என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு
- தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் தார்ப்பாலின் மண்புழு உர படுக்கை செடி தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.
- கோரிக்கை மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அரவேணு,
காந்தி ஜெயந்தி நாளான நேற்று கோத்தகிரியில் உள்ள 11 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. நடுஹட்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அருணா முதல் முறையாக பங்கு பெற்ற கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரனும் பங்கு பெற்றார்.
அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மகளிரின் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
பெண்களின் உயர்கல்வியை உறுதிப்படுத்த அரசு கொண்டு வந்த முன்மாதிரி திட்டங்களில் புதுமைப்பெண் திட்டமும் ஒன்றாகும். மேலும் நான் முதல்வன் முலம் மாணவ-மாணவிகளுக்கு எதிர்கால கல்வி குறித்து சிறப்பான ஆலோசனை வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை சார்பில் 5 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு மருத்துவ புத்தகங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் தார்ப்பாலின் மண்புழு உர படுக்கை செடி தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
மேலும் பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளை அமைச்சர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டனர் முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராம சபை குறித்து பேசும் காணொலி காட்சியை அனைத்து மக்கள் முன்னிலையில் பார்வையிட்டனர். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் அதன் தலைவர் சுமதி சுரேஷ் தலைமையிலும், கொனகவக்கரை ஊராட்சியில் ஜெயப்பிரியா தலைமையிலும், நெடுங்குளா ஊராட்சியில் சுகுணா சிவா தலைமையிலும், குஞ்சப்பனை ஊராட்சியில் விமான வேல் மணிகண்டன் தலைமையிலும், கோடநாடு ஊராட்சியில் சுப்பிகாரி தலைமையிலும், தேனாடு ஊராட்சியில ஆல்வின் தலைமையிலும், அரக்கோடு ஊராட்சி ஷீலா தேவி, தெங்குமரடா ஊராட்சியில் அதன் தலைவர் மனோகரன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.






