search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் மண்டல ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசிய காட்சி. அருகில் புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., மாவட்டச்செயலாளர் முனியசாமி, மாநில இளைஞரணி அமைப்பாளர் கீரைத்துரை பாண்டியன் மற்றும் பலர் உள்ளனர்.

    மதுரையில் மண்டல ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    • மதுரையில் மண்டல ம.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசினார்.
    • தமிழ்நாட்டில் பா.ஜனதாவை நுழையவிடாமல் தடுக்க திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும்.

    மதுரை

    அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15-ந்தேதி மதுரையில் நடக்கிறது. இதனையொட்டி, மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று, தெப்பக்கு ளம் நோட்புக் அரங்கில் நடைபெற்றது.

    பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலா ளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு ஆலோச னைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    கலிங்கப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த போது நான் ஒரு அரசியல் கட்சி தொடங்குவேன் என்றோ, இத்தனை ஆண்டு கள் இயக்குவேன் என்றோ கனவு கூட கண்டதில்லை. அண்ணா மீது கொண்ட பற்றின் காரணமாக உயிரை யும் கொடுக்க துணிந்துதான் தி.மு.க.வில் பணியாற்றி னேன். பிரிட்டிஷ் காலத்தை போல ஒரு கவர்னரை தமிழகத்திற்கு நியமித்து, திராவிட இயக்கங்களை அழித்துவிட முயற்சிக்கி றார்கள்.

    ம.தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது? என்று கேட்கிறார்கள். ஸ்டெல் லைட், நியூட்ரினோ வராமல் தடுத்தோம், முல்லை பெரி யாறு அணையை பாதுகாத் தோம், தஞ்சைக்கு மீத்தேன் வராமல் தடுத்தோம். இப் படி எவ்வளவோ செய்துள் ளோம். 10 ஆண்டுக ளுக்கு முன்னால் பா.ஜ.க. என்றால் யாருக்காவது தெரியுமா?

    ஆனால், தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என மோடி, அமித்ஷா கூறுகி றார்கள். அந்த தைரியம் எப்படி வந்தது? தமிழ் நாட்டை காக்க வேண்டும் என்றால், இந்துத்துவா, சனாதன சக்திகள் ஊடுருவ விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்து கொள்வோம்.

    விமர்சனங்கள் எவ்வ ளவோ வரலாம். அதைப் பற்றி கவலைப்பட வேண்டி யதில்லை. பா.ஜ.க.வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு திராவிட இயக்கங் களை பாதுகாக்க வேண்டும்.

    நான் இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டி ருக்கிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை, தாமிரபரணி முதல் சென்னை வரை என பல முறை நடைபயணம் செய்தி ருக்கிறேன். அன்று நடைபய ணம் செய்த போது ஊடக ஆதரவு கூட கிடையாது. எல்லா இடத்திற்கும் நடந்து தான் செல்வேன். மக்களு டன் மக்களாக இருப்பேன். சாலையோரங்களில் ஓய்வெ டுப்பேன். எங்கும் அறை போட்டு தங்கவில்லை. இதனை யாரையும் ஒப்பிடுவ தற்காக கூறவில்லை.

    ஆனால், இன்று நடை பயணம் மேற்கொள்ளும் சிலருக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக போராடி கொண்டிருக்கிறேன். ம.தி.மு.க. தியாகத்தால் உருவான கட்சி. தொண்டர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். மதுரை யில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில தொண்டரணி துணை செயலாளர் பச்சைமுத்து, தணிக்கை குழு உறுப்பினர் பாண்டியன், மதுரை மாநகர் தொண்டரணி துணை செயலாளர் சண்முகவேல், சிம்மக்கல் பகுதி செயலாளர் பாஸ்கர், 44-வது வார்டு திட்டகுழு உறுப்பினர் தமிழ்செல்வி, 100-வது வார்டு உறுப்பினர் முத்து லட்சுமி, சுருதிரமேஷ், அன்னமுகமது, பாஸ்கர சேதுபதி, சுப்பையா, பச்சமுத்து.சண்முகவேல் புகழ்முருகன், வக்கீல்நாக ராஜன், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×