search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீட்டெடுப்போம் - அண்ணாமலை
    X

    புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீட்டெடுப்போம் - அண்ணாமலை

    • புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீட்டெடுப்போம் என்று அண்ணாமலை கூறி உள்ளார்
    • அறந்தாங்கியில் நடந்த பாதயாத்திரையில் அண்ணாமலை உறுதி

    அறந்தாங்கி,

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த 28-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்கிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அறந்தாங்கி நகர் பகுதியை வந்தடைந்தார். திருமயத்தில் இருந்து வந்த மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள் ரோஜா பூ மாலை அணிவித்து பூர்ண குடும்ப மரியாதை செலுத்தி உற்சாகமாக வரவேற்றனர் அப்போது அவர் செல்வமகள் திட்டத்தின் கீழ் சுமார் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நகரின் பாஜக மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை பெற்றோர்களுக்கு வழங்கி உற்சாகப்படுத்தினார் அப்போது கூட்ட நெரிசல் காரணமாக கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் தள்ளி நிற்குமாறு அவர் கூறினார். பின்பு செக்போஸ்டில் இருந்து தொடங்கிய நடை பயணத்தை நகரின் முக்கிய விதிகளான வாகை மரம் பெரிய கடை வீதி கட்டுமாவடி முக்கம் காமராஜர் சிலை பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடை பயணம் முடிவுற்றது. அறந்தாங்கியில் அவர் பேசும்போது, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஒரு தனித்துவம் வாய்ந்தது என்றும், புதுக்கோட்டை மாவட்ட பாராளுமன்ற தொகுதியை கண்டிப்பாக மீட்டெடுக்கப்படும் என்று அவர் பேசினார். முன்னதாக அறந்தாங்கி செக் போஸ்ட் அருகே மாலை 4 மணி முதல் பெண்கள் மற்றும் செல்வமகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது .இதனிடையே அறந்தாங்கி நகர் பகுதிக்குள் வரும் பேருந்துகள் சுமார் 3-மணி நேரத்திற்கு மேலாக மாற்று பாதைகளில் அனுப்பபட்ட நிலையில் நிலையில் பள்ளி வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிகிச்சை தவித்தது. பாதுகாப்பு பணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×