search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவுத்துறை"

    • சம்பளக்கடனை பொறுத்தமட்டில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
    • கடனை திரும்ப செலுத்துவதை பொறுத்தமட்டில் ஏற்கனவே இருந்து வந்த காலவரம்பான 350 நாட்கள் என்பதில் மாற்றம் இல்லை.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களையும் உயர்த்தி வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது.

    அதன்படி, நகைக்கடன் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.30 லட்சம் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேவேளையில் ஓராண்டுக்குள் இந்த கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற காலவரம்பில் மாற்றம் இல்லை. சம்பளக்கடனை பொறுத்தமட்டில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

    இந்த கடனை பொறுத்தமட்டில் 84 மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்ற காலவரம்பு 120 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோன்று சிறு வணிக கடனாக ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த கடன் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கடனை திரும்ப செலுத்துவதை பொறுத்தமட்டில் ஏற்கனவே இருந்து வந்த காலவரம்பான 350 நாட்கள் என்பதில் மாற்றம் இல்லை.

    ரூ.50 ஆயிரம் வரையிலான தனிநபர் கடனுக்கு ஒரு நபர் ஜாமீன் உத்தரவாதமும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான தனிநபர் கடனுக்கு 2 பேர் ஜாமீன் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என்றும், ஜாமீன் உத்தரவாதம் வழங்கும் நபர்கள் அரசு அல்லது தனியார் துறையில் சம்பளம் பெறும் பணியாளராகவும், பான் கார்டு உள்ளிட்ட இதர ஆவணங்களை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    • சிறந்த கூட்டுறவுத்துறை கட்டமைப்பை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
    • மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

    விருதுநகர்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விருதுநகரில் கூட்டுறவுத்துறை மூலம் கடன் மேளா நிகழ்ச்சி நடந்தது. சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 1612 பயனாளிகளுக்கு ரூ.10.17 கோடி மதிப்பிலான கடன் அனுமதி ஆணைகளை வழங்கினார்.

    இதில் அமைச்சர் பேசிய தாவது:-

    கூட்டுறவுத்துறை என்பது துறையாக மட்டுமல்லாமல், இது ஒரு இயக்கமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவினுடைய வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது கூட்டுறவு இயக்கம் ஆகும். கூட்டுறவு துறையினுடைய வெற்றிக்கு பின்னால் அரசின் பங்க ளிப்பு மட்டுமல்ல பொது மக்களுடைய பங்களிப்பும் இருந்து வருகிறது.

    ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கக்கூடியவர்கள் அந்த கிராமத்தை வேளாண்மை மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்றால் கூட்டுறவு அமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் மிகச்சிறந்த ஒரு கூட்டுறவு துறை கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்றால் அது மிகையாகாது.

    இந்தியாவிலேயே கூட்டுறவுத்துறையில் மிகச் சிறந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மத்திய கூட்டுறவு வங்கி ஒரு லாபம் ஈட்டக்கூடிய வங்கியாக இருந்து வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக யார்யாரெல்லாம் பயன் பெறுகிறார்கள் என்றால், மகளிர்சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு வணிகர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர், மத்திய கால கடன், முத்ரா கடன், பண்ணை சாரா கடன், சம்பள கடன், வீட்டு வசதி கடன், முதலீட்டுக் கடன், குறு சிறு நடுத்தர தொழில் கடன் என சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் வழங்கப் படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் இணைப் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி, மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், பொது மேலாளர் சங்கர நாராயணன் உள்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் நாளை (23-ந்தேதி) கூட்டுறவுத்துறை சார்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நாளை மாவட்ட கலெக்டர் தலைமையில் கொட்டாம்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதால், கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு, அன்று மாலை 3 மணியளவில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • விவசாயிகளின் நலன் கருதி அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் கோட்டம் கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் அலுவலகத்தின்கீழ் 34 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. நாகர்கோவில் சரக கள மேலாளர் ஜனவரி 31-ந்தேதி ஓய்வு பெற்றார். இந்நிலையில் 34 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயி கள் குழுக்கடன்கள், தனி நபர் கடன்களுக்காக விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    தற்போது தீர்மானத்திற்கு வைக்கப்பட்ட நிலை யில் கடனுதவிகளை வழங்கு வதற்கு அங்கீகரிக்கும் மேலாளர் பணியிடம் நிரப்பப்படாததால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.5 கோடி வரையிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கக்கூடிய இப்பணம் தேக்கத்திலும், விவசாயிகள் பயன் பெற முடியாத நிலை யிலும் உள்ளது.

    இதனால் தனிநபர் கடன், குழுக்கடன் வேண்டி விண்ணப்பித்த விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். எந்த நோக்கத்திற்காக, விவசாயிகள் விண்ணப் பித்தார்களோ அந்த விவசாய கடனுதவிகளை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    விவசாயிகளின் நலன் கருதி, அரசு உரிய நடவடிக்கை எடுத்து கள மேலாளர் பணி இடத்தை காலம் தாழ்த்தாமல் உடனடி யாக நிரப்பவேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • உறுப்பினர்களுக்கு மட்டும் பொறுப்பாக்கப்பட்ட அமைப்பாகும்.
    • கூட்டுறவு சங்கம், பதிவு எண் டி.எண். 20-0001095 என்ற பெயரில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியி–ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் என்பது முற்றிலும் தன்னாட்சி அதிகாரம் பெற்று, அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் பொறுப்பாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த வகை சங்கங்கள் மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின், மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் நிர்வாக கட்டுப்பாட்டிலோ அல்லது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் நிர்வாக கட்டுப்பாட்டிலோ செயல்படுவது அல்ல.

    எனவே பொதுமக்களும், முதலீடுதாரர்களும் மேற்படி சங்கங்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு வைப்புத்தொகையை முதலீடு செய்வது தொட–ர்பான முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் நிதி இழப்பிற்கு கூட்டுறவு அமைச்சகத்தின் மத்திய பதிவாளரோ அல்லது மாநில பதிவாளரோ இந்த வைப்பீடுகளுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. எனவே இவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய நிரந்தர பணியாளர்கள் தேவை என http:www.olx.in என்ற வலைதள முகவரியில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய நிரந்தர பணியாளர்கள் தேவை என்றும், மாத சம்பளமாக ரூ.13 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுவதாகவும், சேலம், பவானி, பெருந்துறை, அவினாசி, திருப்பூர், நாமக்கல் ஆகிய இடங்களில் பணியிடங்கள் உள்ளதாகவும், வயது 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் எனவும், தொடர்புக்கு 82203-03402, 95970-49997 ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்ட நெசவாளர்கள் மற்றும் டெக்ஸ்டைல் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பதிவு எண் டி.எண். 20-0001095 என்ற பெயரில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த போது, இப்படி ஒரு சங்கம் கூட்டுறவுத்துறையின் கீழோ அல்லது கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழோ பதிவு செய்யப்படவில்லை என தெரியவருகிறது. 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1988-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தப்பட்ட விதிகளின்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு, முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    மேலும், தற்போது வாட்ஸ் அப், இணையதளம், குறுஞ்செய்தி மற்றும் இதர மின்னணு ஊடகங்கள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்கப்படுவதாகவும், இதற்கு முன்பணம் செலுத்தி பயிற்சி பெற்றால் நிரந்த பணி வழங்கப்படும என போலியான விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் மட்டுமே பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு உரிய முறையில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு, பணி வழங்கப்பட்டு வருகிறது. எனவே வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில், சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் போலி விளம்பரங்களை யாரும் நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×