search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சு"

    • சந்திராயன் நிலவின் தென் பகுதியில் இறக்கி சாதனை செய்து இருக்கின்றனர். வேறுநாடுகள் யாரும் இதை செய்ய வில்லை.
    • தென்னை நார் உற்பத்தி ஏற்றுமதியை வருடத்திற்கு 5 ஆயிரம் டன் என்பதை 10 ஆயிரம் டன் என்ற அளவிற்கு உயர்த்த வேண்டும்

    கோவை,

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கோவையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    கோவை மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு பாரதி காலனியில் நடந்த தூய்மை பாரத நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் தூய்மை பணியில் ஈடுபட்டார். அங்கு தூய்மை பணியாளர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல் நிலைப்பள்ளிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் சென்றார். அவருக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சந்திராயன் 3 மாதிரியை மாணவிகளிடம் அவர் வழங்கினார்.

    மாணவர்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    சந்திராயன் 3-ஐ சிலர் குறை கூறலாம். ஆனால் இது மிகப்பெரிய சாதனை. சந்திராயன் நிலவின் தென் பகுதியில் இறக்கி சாதனை செய்து இருக்கின்றனர். வேறுநாடுகள் யாரும் இதை செய்ய வில்லை.

    பிரஞ்யான் அங்கு என்ன இருக்கின்றது என்பதை நமக்கு தெரிவித்து வருகின்றது. அங்கு இருக்கும் கெமிக்கல் என்ன என்பதை ஆராய்ந்து வருகின்றது. 2047-ம் ஆண்டு இந்தியா முன்னேறிய நாடாக இருக்க வேண்டும். இதில் அனைவரின் பங்களிப்பு இருக்க வேண்டும். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கோவை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கிரெடிட் அவுட்ரீச் என்ற நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் இன்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டம், யோஜனா திட்டம், ஜன்தன் யோஜனா திட்டம், பயிர் காப்பீடு திட்டம், சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.3,749 கோடி கடன்களை பயனாளி களுக்கு காசோலைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கடந்த முறை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பின ர்கள் தென்னை சார்ந்த தொழில் புரியும் விவசாயிக ளுக்காக பல்வேறு கோரி க்கைகளை வைத்திருந்திரு ந்தனர். அதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசு பல்வேறு வங்கிகள் மூலமாக 1400 தென்னை சார்ந்த விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் கடன் வழங்கப்பட்டது என்றார்.

    இதனை தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:-

    கடந்த முறை நான் டெல்லி செல்லும் போது தென்னைச் சார்ந்த தொழில் புரியும் விவசாயிகளையும் உடன் அழைத்துச் சென்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் தற்போது கடன் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும்தேங்காய் எண்ணை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். எல்லோரும் நினைப்பது போல் தென்னை விவசாயம் கேரளா வில் அதிகமாக இருப்ப தாக நினைக்கி ன்றார்கள்.

    ஆனால் உண்மையில் தமிழகத்தில் தான் தென்னை விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. குறிப்பாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை சார்ந்த தொழில் அதிகம் நடைபெற்று வருகிறது. மேலும் தென்னை நார் உற்பத்தி ஏற்றுமதியை வருடத்திற்கு 5 ஆயிரம் டன் என்பதை 10 ஆயிரம் டன் என்ற அளவிற்கு உயர்த்த வேண்டும். தென்னை சார்ந்த தொழிலில் படித்து முடித்து வங்கி கடன் பெற்று பல இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க கொப்பரைக்கு குறைந்த அளவு கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே. செல்வராஜ், அமுல் கந்தசாமி , கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மத்திய அரசு செயலாளர் ஜோஷி மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொ ண்டனர்.இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் உள்ள மத்திய அரசின் ராணுவ தளவாட ஆராய்ச்சி மையத்தை மந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் தார்ப்பாலின் மண்புழு உர படுக்கை செடி தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.
    • கோரிக்கை மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

     அரவேணு,

    காந்தி ஜெயந்தி நாளான நேற்று கோத்தகிரியில் உள்ள 11 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. நடுஹட்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அருணா முதல் முறையாக பங்கு பெற்ற கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரனும் பங்கு பெற்றார்.

    அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மகளிரின் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    பெண்களின் உயர்கல்வியை உறுதிப்படுத்த அரசு கொண்டு வந்த முன்மாதிரி திட்டங்களில் புதுமைப்பெண் திட்டமும் ஒன்றாகும். மேலும் நான் முதல்வன் முலம் மாணவ-மாணவிகளுக்கு எதிர்கால கல்வி குறித்து சிறப்பான ஆலோசனை வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை சார்பில் 5 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு மருத்துவ புத்தகங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் தார்ப்பாலின் மண்புழு உர படுக்கை செடி தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.

    பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

    மேலும் பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளை அமைச்சர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டனர் முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராம சபை குறித்து பேசும் காணொலி காட்சியை அனைத்து மக்கள் முன்னிலையில் பார்வையிட்டனர். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் அதன் தலைவர் சுமதி சுரேஷ் தலைமையிலும், கொனகவக்கரை ஊராட்சியில் ஜெயப்பிரியா தலைமையிலும், நெடுங்குளா ஊராட்சியில் சுகுணா சிவா தலைமையிலும், குஞ்சப்பனை ஊராட்சியில் விமான வேல் மணிகண்டன் தலைமையிலும், கோடநாடு ஊராட்சியில் சுப்பிகாரி தலைமையிலும், தேனாடு ஊராட்சியில ஆல்வின் தலைமையிலும், அரக்கோடு ஊராட்சி ஷீலா தேவி, தெங்குமரடா ஊராட்சியில் அதன் தலைவர் மனோகரன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. 

    • நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தமான சின்னம் இல்லை என்று தகவல்
    • அ.தி.மு.க.வின் தற்போதைய சின்னமும் வரும் தேர்தலில் இருக்குமா, இருக்காதா என்று கேள்வி

    குன்னூர்,

    குன்னூர் வி.பி.தெரு, கலைஞர் திடலில் நகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. குன்னூர் நகர தி.மு.க செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமை தாங்கினார் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர் கான் வரவேற்றார். நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா. முபாரக் முன்னிலை வகித்தார்.

    பொதுக்கூட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தமான சின்னம் இல்லை என்பது வரலாறு. கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தி.மு.க ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 75 ஆண்டுகளாக பவள விழா காணும் வகையில், தி.மு.க கட்சி ஒரே சின்னத்தில் இன்று வரை உதயசூரியன் சின்னத்தில் மட்டும் போட்டியிட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி கூட முன்பு ரெட்டைகாளை பசுக்கன்று, கை ராட்டையில் போட்டியிட்டது. தற்போது கை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேபோல அ.தி.மு.க.வும் பல சின்னங்கள் மாறி உள்ளது.

    இரட்டைப்புறா, சேவல் மற்றும் ஜெயலலிதா இறந்தவுடன் குக்கர் மற்றும் பல்வேறு பிரிவாக அந்த கட்சியின் சின்னங்கள் மாறி உள்ளன. ஆனால் 75 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்துடன் போட்டியிடும் நாட்டின் ஒரே கட்சி தி.மு.க மட்டும் தான். அன்று முதல் இன்று வரை ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறோம். அ.தி.மு.க.வின் தற்போதைய சின்னமும் வரும் தேர்தலில் இருக்குமா, இருக்காதா என்று தெரியவில்லை. ஆகையால் எந்தக் கட்சிக்கும் இல்லாத ஒரு நிலைப்பாடு தி.மு.க.வுக்கு மட்டும் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ரவி, மாநில விளையாட்டு மேம்பாட்டுதுறை துணை செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணைத்தலை வருமான வாசிம்ராஜா. குன்னூர் நகரமன்ற தலை வர் ஷீலா கேத்தரின், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துதுறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை காலத்தை எதிர் கொள்ள தயார்நிலை யில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கடலோரப்பகுதிகளில் மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் பாதிக்கப்படும் நபர்களை மீட்க தேவையான மீட்பு உபகரணங்களை தயார்நிலையில் வைக்க மீன்வளத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்டறிந்து உடன் நட வடிக்கை எடுக்கவும், மேலும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும் பொது சுகாதாரத்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தான நெடுஞ்சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நிற்கும் மரங்களை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அகற்றப்பட்டதை உறுதி செய்ய அனைத்து தாசில் தார்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜே.சி.பி., மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டது. பழுதான நிலையில் உள்ள அபாயகர மான கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த சம்மந்தப் பட்ட அலுவலருக்கு அறிவு றுத்தப்பட்டது. 15 தினங்களுக்கு ஒருமுறை ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய வற்றில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை குளோரினேசன் செய்ய அதிகாரிகளுக்கு அறி வுறுத்தட்டது.

    மரங்கள் மற்றும் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது தொட்ட நிலையில் காணப்பட்டால் மின்சார வாரியம் மூலம் மரம் மற்றும் மரக்கிளைகளை வெட்டி அகற்றவும், மின்பழுது தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் 9498794987 என்ற தொலைபேசி எண் செயல்பட்டு வருவதை பொதுமக்களுக்கு தெரிவிக்க மின்சாரவாரிய அலுவ லருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் வீடு மற்றும் அலுவலகங்களின் மேல் பகுதியில் குப்பைகள் மற்றும் மரத்தின் இலைகள் காணப் பட்டால் அவற்றை அப்புறப் படுத்தி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு மழைக் காலங்களில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பருக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிளாஸ்டிக் பாட்டில், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் இவற்றில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல், சளி இது போன்ற அறிகுறிகள் தென் பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதனை மேற் கொள்ளுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. கால்நடை களுக்கு நோய்தொற்று ஏற்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகவும் மற்றும் கால்நடைகள் இறந்தால் அவற்றை உட னடியாக அப்புறப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மழை வெள்ள பாதிப்பு சேதங்கள் தொடர் பான 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட கட்டுப் பாட்டு அறை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

    பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆறு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை மேற்படி பகுதிகளுக்கு அழைத்துச்செல்லாமல் தற்காத்துக்கொள்ளவும், தன்னார்வலர்கள் தங்கள் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியம், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாரா யணன், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) ஜோதிபாசு, தோட்டக்லைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • இந்திய பிரதமர் யார் என்பதை அ.தி.மு.க. தான் தீர்மானிக்கும்.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதி சார்பில் காளை யார்கோவிலில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசிய தாவது:-

    நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அதை நிறைவேற்ற வில்லை. ஆனால் எடப்பாடியாரின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் வருடத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் 600 பேர் மருத்துவர்களாகி வருகின்றனர்.

    உண்மையான சமூக நீதி அரசாக அ.தி.மு.க. அரசு இருந்தது. வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளைக் கைப்பற்றி இந்திய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பா டியாரின் தலைமையில் ஆட்சி அமைய ஒற்றுமை யுடன் பணியாற்ற வேண்டும்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசுகையில். தமிழக அரசியல் களத்தை மிகப்பெரிய செல்வந்தர்கள் ஜமீன்தார்களிடமிருந்து மீட்டு சாமானியர்களிடம் கொண்டு சென்றவர் அண்ணா என்றார்.

    கூட்டத்தில் ஒன்றிய யெலாளர் பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் அருள் ஸ்டீபன், செந்தில் குமார், கருணாகரன், கோபி, சிவசிவஸ்ரீதர், சோனைரவி, செல்வமணி, மகளிரணி செயலாளர் ஜாக்குலின், கலைபிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மகூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ், மகளிரணி நிர்வாகி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், துணை செயலாளர் சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சங்கர்ராமநாதன், குழந்தை உள்பட கலந்து கொண்டனர்.

    • வங்கி மோசடி, குறுஞ்செய்தி குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன் னிலை வகித்தனர். நிகழ்ச்சி யில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை அட்டையை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 3 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் மொத்தம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 71 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப் பங்கள் அனைத்தும், அரசி டம் உள்ள பல்வேறு தகவல் தரவுத் தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிகளைப் பூர்த்தி செய்த மகளிர் பய னாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.

    அரசாணையில் குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப் பங்களில் முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு செப்டம்பர் 18 முதல் அனுப்பப்படும்.

    இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதார்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சி யருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

    தற்போது தொலைபேசி வாயிலாக போலியான நபர்கள் தங்களின் வங்கி கணக்கு தொடர்பாகவும், ஓ.டி.பி. குறுஞ்செய்தி குறித்தும் பொது மக்களி டையே கேட்கப்பட்டு மோசடி நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தாங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவிலேயே முதல் முறையாக உழைக்கும் பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
    • அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கல்குறிச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைைம வகித்தார். சீனிவாசன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல்கட்டமாக அருப்புக்கோட்டை, கல்குறிச்சியில் மொத்தம் 2050 பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான பற்று அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது.

    மகளிர் இலவச பஸ், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்ப டுத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு என்றும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,

    குடும்பத்தை உயர்த்து வதற்கும், குழந்தைகள், கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்காகவும் உழைக்கும் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் முதலாக அங்கீகாரம் கொடுத்தது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றார்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விவாத பொருளாகவே நீடிக்கும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • ஆய்வின் போது வட்டார நிர்வாகிகள் முத்துமாரி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் ஜி-20 மாநாடு நடந்து வருகிறது. 2 நாடுகளின் தலைவர்கள் வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவுக்கு குடியரசு தலைவர் அளித்த விருந்திற்கு அழைப்பு வராதது வருத்தமளிக்கிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை. விவாத பொருளாகவே நீடிக்கும். இதற்கான சட்ட திருத்தத்தை நிறைவேற்ற பாராளு மன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை உள்ளதால் அது கனவாகவே நீடிக்கும்.

    வெவ்வேறு கொள்கை களை கொண்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்திருப்பது மத்தியில் பா.ஜ.க. அரசை அகற்றுவதற்காகதான். ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது.

    அரசியலமைப்புச் சட்டத்திலேயே இந்தியா, பாரதம் என்று குறிப்பி டப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை கேட்டவுடன் பாரதம் என்று பேச ஆரம்பித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் பால கிருஷ்ண சாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், மீனாட்சி சுந்தரம், சிவஞான புரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளி ட்டோர் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ரங்கபாளையம், லட்சுமி நாராயணபுரம், கம்மாபட்டி, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகளையும் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது வட்டார நிர்வாகிகள் முத்துமாரி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நிறுவனமாக இணைந்து செயல்பட்டால் விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
    • விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:

    நாம் கடையில் சென்று வாங்கக்கூடிய எந்த ஒரு பொருளுக்கும், குறிப்பாக உணவு பொருட்களில், அதன் மிக பெரிய முதலீடை செய்பவர்கள், அதை விளைவிக்கக் கூடிய உற்பத்தியாளர்களான விவசாயிகள். ஆனால் அந்த விலையில் விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு கூட செல்வதில்லை.

    பொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலமாக கிடைக்கக்கூடிய லாபத்தை விவசாயி களுக்கும், உற்பத்தியா ளர்களுக்கும் அதில் இருக்கக்கூடிய தொழிலா ளர்களுக்கும் தர முடியுமா என்று தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக பல முயற்சிகள் செய்து, அதில் முக்கிய முயற்சியாக விவ சாயிகள், உற்பத்தியா ளர்கள் இணைந்து ஒரு நிறுவனமாக செயல்ப டும்போது, லாபத்தை விவசாயிகளும் உற்பத்தி யாளர்களும் பெற முடியும்.

    ஒரு பொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும்போது அதிக லாபத்தை பெற முடியும். அதனை தனி நபரால் செய்ய முடியாது என்பதால் உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து, செய்வதன் மூலமாக மிகப்பெரிய லாபத்தை ஈட்ட முடியும்.உணவு தயாரிப்ப வர்களிடமிருந்து வீட்டிற்கே உணவுகளை பெற்று உண்ணும் பழக்கம் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. இதில் மிகப்பெரிய சந்தை வாய்ப்புகள் இருக்கின்றன என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்தி பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து சந்தைப்படுத்தி அதிக லாபம் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண் வணிகத்துறை இணை இயக்குநர் பத்மாவதி, மகளிர் திட்ட இயக்குநர் பேச்சியம்மாள், வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் ரமேஷ், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், டிஜிட்டல் சேவை உள்ளிட்ட துறைகள் வாரியாக ஆய்வு
    • சாலை விபத்தில் இறந்த 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் தணிக்கை துறை சார்ந்த ஆய்வுக்குழு கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. மாநகராட்சி மேயர் கல்பனா, கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தனர்.

    சட்டசபை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் சவுந்திரபாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் அப்துல்ச மது, உடுமலை ராதாகிருஷ் ணன், கிரி, கோவிந்தசாமி, செந்தில்குமார், பிரகாஷ் மற்றும் சட்டசபை இணை செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது தணிக்கைக்குழு அறிக்கை தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சட்டசபை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் சவுந்திர பாண்டியன் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதா வது:-

    தமிழக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிகள் வழங்கிய அறிக்கை விவ ரங்கள் தொடர்பாக மாவட்ட அளவில் ஆய்வு நடத்தி வருகிறோம். இதன் ஒருபகுதியாக கோவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவை உள்ளிட்ட துறைகள் வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.

    அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். இதனை நாங்கள் தமிழக முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து 6 பேருக்கு நத்தம் நிலங்களில் ஆதிதிராவிடர் திட்டத்தின்கீழ் வீட்டுமனை இணையவழி பட்டா, சாலை விபத்தில் இறந்த 10 பேர் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியின்கீழ் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, தாட்கோ சார்பில் 5 பேருக்கு ரூ.19.10 லட்சம் மதிப்பில் லோடு ஆட்டோ மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கான கடனுதவிகளை வழங்கினார்.

    • சிறந்த கூட்டுறவுத்துறை கட்டமைப்பை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
    • மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

    விருதுநகர்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விருதுநகரில் கூட்டுறவுத்துறை மூலம் கடன் மேளா நிகழ்ச்சி நடந்தது. சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 1612 பயனாளிகளுக்கு ரூ.10.17 கோடி மதிப்பிலான கடன் அனுமதி ஆணைகளை வழங்கினார்.

    இதில் அமைச்சர் பேசிய தாவது:-

    கூட்டுறவுத்துறை என்பது துறையாக மட்டுமல்லாமல், இது ஒரு இயக்கமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவினுடைய வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது கூட்டுறவு இயக்கம் ஆகும். கூட்டுறவு துறையினுடைய வெற்றிக்கு பின்னால் அரசின் பங்க ளிப்பு மட்டுமல்ல பொது மக்களுடைய பங்களிப்பும் இருந்து வருகிறது.

    ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கக்கூடியவர்கள் அந்த கிராமத்தை வேளாண்மை மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்றால் கூட்டுறவு அமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் மிகச்சிறந்த ஒரு கூட்டுறவு துறை கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்றால் அது மிகையாகாது.

    இந்தியாவிலேயே கூட்டுறவுத்துறையில் மிகச் சிறந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மத்திய கூட்டுறவு வங்கி ஒரு லாபம் ஈட்டக்கூடிய வங்கியாக இருந்து வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக யார்யாரெல்லாம் பயன் பெறுகிறார்கள் என்றால், மகளிர்சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு வணிகர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர், மத்திய கால கடன், முத்ரா கடன், பண்ணை சாரா கடன், சம்பள கடன், வீட்டு வசதி கடன், முதலீட்டுக் கடன், குறு சிறு நடுத்தர தொழில் கடன் என சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் வழங்கப் படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் இணைப் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி, மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், பொது மேலாளர் சங்கர நாராயணன் உள்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை சம்ஹாரம் செய்யும் அவதாரம் எடுத்துள்ளார்.
    • மதுரை மாநாட்டில் செல்லூர் ராஜூ பேசினார்.

    மதுரை

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு அ.தி.மு.க. பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல லட்சம் தொண்டர்கள் திரண்டனர். மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் என்று நம் புரட்சித் தலைவர் பாடினார் அதுபோல அவர் கழகத் தொண்டர் களை தனது உயிராக நினைத்தார்.

    அவரது புகழும் நிலைத்து வருகிறது. அவரது வழியில் புரட்சித்தலைவி அம்மா ஒன்றரை கோடி தொண்டர் களையும் தனது வாரிசாக நினைத்து செயல்பட்டு கழகத்தையும் ஆட்சியையும் சிறப்பாக நடத்தினார். புரட்சித்தலைவி அம்மா வழியில் பொதுசெயலாளர் எடப்பாடியார் இப்போது தமிழக மக்களின் முதல்வராக, வருங்கால முதல்வராக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

    ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கமின்றி தவித்து வருகிறார். மதுரை மாநாட்டை பார்த்த பிறகு இனி அவருக்கு தூக்கமே வராது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு இந்த மண்ணாகும் இந்த மண்ணில் இருந்து வெற்றி வாகை சூடிட எடப்பாடி யாருக்கு வைரவேல் கொடுத்துள்ளோம்.

    அந்த வேல் எதற்காக கொடுத்தோம் என்றால் தி.மு.க. ஆட்சியை சம்ஹாரம் பண்ண போகிற ஆறுச் சாமியாக அவதாரம் எடுத்துள்ளார் நமது எடப்பாடி பழனிசாமி. மதுரை மீனாட்சி பட்டி னத்திற்கு பல பெருமை உண்டு. இது ராசியான மண் கடந்த 1973-ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருப்பரங்குன் றத்திற்கு வந்தார். அவர் வந்த ரெயில் 10 மணி நேரம் தாமதமானது.

    மகாத்மா காந்தி கூட மதுரை வரும்போது 6 மணி நேரம் தான் தாமதம் ஏற்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு மதுரையில் புரட்சித்தலைவி அம்மா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க.வை சுமார் 10 ஆண்டு காலம் வனவாசம் செல்ல வைத்தது. இன்றைக்கு மதுரையில் எடப்பாடி பழனிசாமி வீர உரை யாற்றியுள்ளார்.

    எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. வருகிற 2024 தேர்தலில் நமது எடப்பாடியார் சுட்டிக்காட்டுகின்ற வேட்பாளர் தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது உறுதி. அதை ஒவ்வொரு தொண்டனும் லட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். விரைவில் தமிழகத்தில் எடப்பாடியார் சிறப்பான ஆட்சியை கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர். அதற்கு மீனாட்சி பட்டணமே சாட்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×