search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unequal society"

    • ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க கல்வி பெரும் பங்கு வகிக்கிறது.
    • கல்லூரி விழாவில் அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் பவள விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார், மாங்குடி, செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைய மன்னர் மகேஷ்துரை குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விழா மலரினை வெளி யிட்டு அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது:-

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியானது, இந்தியா சுதந்திரம் பெற்ற போது தொடங்கப்பட்டது. தற்போது 3800 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கக் கூடிய மாணவர்கள் தற்போது போட்டிகள் நிறைந்த நவீன காலத்தில் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து, சிறப்பு மிக்கவர்களாக திகழ்ந்திட வேண்டும்.

    ஏற்றத்தாழ்வற்ற சமு தாயத்தை உருவாக்குவதற்கு கல்வி என்பது பெரும் பங்கு வகிக்கிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிட தொலைநோக்கு பார்வையுடன் முனாள் முதல்வர் கருணாநிதி திட்டங்களை செயல்படுத்தி னார். அதே வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

    அதில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, மாதம் ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணாக்கர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்ப தற்கு அவர்களுக்கு உறு துணையாக இருந்திடும் வகையில், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங் களை தமிழகத்தில் செயல் படுத்தி மாணாக்கர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையான திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    அது மட்டுமன்றி, குடிமைப் பணிகளுக்கு என்று அரசால் அறிவிக்கப் படும் தேர்வுகளில் நமது தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களின் விகிதத்தை அதிகப்படுத்துகின்ற வகையில் மாதம் ரூபாய் 7,500/- வழங்கும் திட்டத்தி னையும் அறிவித்துள்ளார்.

    மேலும்,நிதிநிலை அறிக்கையில் பள்ளி கல்விக்கென ரூ. 40 ஆயிரம் கோடியும், உயர் கல்விக்கென ரூ.7 ஆயிரம் கோடியும் என மொத்தம் ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், கல்விக்கென தமிழ்நாடு முதலமைச்சரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரை ஆனந்த், மதுரை மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) பொன்முத்து ராமலிங்கம், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, கல்லூரி துரை அரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×