search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேமலதா விஜயகாந்த்"

    • கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கோவை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிங்காநல்லூரில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டராக உள்ளது. கோவை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு எல்லாம் முன்னுதாரணமாக சிறந்த மாநகராட்சியாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி விட்டது.

    கோவை என்றதுமே சிறுவாணி தண்ணீர் தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று அப்படிப்பட்ட கோவை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 20 நாளைக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒன்றும் இல்லை.

    கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பினை பெற்று வந்தனர். தற்போது சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளது.

    இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யால் பல சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தையும் மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து உயர்த்தி விட்டன. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வந்த பலரும் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன. ஆனால் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    இந்த நிலைமை எல்லாம் மாற கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு நேற்று பரிசீலனையும் முடிந்து விட்டது. இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படுகிறது.

    கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி ஆகிய 4 கட்சி வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் 3 தொகுதிகளிலும் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

    குறிப்பாக கோவை தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி எதிர்பார்ப்பு மிக்க தொகுதியாக உள்ளது. இங்கும் போட்டி கடுமையாக உள்ளது.

    பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கோவை வந்து ரோடுஷோவில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அவரை தொடர்ந்து வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலையும் கோவை வந்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விரைவில் இந்த தொகுதிகளுக்கு வர உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இந்நிலையில் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று பிரசாரம் மேற்கொண்டார். காலையில் துடியலூர், சிங்காநல்லூர், சூலூர் பகுதியில் திறந்து வேனில் நின்றபடி பேசி வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து மாலையில் அவர் மலுமிச்சம்பட்டி, நெகமம், மடத்துக்குளம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    இதேபோல தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிங்காநல்லூரில் கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே திரண்டு நின்ற பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி அவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இன்று மாலை அவர் திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து நாளை அவர் ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.

    கோவையில் இன்று ஒரே நாளில் கனிமொழி எம்.பி.யும், பிரேமலதா விஜயகாந்த்தும் பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து வரும் நாட்களில் தலைவர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

    • 9 மற்றும் 10-ந் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், 11-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, 12-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.
    • 13-ந் தேதி கரூர், நாமக்கல், தேனி, 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகர், 17-ந் தேதி மாலை அவர் விருதுநகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பிரேமலதாவின் தே.மு.தி.க. இடம்பெற்றுள்ளது. 5 பாராளுமன்றத் தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா 20 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.

    பிரேமலதாவின் சுற்றுப் பயண திட்டத்தை இன்று (புதன்கிழமை) காலை தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டது. பிரேமலதா எந்தெந்த தேதிகளில் எந்தெந்த ஊர்களில் பிரசாரம் செய்கிறார் என்ற விவரம் வருமாறு:-

    29-ந்தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, 30-ந்தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், 31-ந்தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம், 1-ந்தேதி பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி.

    2-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், 3 மற்றும் 4-ந் தேதி திருவள்ளூர் , காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 5 மற்றும் 6-ந் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, 7 மற்றும் 8-ந் தேதி கடலூர்.

    9 மற்றும் 10-ந் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், 11-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, 12-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.

    13-ந் தேதி கரூர், நாமக்கல், தேனி, 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகர், 17-ந் தேதி மாலை அவர் விருதுநகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

    பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து கடைசி 2 அல்லது 3 நாட்கள் மட்டும் பிரேமலதா பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக டி.வி.டி.செங்குட்டுவன் நியமனம்.
    • தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும்.

    கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராமநாதன் தேமுதிகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வந்த இராமநாதன்.

    இவர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், இவர் மாவட்ட கழக பதவி மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (23.03.2024) முதல் நீக்கப்படுகிறார்.

    இவர்களுடன் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக டி.வி.டி.செங்குட்டுவன். இவர் இன்று (23.03.2024) முதல் நியமனம் செய்யப்படுகிறார்.

    இவருக்கு மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், கழக சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது.
    • தே.மு.தி.க. விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியுள்ளது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலும் நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளும் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு விஜயகாந்த் அறையில் சிறிது நேரம் கலந்தாலோசனை செய்தனர்.

    வருகிற 24-ந்தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறோம்.

    அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமி என்னை நேரில் வந்து அழைத்துள்ளார். எனவே நானும், முக்கிய நிர்வாகிகளும் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறோம்.

    40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அந்த பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்து அன்று முதல் பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறோம்.

    இந்த கூட்டணி ஒற்றுமையாக கூட்டணி தர்மத்துடன் செயலாற்றி 'நாளை நமதே, நாற்பதும் நமதே' என்று வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு நல்ல புரிதலோடு பயணிக்க இருக்கிறோம்.

    இங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 தெய்வங்களின் ஆசீர்வாதத்தோடு இந்த கூட்டணி, 2011-ல் அமைந்த வெற்றிக் கூட்டணி போல சரித்திரம் படைக்கும்.

    தே.மு.தி.க.வுக்கு மேல் சபை உறுப்பினர் சீட் உறுதியாகிவிட்டது. வெற்றிலை பாக்கை மாற்றி உறுதி செய்துவிட்டோம். ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    மேல்சபை எம்.பி. தேர்தலில் யார் போட்டியிடுவார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். விருப்ப மனுவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார்.

    முன்னதாக, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் வழங்கினார்.
    • இன்றும், நாளையும் விருப்பமனு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு விருப்ப மனுக்களை வழங்கினார்.

    விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு அவர் கட்சியினரிடம் வழங்கினார். பின்னர் தேர்தல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம்.

    இன்று விருப்ப மனுக்களை வழங்கி உள்ளோம். தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது பற்றி நாளை மறுநாள் (21-ந்தேதி) எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.

    • அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • புதுவை பாராளுமன்ற தொகுதிக்கு கழக உயர்மட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர் உசேன், கழக விவசாய அணி துணைச் செயலாளர் கே.திருநாவுக்கரசு ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம்.
    • புதுவை மாநிலத்தின் நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், கிளை கழகம் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் புதுவை பாராளுமன்ற தொகுதிக்கு கழக உயர்மட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர் உசேன், கழக விவசாய அணி துணைச் செயலாளர் கே.திருநாவுக்கரசு ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு புதுவை மாநிலத்தின் நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், கிளை கழகம் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
    • போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 19.03.2024 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 20.03.2024 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வருகிறது.
    • தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது.

    சென்னை:

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வருகிறது.

    கூட்டணி குறித்த செய்திகள் தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பு உண்மையானது. தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை இழுக்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது.
    • அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க.வுடன் சந்திக்க தே.மு.தி.க. முடிவு செய்து உள்ளது. இரு கட்சி நிர்வாகிகளும் 2 கட்ட பேச்சு வார்த்தை நடத்தி முடித்து உள்ளனர். தே.மு.தி.க.விற்கு 3 அல்லது 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    ஆனால் மேல்சபை எம்.பி. ஒன்றையும் தே.மு.தி.க. கேட்டு வருவதால் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் நீடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு மேல்சபை எம்.பி. கொடுக்க முடியாத சூழலை விளக்கி கூறினாலும் தே.மு.தி.க. பிடிவாதமாக உள்ளது.

    இதற்கிடையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை இழுக்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது. பா.ம.க. வந்தால் அ.தி.மு.க. கூட்டணி வலுவடையும் என கருதி அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படுகின்ற நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் அறிவிக்க வேண்டிய நிலை உள்ளது.


    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு தே.மு.தி.க. தயாராக இருந்த நிலையில் அழைப்பு இல்லாததால் பேசவில்லை. பா.ம.க.வை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளதால் பேச்சுவார்த்தை தள்ளிப் போனது. இன்று மாலை தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு கொடுத்துள்ளது.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு இன்று சென்னை திரும்புகிறார். இதையடுத்து தொகுதி பங்கீட்டு குழுவினர் இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று மாலையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு விடும். ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

    ×