search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி பெற்ற"

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
    • 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் டாக்டர்.கலைஞர் பிறந்தநாளை யொட்டி 7-ந் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளக்கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    பள்ளி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டிக்கு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முது கலை தமிழாசிரியர் கந்த சாமி, நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முது கலை தமிழாசிரியர் குமரேசன்,

    விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் கருப்புசாமி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    உத்தண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் கோகுல்பிரசாத் முதல் பரிசு ரூ.5,000-ம், வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தமிழ்க்கனி 2-ம் பரிசு ரூ.3000-ம், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி மாணவி இலக்கியா 3-ம் பரிசு ரூ.2000-ம் பெற்றுள்ளனர்.

    மேலும் சிறப்பு பரிசாக ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் தேவபாலா ரூ.2000-ம், தவிட்டுப் பாளையம் அரசு உயர்நிலை ப்பள்ளி மாணவி ரிதனிகா ரூ.2000-ம் பெற்றுள்ளனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.
    • பேச்சு போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.

    பேச்சுப்போட்டிக்கு முதுகலை தமிழாசிரியர்கள் கலைச்செல்வன், கருப்பு சாமி, பட்டதாரி ஆசிரியர் ஷீலாதேவி ஆகியோர் நடுவர்களாகவும், கட்டுரை போட்டிக்கு முதுகலை தமிழாசிரியர்கள் கந்தசாமி, யுவராணி, காயத்ரி தேவி ஆகியோர் நடுவர்களாகவும் பங்கேற்றனர்.

    இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ரெஜினா ள்மேரி ஒருங்கிணை ப்பாளராகச் செயல்பட்டார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சி.ஆகாஷ் முதல்பரிசு ரூ.10,000-ம், மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மாணவன் மைந்தன்குமார் 2-ம் பரிசு ரூ.7,000-ம், கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவி நித்யாஸ்ரீ 3-ம் பரிசு ரூ.5,000-ம் பெற்றனர்.

    பள்ளி மாணவ, மாணவி களுக்கான கட்டுரை போட்டியில் 91 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ர.விஷால் முதல்பரிசு ரூ.10,000-ம், சென்னிமலை, கொமரப்பா செங்குந்தர் மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா 2-ம் பரிசு ரூ.7,000-ம், பட்டிமணி யக்காரன் பாளையம் அரசு மாதிரிப்பள்ளி மாணவி லோ.ச.அம்பிகா 3-ம் பரிசு ரூ.5,000-ம் பெற்றுள்ளனர்.

    • சிறப்பு கட்டணம் செலுத்துதல் திட்டத்தின் கீழ் 14 பள்ளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • 2 விடுதிகளில் 66 மாணவ, மாணவிகளும் பயின்ற வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

    இவ்விழாவில் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

    ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை யின் சார்பில் மனிதநேய வார விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பா க நடைபெற்று நிறைவு விழா நடைபெற்று வருகிறது. நமது மாவ ட்டத்தை பொறுத்தவரையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகின்றது.

    அதன்படி பெண் கல்வி ஊக்குவிப்பதற்காக (3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) 11,540 மாணவிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பீட்டி லான உதவித்தொகை யினையும், சுகாதார குறை வான தொழில் புரிவோரு க்கான 1711 மாணவ, மாணவிகளுக்கு ரூ.51.33 லட்சம் மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகை யினையும், நற்பெயர் பெற்ற பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்து 12-ம் வகுப்பு வரை பயில்விக்கும் திட்டத்தின் கீழ் 70 மாணவ, மாணவி களுக்கு ரூ.22.88 லட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகையினையும், விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணமாக 9 கல்லூரி களுக்கு ரூ.86,846 மதிப்பீ ட்டிலான உதவித்தொகை யினையும் மற்றும் சிறப்பு கட்டணம் செலுத்துதல் திட்டத்தின் கீழ் 14 பள்ளி களுக்கு ரூ.50,444 மதிப்பி லான உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

    நமது மாவட்டத்தில் 4 ஆதிதிராவிடர் நலப்பள்ளி யில் 157 மாணவ, மாணவி களும், 2 கல்லூரி விடுதி களில் 114 மாணவ, மாணவி களும், 28 பள்ளி விடுதிகளில் 720 மாணவ, மாணவிகளும் மற்றும் பழங்குடியினர் நலஉண்டு உறைவிட பள்ளியில் 8 தொடக்க ப்பள்ளியில் 292 மாணவ, மாணவியர்களும், 9 நடுநிலைப்பள்ளிகளில் 410 மாணவ,மாணவியர்களும், 3 உயர்நிலைப்பள்ளிகளில் 496 மாணவ,மாணவிகளும், 2 மேல்நிலைப் பள்ளிகளில் 597 மாணவ, மாணவிகளும் மற்றும் 2 விடுதிகளில் 66 மாணவ, மாணவிகளும் பயின்ற வருகின்றனர்.

    மேலும் 5166 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்ப ட்டுள்ளது. அரசு அளிக்கி ன்ற நலத்திட்ட உதவிகளை நல்ல முறையில் பெற்று கல்வி கற்கின்ற மாணவ செல்வங்கள் தங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொள்வதோடு தங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிப்பு, கண்காணிப்பு குழு உறுப்பினர்களான 16 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரதம், மங்கள இசை, தேவாரபாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் தாட்கோ மூலம் நீட்ஸ் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ.11 லட்சம் வாகன கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, தனி தாசில்தார் (ஆதி திராவிடர் நலம்) கணேசன், ஆதிதிராவிடர் நலக்குழு, மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×