search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிசித் பிரமாணிக்"

    • உள்ளூர் பாஜக அலுவலகத்திற்கு சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
    • மத்திய மந்திரி பிரமாணிக் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கொல்கத்தா:

    மத்திய உள்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் இன்று மேற்கு வங்காள மாநிலம், கூச் பெஹாருக்கு சென்றபோது அவரது வாகனம் மீது திடீரென ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் மந்திரியின் கார் கண்ணாடி உடைந்தது. தாக்குதல் நடத்திய கும்பல் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

    திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாக மத்திய மந்திரி பிரமாணிக் குற்றம்சாட்டி உள்ளார். மந்திரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாமானியனின் நிலையை கற்பனை செய்து பார்த்துககொளளுங்கள. மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்தின் நிலை எப்படி இருக்கிறது? என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

    கூச் பெஹரில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமாணிக், உள்ளூர் பாஜக அலுவலகத்திற்கு சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    எல்லைப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மத்திய மந்திரி பிரமாணிக் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சமீபத்தில் கூச் பெஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மத்திய மந்திரி பிரமானிக்கை விமர்சித்தார். கொலைக்கு பிறகு பழங்குடியினரின் குறைகளை போக்க மத்திய மந்திரி பிரமாணிக் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

    பிரமாணிக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் அறிவித்தது. இந்த பகுதியில் பிரமாணிக் எங்கு சென்றாலும் கருப்புக் கொடிகளை காட்டுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் உதயன் குஹா கூறியிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட்டுத்துறை இணை மந்திரி வாழ்த்து.
    • நாங்கள் எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுகிறோம்.

    இந்திய ஆக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரராக மேஜர் தியான்சந்த் கருதப்படுகிறார். அவரது பிறந்த நாளான இன்று தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையொட்டி விளையாட்டு ஆளுமைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான தமது டுவிட்டர் பதிவில், தேசிய விளையாட்டுகள் தினம் மற்றும் மேஜர் தியான்சந்த் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமீப ஆண்டுகளாக விளையாட்டுகள் மிக சிறந்தவையாக உள்ளன. இந்த நிலைமை தொடரட்டும். இந்தியா முழுவதும் விளையாட்டுக்கள் பிரபலமடையட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


    இந்நிலையில் ஆக்கி வீரர் தியான் சந்த் உருசிலைக்கு விளையாட்டுத்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.நாங்கள் எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுகிறோம் ஆனால் அது ஒரு விளையாட்டு. தோல்வியும் வெற்றியும் அதன் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிளில் எங்கள் விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கினர். விளையாட்டு கொண்டாடப்பட வேண்டும். மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை 250க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டு ஆணைய மையங்களில் நாங்கள் இன்று கொண்டாடுகிறோம் என்றும், விளையாட்டுத் துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் தெரிவித்துள்ளார்.

    ×