search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சு"

    • மதுரையில் மண்டல ம.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசினார்.
    • தமிழ்நாட்டில் பா.ஜனதாவை நுழையவிடாமல் தடுக்க திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும்.

    மதுரை

    அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15-ந்தேதி மதுரையில் நடக்கிறது. இதனையொட்டி, மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று, தெப்பக்கு ளம் நோட்புக் அரங்கில் நடைபெற்றது.

    பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலா ளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு ஆலோச னைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    கலிங்கப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த போது நான் ஒரு அரசியல் கட்சி தொடங்குவேன் என்றோ, இத்தனை ஆண்டு கள் இயக்குவேன் என்றோ கனவு கூட கண்டதில்லை. அண்ணா மீது கொண்ட பற்றின் காரணமாக உயிரை யும் கொடுக்க துணிந்துதான் தி.மு.க.வில் பணியாற்றி னேன். பிரிட்டிஷ் காலத்தை போல ஒரு கவர்னரை தமிழகத்திற்கு நியமித்து, திராவிட இயக்கங்களை அழித்துவிட முயற்சிக்கி றார்கள்.

    ம.தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது? என்று கேட்கிறார்கள். ஸ்டெல் லைட், நியூட்ரினோ வராமல் தடுத்தோம், முல்லை பெரி யாறு அணையை பாதுகாத் தோம், தஞ்சைக்கு மீத்தேன் வராமல் தடுத்தோம். இப் படி எவ்வளவோ செய்துள் ளோம். 10 ஆண்டுக ளுக்கு முன்னால் பா.ஜ.க. என்றால் யாருக்காவது தெரியுமா?

    ஆனால், தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என மோடி, அமித்ஷா கூறுகி றார்கள். அந்த தைரியம் எப்படி வந்தது? தமிழ் நாட்டை காக்க வேண்டும் என்றால், இந்துத்துவா, சனாதன சக்திகள் ஊடுருவ விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்து கொள்வோம்.

    விமர்சனங்கள் எவ்வ ளவோ வரலாம். அதைப் பற்றி கவலைப்பட வேண்டி யதில்லை. பா.ஜ.க.வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு திராவிட இயக்கங் களை பாதுகாக்க வேண்டும்.

    நான் இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டி ருக்கிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை, தாமிரபரணி முதல் சென்னை வரை என பல முறை நடைபயணம் செய்தி ருக்கிறேன். அன்று நடைபய ணம் செய்த போது ஊடக ஆதரவு கூட கிடையாது. எல்லா இடத்திற்கும் நடந்து தான் செல்வேன். மக்களு டன் மக்களாக இருப்பேன். சாலையோரங்களில் ஓய்வெ டுப்பேன். எங்கும் அறை போட்டு தங்கவில்லை. இதனை யாரையும் ஒப்பிடுவ தற்காக கூறவில்லை.

    ஆனால், இன்று நடை பயணம் மேற்கொள்ளும் சிலருக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக போராடி கொண்டிருக்கிறேன். ம.தி.மு.க. தியாகத்தால் உருவான கட்சி. தொண்டர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். மதுரை யில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில தொண்டரணி துணை செயலாளர் பச்சைமுத்து, தணிக்கை குழு உறுப்பினர் பாண்டியன், மதுரை மாநகர் தொண்டரணி துணை செயலாளர் சண்முகவேல், சிம்மக்கல் பகுதி செயலாளர் பாஸ்கர், 44-வது வார்டு திட்டகுழு உறுப்பினர் தமிழ்செல்வி, 100-வது வார்டு உறுப்பினர் முத்து லட்சுமி, சுருதிரமேஷ், அன்னமுகமது, பாஸ்கர சேதுபதி, சுப்பையா, பச்சமுத்து.சண்முகவேல் புகழ்முருகன், வக்கீல்நாக ராஜன், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க கல்வி பெரும் பங்கு வகிக்கிறது.
    • கல்லூரி விழாவில் அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் பவள விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார், மாங்குடி, செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைய மன்னர் மகேஷ்துரை குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விழா மலரினை வெளி யிட்டு அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது:-

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியானது, இந்தியா சுதந்திரம் பெற்ற போது தொடங்கப்பட்டது. தற்போது 3800 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கக் கூடிய மாணவர்கள் தற்போது போட்டிகள் நிறைந்த நவீன காலத்தில் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து, சிறப்பு மிக்கவர்களாக திகழ்ந்திட வேண்டும்.

    ஏற்றத்தாழ்வற்ற சமு தாயத்தை உருவாக்குவதற்கு கல்வி என்பது பெரும் பங்கு வகிக்கிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிட தொலைநோக்கு பார்வையுடன் முனாள் முதல்வர் கருணாநிதி திட்டங்களை செயல்படுத்தி னார். அதே வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

    அதில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, மாதம் ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணாக்கர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்ப தற்கு அவர்களுக்கு உறு துணையாக இருந்திடும் வகையில், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங் களை தமிழகத்தில் செயல் படுத்தி மாணாக்கர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையான திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    அது மட்டுமன்றி, குடிமைப் பணிகளுக்கு என்று அரசால் அறிவிக்கப் படும் தேர்வுகளில் நமது தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களின் விகிதத்தை அதிகப்படுத்துகின்ற வகையில் மாதம் ரூபாய் 7,500/- வழங்கும் திட்டத்தி னையும் அறிவித்துள்ளார்.

    மேலும்,நிதிநிலை அறிக்கையில் பள்ளி கல்விக்கென ரூ. 40 ஆயிரம் கோடியும், உயர் கல்விக்கென ரூ.7 ஆயிரம் கோடியும் என மொத்தம் ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், கல்விக்கென தமிழ்நாடு முதலமைச்சரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரை ஆனந்த், மதுரை மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) பொன்முத்து ராமலிங்கம், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, கல்லூரி துரை அரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
    • பா.ஜ.க. கூட்டணி எம்.பி. மதுரையில் வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலை பேசினார்

    மதுரை

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" பயணத்தை ராமேசுவரத்தில் தொடங்கி னார். ராமநாதபுரம், சிவ கங்கை மாவட்டங்களை தொடர்ந்து நேற்று மதுரை மாவட்டத்தில் அவர் பய ணத்தை மேற்கொண்டார்.

    இன்று காலை ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவில் பகுதியில் அண்ணாமலை நடை பயணத்தை தொடங்கி னார். ஒத்தக்கடை தேவர் சிலை அருகே நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஊழல் மிகுதியாக இருக்கிறது. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல தமிழகத்தில் நடைபெறும் மொத்த ஊழலுக்கு கிழக்கு தொகுதி சாட்சியாக இருக்கிறது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை செயல்பட்டிருந்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.

    மற்ற மாநிலங்களில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 22 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    ஆண்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை தருகிறோம் என்று கூறிய தி.மு.க. குரூப் 4 தேர்வு நடைபெற்று 13 மாதங்கள் ஆகியும் 2 ஆயிரம் பேருக்கு தான் வேலை கொடுத்தி ருக்கிறார்கள். மதுரை அரசு மருத்துவமனையில் 1300 நர்சுகளுக்கு பற்றாக்குறை உள்ளது. அதேபோல் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதிகளவில் பற்றாக்குறை உள்ளது.

    மதுரையில் நெசவா ளர்கள் அதிகமாக உள்ள னர். ஆனால் தி.மு.க. அரசு அவர்களுக்காக திட்டங்கள் எதுவும் கொண்டு வர வில்லை. ஆனால் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்து விருது நகரில் ஜவுளி பூங்கா திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இதனால் 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

    மதுரை எம்.பி. மோடியை பற்றி மட்டும் குறை கூறுகிறார். காவிரி நீர் குறித்து பேசவில்லை. கேரளாவில் இருந்து மருந்து கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து பேசவில்லை. எனவே மதுரை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி. வெற்றி பெற வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் தமிழகம், பாண்டிச் சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் ராஜசிம்மன், கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜன், கிழக்கு மண்டல் தலைவர் பூமிநாதன், ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பொதுச்செய லாளர்கள் மூவேந்திரன், கண்ணன், நிர்வாகிகள் கட்கம் ரவி, கல்வாரி தியாகராஜன், வெள்ளைச்சாமி, குறிஞ்சி அரவிந்த், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திர பாண்டியன், செல்வமாணிக்கம், வழக்கறிஞர் பிரிவு பிரபாகரன், நெசவாளர் பிரிவு கிருஷ்ணகுமார், சோலை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து நத்தம் ரோடு ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பொதுச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மதுரை மாநகர் பகுதியில் அண்ணாமலை பயணத்தை தொடங்கினார்.

    • 4171 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
    • 387 தன்னார்வலர்களை கொண்டு முதியோர் கல்வி 498 நபர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், இலவச பஸ் பயண அட்டை, விலையில்லா மிதிவண்டி என பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பள்ளிகளில் இருக்கக் கூடாது என்பதற்காக ஏராளமான திட்டங்கள் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தி வருகி றார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் 10,663 பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 387 தன்னார்வலர்களை கொண்டு முதியோர் கல்வி 498 நபர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் செப்டம்பர் 16, 2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 227 பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12, 208 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.மேலும் நீலகிரி 2022-2023-ம் கல்வியாண்டில் 1737 மாணவர்களுக்கு, 2434 மாணவிகளுக்கு என மொத்தம் 4171 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷீலாகேத்ரின், குன்னூர் நகர்மன்ற துணைத்தலைவர் வாசிம்ராஜா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷண குமார், குன்னூர் வட்டா ட்சியர் கனிகசுந்தரம், குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் மேரி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    • புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீட்டெடுப்போம் என்று அண்ணாமலை கூறி உள்ளார்
    • அறந்தாங்கியில் நடந்த பாதயாத்திரையில் அண்ணாமலை உறுதி

    அறந்தாங்கி, 

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த 28-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்கிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அறந்தாங்கி நகர் பகுதியை வந்தடைந்தார். திருமயத்தில் இருந்து வந்த மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள் ரோஜா பூ மாலை அணிவித்து பூர்ண குடும்ப மரியாதை செலுத்தி உற்சாகமாக வரவேற்றனர் அப்போது அவர் செல்வமகள் திட்டத்தின் கீழ் சுமார் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நகரின் பாஜக மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை பெற்றோர்களுக்கு வழங்கி உற்சாகப்படுத்தினார் அப்போது கூட்ட நெரிசல் காரணமாக கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் தள்ளி நிற்குமாறு அவர் கூறினார். பின்பு செக்போஸ்டில் இருந்து தொடங்கிய நடை பயணத்தை நகரின் முக்கிய விதிகளான வாகை மரம் பெரிய கடை வீதி கட்டுமாவடி முக்கம் காமராஜர் சிலை பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடை பயணம் முடிவுற்றது. அறந்தாங்கியில் அவர் பேசும்போது, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஒரு தனித்துவம் வாய்ந்தது என்றும், புதுக்கோட்டை மாவட்ட பாராளுமன்ற தொகுதியை கண்டிப்பாக மீட்டெடுக்கப்படும் என்று அவர் பேசினார். முன்னதாக அறந்தாங்கி செக் போஸ்ட் அருகே மாலை 4 மணி முதல் பெண்கள் மற்றும் செல்வமகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது .இதனிடையே அறந்தாங்கி நகர் பகுதிக்குள் வரும் பேருந்துகள் சுமார் 3-மணி நேரத்திற்கு மேலாக மாற்று பாதைகளில் அனுப்பபட்ட நிலையில் நிலையில் பள்ளி வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிகிச்சை தவித்தது. பாதுகாப்பு பணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • 143 அயல்நாட்டு நிறுவனங்கள், தற்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்து உள்ளன.
    • இதுவரை 1.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனா்.

    ஊட்டி,

    முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞா் திறன் திருவிழா நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தாா். வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கருணாகரன் வரவேற்றாா். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் வீரராகவராவ் திட்டம் குறித்து விளக்கினாா்.

    நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமசந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. எனவே அங்கு மாணவா்கள் சோ்க்கை 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால் உயா்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

    தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலீடு செய்ய வலியுறுத்தினார்.

    இதன் காரணமாக 143 அயல்நாட்டு நிறுவனங்கள், தற்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்து உள்ளன. இதன் மூலம் 4.10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    குன்னூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ உலக அளவில் தரம் உயா்த்தப்பட்டு உள்ளது. இங்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை மாணவா்கள் பயிலும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பல்வேறு புதிய கருவிகளும் கொண்டு வரப்பட்டு உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

    தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் பேசும்போது, முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 100 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதன்படி 2-வது மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு உள்ளன. இதன்மூலம் எண்ணற்ற இளைஞா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே நடத்தப்பட்ட பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம், இதுவரை 1.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனா் என்றார்.

    இதில் ஊட்டி எம்.எல்.ஏ கணேசன், குன்னூர் நகராட்சி துணைத் தலைவா் பி.எம்.வாஷிம் ராஜா, குன்னூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுனிதா, ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், திட்டக்குழு உறுப்பினா்கள் ஜாா்ஜ், நகரமன்ற உறுப்பினா் ராமசாமி, பொதுகுழு உறுப்பினர்கள் காளிதாஸ்.செல்வம், நகர துணை செயலாளர் வினோத்குமார் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணை மந்திரி எல். முருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.
    • சுற்று வட்டார கிராம தலைவா்கள் உள்பட பலர் பங்கேற்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பரலட்டி கிராமத்தில் நேதாஜி விளையாட்டு சங்கம் சாா்பில் கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.

    இதில் மத்திய கால்நடை, மீன்வளத் துறை இணை மந்திரி எல். முருகன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். அதன் பிறகு அவர் நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    மத்திய அரசு கேலோ இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தியதன் காரணமாக, மாவட்டம் மற்றும் கிராம அளவில் தலைசிறந்து விளங்கும் விளையாட்டு வீரா்கள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா். இந்தத் திட்டத்தால் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பரலட்டி கிராமத்தைச் சோ்ந்த கிஷோா் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று இந்த கிராமம், மாவட்டம், நாட்டுக்கு பெருமை சோ்த்து உள்ளாா். இதே போல பிட் இந்தியா திட்டம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் அறிமுகப்படுத்தியது. இது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பேணிகாத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவா் மோகன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராமன், பாபு மற்றும் தும்மனட்டி, பரலட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம தலைவா்கள் உள்பட பலர் பங்கேற்றனா். முன்னதாக மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு படுகா் சமுதாய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணை மந்திரி எல். முருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.

    • கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி என்றார்.

    மதுரை

    மதுரை புதுநத்தம் சாலை–யில் ரூ.216 கோடி மதிப்பீட் டீல் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல–கத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்துவைத் தார். அப்போது அவர் பேசி–யதாவது:-

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண் கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகா–தாரமும்தான். அதனால் தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவம–னையை சென்னை, சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத் தேன்.

    ஒரு மாதம் கழித்து ஜூலை 15 ஆம் நாளான இன்றைக்கு (நேற்று) கலை–ஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்தி–ருக்கின்றேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததை–யும் செய்வான் இந்த ஸ்டா–லின் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரை–யில் இந்த நூலகமும். இவை இரண்டும் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள்.

    தமிழ்நாட்டினுடைய தலைநகர் சென்னை என் றால், இந்த மதுரை, தமிழ் நாட்டினுடைய கலைநகர். தலைநகரில், தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணாவின் நூற்றாண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் தந்தார் கலை–ஞர்.

    இன்று அந்த தலைவர் கலைஞரின் நூற்றாண்டில், இந்தக் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறி–வாலயத்தை நான் அமைத் திருக்கிறேன். இந்த நூல–கத்தை திறந்து வைக்கக்கூடிய பெரும் வாய்ப்பும், பெருமை–யும் எனக்கு கிடைத்திருப் பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

    சங் கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் இயற்றிய மாமதுரை–யில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக் கும், குழந்தைகள் –மாண–வர்கள் போட்டித் தேர்வர் கள் – மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெ–றக்கூடிய வகையில் ஆறு தளங்கள் மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக் கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலை–வர் கலைஞரே சிலை வடி–வமாக இங்கே காட்சிய–ளித் துக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தான் என்பதை யாரும் மறந்திடக்கூடாது. அதற்கு திராவிட இயக்கமும், தி.மு.க.வும்தான் காரணம். உங்களைப் போலவே, பள்ளியில் படிக்கின்றபோது தமிழ்ப் பற்று இருந்த–தால்தான் எழுத்தாற்றல் பெற்று, போராட்டக் குணத்தின் காரணமாக மிகப்பெரிய தலைவரானார் கலைஞர்.

    பள்ளியில் நன்றாகப் படி என்று அண்ணா சொன்னா–லும், கலைஞர் படித்தது என்னவோ, அண்ணாவின் கொள்கைப் பள்ளியிலும், பெரியாரின் போராட்ட கல்லூரியிலும்தான். அன் றை அரசியல் சூழலும் கலை–ஞருக்குள்ளே இருந்த போராளியும், அவர் விரும் பிய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போன–தற்கு காரணம். ஆனால், கலைஞருக்குள்ளே இருந்த அந்தப் போராளிதான் இன்றைக்கு பலரும் படிக்க காரணம்.

    படிப்பை நாம் எல்லோ–ரும் அடையவேண்டும் என்ற தலைவர் கலை–ஞர் உருவாக்கியதுதான் இன் றைய நவீன தமிழ்நாடு. இன்றைக்கு தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்கின்ற பெரும் பாலானவை கலைஞரால் உருவாக்கப்பட்டவை. நவீன கலைஞரால் உருவாக்கப்பட் டது. ஒரு இனத்தின் வளர்ச் சிக்கு முதலில் தேவை கல்வி. அதை முத–லில் கொடுத்தது, திராவிட இயக் கத்தின் தாய்க்கட்சி–யான நீதிக்கட்சி. கல்விப் புரட் சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி.

    தரமான கல்வி வழங்கு–வதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முத–லிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொண்டு இருக்கி–றோம். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், 'எண்ணும் எழுத்தும்' இயக் கம், பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாண–வர்களின் பசியை போக்க 'முதலமைச் சரின் காலை உணவுத்திட்டம்' என பல்வேறு திட்டங்கள பள்ளிக்கல்வித் துறை சார் பில் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

    அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி படிக்க வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற "புது–மைப்பெண் திட்டம்". வரு–கிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்த–நாளில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப் போகிறோம்.

    தகுதியுடைய குடும்பத் தலை–விகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. உங்கள் குடும்பத்தில் உங்கள் அம்மாவே இதனை பெறு–வார்கள். இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப் பட இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    விழாவில் எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி நாடார், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன்,

    மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்து–ராமன், மேலக்குயில்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரபு, அவைத் தலை–வர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சோமசுந்தர–பாண்டியன், மாவட்ட பிரதி–நிதி அழகு பாண்டி, இளை–ஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசி–குமார், மருதுபாண்டி, ஒன்றிய சேர்மன் வீரரா–கவன், கிழக்கு மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, மாநகர் மாவட்ட இளை–ஞரணி அமைப்பாளர் சௌந்தர், 92-வது வார்டு கவுன்சிலர் கருப்புசாமி, அரசு வக்கீல் ஸ்ரீதர், நியாய விலை கடை தொழிலாளர் சங்க தனுஷ்கோடி, பால–முருகன், மதுரை மாநகர் மாவட்ட 52-வது வார்டு தி.மு.க. விஜி என்ற விஜயகுமார்,

    ஒன்றிய சேர்மன் வேட்டையன், மதுரை மாநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முத்துக்குமார், மதுரை மாநகர் மாவட்ட விளையாட் மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மணிகண் டன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராம பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பி–னர் வைகை பரமன், ஊராட்சி தலைவர்கள் கவிப்பிரியா கணபதி, ஆனந்த், சரண்யா ராஜவேல், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் கார்த்திக், அலங்காநல்லூர் பேரூ–ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, சோழவந் தான் பேரூராட்சி தலைவர் ஜெய–ராமன், துணைத்தலை–வர் லதா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை சட்டகல்லூரிக்கு வரவில்லை என்றால் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை.
    • இன்று நடந்த விழாவில் 1,034 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    வடவள்ளி,

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் கோவை அரசு சட்ட கல்லூரி சார்பில் கோவை சட்டக்கல்லூரியில், 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முதன்மை விருந்தினராக கோவை அரசு சட்ட கல்லூரி முன்னாள் மாணவரும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கு தழிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் துணை வேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு சட்ட கல்வி இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினார். கோவை அரசு சட்ட கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    இன்று நடந்த விழாவில் 1,034 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 700 பேர் நேரில் வந்து பெற்று கொண்டனர்.

    விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எஸ்.விஸ்வநாதன் பேசியதாவது:-

    கோவை சட்டகல்லூரிக்கு வரவில்லை என்றால் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. நான் இந்த நிலைமைக்கு வந்ததற்கு இந்த கல்லூரி தான் காரணம்.

    சட்ட பட்டம் வந்து விட்டது. அவ்வளவு தான் என்று எண்ண விட வேண்டாம். இப்போது தான் உங்களுக்கு வாழ்க்கையே ஆரம்பமாகிறது. வாழ்கையை எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். நான் உங்கள் முன் நீதிபதியாக இல்லாமல் நண்பராக இருந்து சொல்கிறேன்.

    நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பது நம் கையில் தான் உள்ளது. நேரத்தை வீணாக்காதீர்கள். நேரம் கிடைக்கும் போது எல்லாம் நல்ல புத்தகங்களை எடுத்து படியுங்கள். அது எப்போதாவது பயன்படும்.

    வக்கீல் தொழில் என்பது மிக கடினமான தொழில். அதில் ஊறிவிட்டால் நமக்கு அது ஒரு அமிர்தம் போன்றதாக காணப்படும். நீதிபதியிடம் உங்கள் தரப்பு வாதங்களை பனிவுடன் எடுத்து வையுங்கள். இளைய வக்கீல்களாகிய நீங்கள் வரும் காலங்களில் உங்களுக்கு என்று சில திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.

    நான் அரசு பஸ்சில் தான் நீதி மன்றத்திற்கு சென்றேன். உங்கள் மனதில் சரி என்று பட்டதை மறைத்து கொள்ளாமல் தைரியமாக வெளியில் பேசுங்கள். பொய் வழக்கு என்று தெரிந்தால் அதனை எடுத்து வாதிட வேண்டாம். வக்கீல் தொழிலில் வானம் கூட எல்லையாகாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும் போது, சட்டம், அரசு, நீதித்துறை என நாட்டின் 3 துறைகளோடு, 4-ம் துறையான பத்திரிகையும் சேர்ந்து செயல்பட்டால் நாடு சிறப்பாக செயல்படும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மிக எளிதாக கிடைக்ககூடிய படிப்பு சட்ட படிப்பு.

    கோவை கல்லூரியில் யானை பிரச்சனை இருப்பதாக கூறிய நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், சட்டபடிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு 95-க்கு கீழ் கட்டாப் மதிப்பெண் வைக்க கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.
    • பேச்சு போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.

    பேச்சுப்போட்டிக்கு முதுகலை தமிழாசிரியர்கள் கலைச்செல்வன், கருப்பு சாமி, பட்டதாரி ஆசிரியர் ஷீலாதேவி ஆகியோர் நடுவர்களாகவும், கட்டுரை போட்டிக்கு முதுகலை தமிழாசிரியர்கள் கந்தசாமி, யுவராணி, காயத்ரி தேவி ஆகியோர் நடுவர்களாகவும் பங்கேற்றனர்.

    இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ரெஜினா ள்மேரி ஒருங்கிணை ப்பாளராகச் செயல்பட்டார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சி.ஆகாஷ் முதல்பரிசு ரூ.10,000-ம், மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மாணவன் மைந்தன்குமார் 2-ம் பரிசு ரூ.7,000-ம், கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவி நித்யாஸ்ரீ 3-ம் பரிசு ரூ.5,000-ம் பெற்றனர்.

    பள்ளி மாணவ, மாணவி களுக்கான கட்டுரை போட்டியில் 91 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ர.விஷால் முதல்பரிசு ரூ.10,000-ம், சென்னிமலை, கொமரப்பா செங்குந்தர் மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா 2-ம் பரிசு ரூ.7,000-ம், பட்டிமணி யக்காரன் பாளையம் அரசு மாதிரிப்பள்ளி மாணவி லோ.ச.அம்பிகா 3-ம் பரிசு ரூ.5,000-ம் பெற்றுள்ளனர்.

    • முதல்வர் வரவேற்பில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள வேண்டும்.
    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர் மணிமாறன் பேசினார்.

    திருமங்கலம்

    மதுரையில் நாளை மறுநாள் (ஜூலை 15-ந் தேதி) பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை திறப்பு விழா நடைபெறு–கிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலகத் தினை திறந்து வைக்கிறார். மதுரை வரும் முதல்வரை வரவேற்பது தொடர்பாக திருமங்கலம் தி.மு.க. அலுவலகத்தில் நேற்று தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை–பெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-

    முதல்வர் வரவேற்பில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அதிகளவில் வந்து முதலிடத் தினை பிடிக்கவேண்டும். இன்னும் 30 ஆண்டுகள் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி–தான் நடைபெறும் அந்தள–விற்கு பல்வேறு நலத்திட்டங் களை முதல்வர் செய்து வருகிறார். கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் சால்வை, வேட்டி, பொன்னாடையை கட்சியினர் தவிர்த்து முத–ல் வருக்கு புத்தங்களை தர–வேண்டும்.

    நாம் தரும் புத்தகங்கள் நூலகத்தில் இடம் பிடித்து பொதுமக்களுக்கு பயன் தரும். மேலும் முதல்வர் வரவேற்பில் 50 ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் திரண்டு வரவேற்பு அளிக்க–வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    இந்த கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகையை அறி–வித்துள்ள தமிழக முதல் வருக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை–வேற்றப்பட்டது.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங் கம், துணை செயலாளர் லதா அதியமான், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, தங்கபாண்டி, ஆலம்பட்டி சண்முகம், ராமமூர்த்தி, மதன்குமார், நகர செயலா–ளர்கள் ஸ்ரீதர், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா–முத்துக்குமார், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், திருமங்கலம் நகர துணை–செயலாளர் செல்வம், பொருளாளர் சின்னசாமி நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் இருக்க வேண்டும்.
    • கல்லூரி விழாவில் டி.எஸ்.பி. பொன்னுசாமி பேசினார்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை தாங்கினார். ஒருங் கிணைப்பாளர் பிரதீபா சிறப்பு விருந்தினரை அறிமு–கப்படுத்திப் பேசினார். விழாவில் மதுரை கோட்ட ரெயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிகம் பங்கேற்று அரசு பணிகளில் சேர தங்களை தயார் செய்து–கொள்ள வேண்டும். மாண–வர்களுக்கு அரசியல் ஆர் வம் இருக்க வேண்டும். மாணவர்களிடமிருந்து தான் நல்ல தலைவர்கள் உருவாக முடியும் என பேசினார்.

    அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோணிசாமி ஆகியோர் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மாணவப் பிரதிநிதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த–னர். இணை முதல்வர் சுந்த–ரராஜ் வாழ்த்திப் பேசினார்.

    விழாவிற்கான ஏற்பாடு–களை மாணவர்களுக்கான கல்விப்புலத் தலைவர் நிர்மல் ராஜ்குமார் ஏற்பாடு–களை செய்திருந்தார். மாணவி பிரதிநிதி மோனிகா இந்திரா நன்றி கூறினார்

    ×