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கூடுதலாக மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் ஒன்றினையும் கன்னியாகுமரி-சென்னை இடையே ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 50 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் மக்களின் பயண தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்
    • விரைவு போக்குவரத்துக்கழக பஸ் நிலையத்தையும் சேர்த்து அண்ணா பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்.

    நாகர்கோவில் :

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் 31-ந்தேதி நடந்தது. அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசும் போது வடசேரியில் ரூ.68 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். அவ்வாறு அமையும் போது வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் ஆம்னி பஸ் நிலையங்களும் அதனுடன் இணைக்கப்படும். மேலும் கனகமூலம் சந்தை, அண்ணா பஸ் நிலையத்துக்கு மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வடசேரியில் அமையும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை பற்றி முழுமையாக ஆய்வு செய்துள்ளாரா? மேலும் அண்ணா பஸ் நிலையத்தில் சந்தையை மாற்றும் போது விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் சந்தைக்கு செல்லும் பொதுமக்களின் வசதிகள் பற்றியும் மேயர் ஆய்வு செய்துள்ளாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    கனகமூலம் சந்தை ஏற்கனவே தன்னிகரில்லாத தன் மகுடத்தை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருவதாக நான் கருதுகிறேன். எனவே வடசேரி சந்தையை மேலும் பெருமைமிக்கதாக உருவாக்கும் முயற்சியில் மாநகராட்சி திட்டமிட வேண்டும்.

    வாஜ்பாய் ஆட்சி காலத் தில் நான் நகர்ப்புற மேம் பாட்டு துறை மந்திரியாக இருந்த போது மத்திய அரசாங்கத்தின் நிதியில் இருந்து ரூ.12 கோடிக்கு வடசேரி கனக மூலம் சந்தை மேம்பாடு (குளிர்பதன கிடங்கு உள்பட) வடசேரி பஸ் நிலையம் மேம்பாடு மற்றும் வடசேரி மீன் சந்தை மேம்பாடு (குளிர்பதன கிடங்கு உள்பட) திட்டம் தயாரிக்கப்பட்டது. அப் போது இருந்த மாநில அர சாங்கம் இந்த திட்டத்தை ஏற்று கொள்ளாமல் வடசேரி பஸ் நிலையத்தை மட்டும் மேம்படுத்த அனுமதித்தது. அதன்படி 2003-ம் ஆண்டு சுமார் ரூ.2 கோடி மத்திய அரசின் நிதி வழங்கப்பட்டு பணியும் நடந்தது. அன்று நான் திட்டமிட்டபடி ரூ.12 கோடிக்கான பணி முடிக்கப்பட்டு இருந்தால் இன்று ஏற்பட்டுள்ள பல சிரமங்களை அன்றே தவிர்த்திருக்க முடியும்.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் விமான நிலைய தரத்திற்கு ஒப்பான பஸ் போர்ட்டை தமிழகத்தில் சென்னை, கோவை, நாகர்கோவில் போன்ற இடங்களில் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம்.

    புதிய பஸ் போர்ட்டுக்காக நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தின் பின்புறம் 20 ஏக்கர் நிலமும் அதற்காக அடையாளம் காணப்பட்டது. மேலும் புதிய பஸ்போர்ட் தற்போது அமைக்கப்பட்டுள்ள அப்டா சந்தை அருகில் உள்ள நான்கு வழிச்சாலை யுடன் இணையும் வகையில் திட்டமிடப்பட்டது. இந்த பஸ்போர்ட் அமைக்கப்பட்டால் குறைந்தது அடுத்த 50 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் மக்களின் பயண தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எனவே மேயர், நான் மந்திரியாக இருந்த போது திட்டமிட்ட பஸ்போர்ட்டை கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்.

    அண்ணா பஸ் நிலையத்தை மேம்படுத்த விரும்பினால், தமிழக முதல்- அமைச்சர் அனுமதியோடு, அண்ணா பஸ் நிலையத்தின் அருகில் இருக்கும் போக்குவரத்து துறைக்கு சொந்தமான தற்போது பெரிய அளவில் பயன்பாட் டில்இல்லாத விரைவு போக்குவரத்துக்கழக பஸ் நிலையத்தையும், பணிமனையையும் சேர்த்து அண்ணா பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் மக்களுக்கு அன்றாடம் பயன்படும் வடசேரி சந்தையையும், அண்ணா பஸ் நிலையத்தையும் இடம் மாற்றி அமைக்க கூடாது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • வருகிற 6-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க வருகிறார்.
    • புதிய அலுவலகத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே கலைவாணர் கலையரங்கம் இருந்தது. அந்த அரங்கத்தை மாற்றி விட்டு தற்பொழுது புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த புதிய அலுவலகத்தை வருகிற 6-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க வருகிறார். இது மகிழ்ச்சி தருகிறது. அவர் வருகைக்கு முன்னதாக ஒன்றை உறுதி செய்து விட்டு இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும்.

    ஏற்கனவே புதிய அலுவ லகம் கட்டப்பட்டுள்ள இடம் கலைவாணர் அரங்கம் என்ற பெயரில் இருந்ததால் புதிய அலுவலகத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது.

    ஆனால் தற்போதைய மேயர் மகேஷ், கருணாநிதி அரங்கம் என்று சூட்ட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கட்டிடத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது கலைவாணர் பெயர் இல்லாமல் திறந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும்.

    இந்த மண் கலைவாணர் பிறந்த மண்ணாகும். அவரது பெயரை வைக்காமல் புதிய அலுவலகம் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டிடத்தில் இதுவரை அவரது பெயர் இடம் பெறவில்லை. திறப்பு விழாவிற்கு முன்னதாக கட்டிடத்தில் கலைவாணர் பெயர் இடம் பெற வேண்டும். இது தொடர்பாக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். அவர் பெயர் இடம் பெறாமல் இருந்தால் முதல்-அமைச்சர், தனது நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் ஒரு தனி நகரமாக இருந்து பெரும்பான்மையான அளவில் நிதியை பெற்றுத்தந்துள்ளது.
    • என்.95 முககவசம் முதல் பல்வேறு மருத்துவ உபகரணங்களை உலக நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது

    திருப்பூர் :

    மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை மந்திரி கிஷன் ரெட்டி திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ பின்னலாடை கல்லூரியில் சுயசார்பு இந்தியா பற்றி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கல்லூரி தலைவர் மோகன் வரவேற்றார். கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை மந்திரி கிஷன் ரெட்டி பேசியதாவது:-

    இந்திய பொருளாதார ஏற்றுமதியில் திருப்பூர் ஒரு தனி நகரமாக இருந்து பெரும்பான்மையான அளவில் நிதியை பெற்றுத்தந்துள்ளது. திருப்பூரில் உள்ள இளைஞர்கள் தொழில் அதிபர்களாகவும், தொழில் முனைவோராகவும் உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் தீனதயாள் உபத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்ட கிளை இந்திய அளவில் 79 இடங்களில் உள்ளன. அதில் ஒரு கிளை இங்கு செயல்படுவது பெருமையாக உள்ளது. அடல் இன்குபேஷன் சென்டர் செயல்படும் விதம் சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கொரோனா காலத்தில் சுயசார்பு இந்தியா இயக்கத்தின் மூலம் சாதித்தது என்ன என்று கேள்வி கேட்ட மாணவிக்கு, என்.95 முககவசம் முதல் பல்வேறு மருத்துவ உபகரணங்களை உலக நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது என்று மந்திரி பதில் அளித்தார். முடிவில் கல்லூரி துணை தலைவர் பழனிசாமி நன்றி கூறினார். கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • உள்ளூர் பாஜக அலுவலகத்திற்கு சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
    • மத்திய மந்திரி பிரமாணிக் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கொல்கத்தா:

    மத்திய உள்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் இன்று மேற்கு வங்காள மாநிலம், கூச் பெஹாருக்கு சென்றபோது அவரது வாகனம் மீது திடீரென ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் மந்திரியின் கார் கண்ணாடி உடைந்தது. தாக்குதல் நடத்திய கும்பல் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

    திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாக மத்திய மந்திரி பிரமாணிக் குற்றம்சாட்டி உள்ளார். மந்திரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாமானியனின் நிலையை கற்பனை செய்து பார்த்துககொளளுங்கள. மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்தின் நிலை எப்படி இருக்கிறது? என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

    கூச் பெஹரில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமாணிக், உள்ளூர் பாஜக அலுவலகத்திற்கு சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    எல்லைப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மத்திய மந்திரி பிரமாணிக் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சமீபத்தில் கூச் பெஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மத்திய மந்திரி பிரமானிக்கை விமர்சித்தார். கொலைக்கு பிறகு பழங்குடியினரின் குறைகளை போக்க மத்திய மந்திரி பிரமாணிக் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

    பிரமாணிக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் அறிவித்தது. இந்த பகுதியில் பிரமாணிக் எங்கு சென்றாலும் கருப்புக் கொடிகளை காட்டுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் உதயன் குஹா கூறியிருந்தார்.

    • மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்கு போக்கு வரத்துக்கும் உபயோகம் உள்ள நீர்வழி போக்குவரத்தாக மாறும்
    • கால்வாய் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து கடல் நீர் நிலத்திற் குள் புகுவதை தடுத்து, மண் வளம் பெறவும் உதவும்

    நாகர்கோவில் :

    மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனாவாலை டெல்லியில் அவரது அலுவலகத்தில் விஜய்வசந்த் எம்.பி. சந்தித்தார்.

    அப்போது, 19-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மகாராஜாவால் திருவ னந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக ஏ.வி.எம். கால்வாய் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த பணி பாதியில் நிறுத்தப்ப ட்டது.

    தற்போது அந்த கால்வாய் அரை குறையாக காணப்படுகிறது. இந்த கால்வாய் பணியை மத்திய அரசு ஏற்றெடுத்து முடித்தால், மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்கு போக்கு வரத்துக்கும் உபயோகம் உள்ள நீர்வழி போக்குவரத்தாக மாறும். இதனால் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இயலும்.

    திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி என்பதை பிற்காலத்தில் கேரள மாநிலம் கொல்லம் வரையிலும், தமிழ்நாட் டின் தூத்துக்குடி வரை யில் நீட்டிக்க முடியும். மேலும், இந்த கால்வாய் மூலம் நிலத்தடி நீர் உய ர்ந்து கடல் நீர் நிலத்திற் குள் புகுவதை தடுத்து, மண் வளம் பெறவும் உதவும். மேலும், கன்னியா குமரி சுற்றுலாவை மேம்படுத்த முடியும்.

    எனவே ஏ.வி.எம்., கால் வாயை சீரமைக்க தேவை யான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

    • இந்த 2 கட்சிகளும் ஊழல் மூலம் கர்நாடகாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன.
    • இந்த முறை பாஜகவை முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    மண்டியா:

    கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தற்போது அங்கு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு முன்னதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்றே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    கர்நாடகா மாநில பாஜக சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன.அந்த கட்சிகள் ஊழல் கொள்ளை நடத்துகின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது டெல்லி ஏ.டி.எம். போல செயல்படும். மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்தால், அது ஒரு குடும்ப ஏ.டி.எம். ஆக இருக்கும். இந்த 2 கட்சிகளும் ஊழல்கள் மூலம் கர்நாடகாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன. அதனால் ஊழல், வாரிசு அரசியலில் இருந்து கர்நாடகாவை விடுவிக்க வேண்டும்.

    மண்டியா, மைசூரு மண்டலத்தில் அந்த இரு கட்சிகளுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தது போதும். இந்த முறை பாஜகவை நீங்கள் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் இரட்டை என்ஜின் அரசை கொண்டு வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் கர்நாடகத்தை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஐந்து மாநில விவசாயிகளுடன் மத்திய மந்திரி கலந்துரையாடல்.
    • உழவர் பாதுகாப்பு மையங்கள், விவசாயிகளுக்கு உதவி வருகின்றன.

    பிரதமரின் உழவர் பாதுகாப்பு மையங்களைச் சேர்ந்த 9000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய மந்திரி மாண்டவியா பேசியதாவது: 


    விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு புரட்சிகர திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உழவர் பாதுகாப்பு மையங்கள் வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையிலும் செயல்பட்டு வருகின்றன. மேலும் விவசாயிகள் தங்களது வருமானத்தை இருமடங்காக பெருக்கிக் கொள்ளும் வகையில் அவை உதவுகின்றன. 



    உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. உலகளவில் பல்வேறு சிக்கல்கள் நிலவிய போதிலும், மத்திய அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையில் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் முதலாவது கடல்பாசி பூங்கா தமிழகத்தில் உருவாக்கப்பட உள்ளது என்றார். 

    சென்னை காசிமேடு உட்பட நாடு முழுவதும் ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

    மத்திய அரசு விலையில்லா எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 32 லட்சம் குடும்பங்கள் விலையில்லா சமையல் எரிவாயு இணைப்பை பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

    குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு கோடியே 27 லட்சம் குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். 

    பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் பேரும்,  விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ்  46 லட்சம் பேரும் தமிழகத்தில் மட்டும் பயனடைந்து இருப்பதாக அமைச்சர் கூறினார்.

    தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு  கோடியே 27 லட்சம் குடியிருப்புகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.   

    நடைபாதை வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

    மத்திய அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  சாதனை விளக்க புத்தகங்களையும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டார்.

    ×