search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சி யின் இரு கண்கள்
    X

    மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பேசிய காட்சி.

    கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சி யின் இரு கண்கள்

    • கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி என்றார்.

    மதுரை

    மதுரை புதுநத்தம் சாலை–யில் ரூ.216 கோடி மதிப்பீட் டீல் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல–கத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்துவைத் தார். அப்போது அவர் பேசி–யதாவது:-

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண் கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகா–தாரமும்தான். அதனால் தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவம–னையை சென்னை, சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத் தேன்.

    ஒரு மாதம் கழித்து ஜூலை 15 ஆம் நாளான இன்றைக்கு (நேற்று) கலை–ஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்தி–ருக்கின்றேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததை–யும் செய்வான் இந்த ஸ்டா–லின் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரை–யில் இந்த நூலகமும். இவை இரண்டும் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள்.

    தமிழ்நாட்டினுடைய தலைநகர் சென்னை என் றால், இந்த மதுரை, தமிழ் நாட்டினுடைய கலைநகர். தலைநகரில், தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணாவின் நூற்றாண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் தந்தார் கலை–ஞர்.

    இன்று அந்த தலைவர் கலைஞரின் நூற்றாண்டில், இந்தக் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறி–வாலயத்தை நான் அமைத் திருக்கிறேன். இந்த நூல–கத்தை திறந்து வைக்கக்கூடிய பெரும் வாய்ப்பும், பெருமை–யும் எனக்கு கிடைத்திருப் பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

    சங் கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் இயற்றிய மாமதுரை–யில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக் கும், குழந்தைகள் –மாண–வர்கள் போட்டித் தேர்வர் கள் – மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெ–றக்கூடிய வகையில் ஆறு தளங்கள் மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக் கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலை–வர் கலைஞரே சிலை வடி–வமாக இங்கே காட்சிய–ளித் துக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தான் என்பதை யாரும் மறந்திடக்கூடாது. அதற்கு திராவிட இயக்கமும், தி.மு.க.வும்தான் காரணம். உங்களைப் போலவே, பள்ளியில் படிக்கின்றபோது தமிழ்ப் பற்று இருந்த–தால்தான் எழுத்தாற்றல் பெற்று, போராட்டக் குணத்தின் காரணமாக மிகப்பெரிய தலைவரானார் கலைஞர்.

    பள்ளியில் நன்றாகப் படி என்று அண்ணா சொன்னா–லும், கலைஞர் படித்தது என்னவோ, அண்ணாவின் கொள்கைப் பள்ளியிலும், பெரியாரின் போராட்ட கல்லூரியிலும்தான். அன் றை அரசியல் சூழலும் கலை–ஞருக்குள்ளே இருந்த போராளியும், அவர் விரும் பிய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போன–தற்கு காரணம். ஆனால், கலைஞருக்குள்ளே இருந்த அந்தப் போராளிதான் இன்றைக்கு பலரும் படிக்க காரணம்.

    படிப்பை நாம் எல்லோ–ரும் அடையவேண்டும் என்ற தலைவர் கலை–ஞர் உருவாக்கியதுதான் இன் றைய நவீன தமிழ்நாடு. இன்றைக்கு தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்கின்ற பெரும் பாலானவை கலைஞரால் உருவாக்கப்பட்டவை. நவீன கலைஞரால் உருவாக்கப்பட் டது. ஒரு இனத்தின் வளர்ச் சிக்கு முதலில் தேவை கல்வி. அதை முத–லில் கொடுத்தது, திராவிட இயக் கத்தின் தாய்க்கட்சி–யான நீதிக்கட்சி. கல்விப் புரட் சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி.

    தரமான கல்வி வழங்கு–வதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முத–லிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொண்டு இருக்கி–றோம். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், 'எண்ணும் எழுத்தும்' இயக் கம், பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாண–வர்களின் பசியை போக்க 'முதலமைச் சரின் காலை உணவுத்திட்டம்' என பல்வேறு திட்டங்கள பள்ளிக்கல்வித் துறை சார் பில் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

    அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி படிக்க வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற "புது–மைப்பெண் திட்டம்". வரு–கிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்த–நாளில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப் போகிறோம்.

    தகுதியுடைய குடும்பத் தலை–விகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. உங்கள் குடும்பத்தில் உங்கள் அம்மாவே இதனை பெறு–வார்கள். இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப் பட இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    விழாவில் எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி நாடார், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன்,

    மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்து–ராமன், மேலக்குயில்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரபு, அவைத் தலை–வர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சோமசுந்தர–பாண்டியன், மாவட்ட பிரதி–நிதி அழகு பாண்டி, இளை–ஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசி–குமார், மருதுபாண்டி, ஒன்றிய சேர்மன் வீரரா–கவன், கிழக்கு மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, மாநகர் மாவட்ட இளை–ஞரணி அமைப்பாளர் சௌந்தர், 92-வது வார்டு கவுன்சிலர் கருப்புசாமி, அரசு வக்கீல் ஸ்ரீதர், நியாய விலை கடை தொழிலாளர் சங்க தனுஷ்கோடி, பால–முருகன், மதுரை மாநகர் மாவட்ட 52-வது வார்டு தி.மு.க. விஜி என்ற விஜயகுமார்,

    ஒன்றிய சேர்மன் வேட்டையன், மதுரை மாநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முத்துக்குமார், மதுரை மாநகர் மாவட்ட விளையாட் மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மணிகண் டன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராம பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பி–னர் வைகை பரமன், ஊராட்சி தலைவர்கள் கவிப்பிரியா கணபதி, ஆனந்த், சரண்யா ராஜவேல், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் கார்த்திக், அலங்காநல்லூர் பேரூ–ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, சோழவந் தான் பேரூராட்சி தலைவர் ஜெய–ராமன், துணைத்தலை–வர் லதா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×