search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரம்மா"

    • நான்முகக் கடவுள் ஓர் யாகம் செய்து பரமனின் அருள்பெற எண்ணினார்.
    • கயிலை நாதனும் காட்சி தந்து வேண்டிய வரம் அருளினார்.

    நான்முகக் கடவுள் ஓர் யாகம் செய்து பரமனின் அருள்பெற எண்ணினார்.

    வாக்தேவியான கலைமகளும் பிரம்மனும் தற்போதுள்ள சுருட்டபள்ளிக்கு மேற்கே ஒரு மலை பிரதேசத்தை அடைந்தனர்.

    சரஸ்வதி தேவி மலையில் இயற்கை அழகை கண்டு ரசித்து வெகுதூரம் சென்றுவிட்டாள்.

    பிரம்மன் செய்ய வேண்டிய நல்ல வேளை நெருங்கிவிட்டது.

    கலைமகள் அருகில் இல்லை. அதனால் உரத்த குரலில் கூவி அழைத்தும் கலைமகள் வரவில்லை.

    அதனால் சரஸ்வதி தேவியை தர்ப்பையில் ஆவாஹனம் செய்து அக்னியை மூட்ட ஆயத்தமானார்.

    இந்த விஷயம் கலைமகளின் நினைவிற்கு நினைவில் வந்தது.

    உடனே சூஷ்ம சரீரத்தில் அரணி என்னும் கட்டையில் புகுந்தாள்.

    அக்னிமூட்டி தொடங்கிய வேள்வியில் இருந்து நீர் பாயத்துவங்கியது.

    இதைக்கண்ட தேவர்களும், முனிவர்களும் அதிசயம் அடைந்தனர்.

    கலைவாணி நான்முகன் காலில் விழுந்து, சுவாமி, தங்களுக்கு உண்டாகும் சினம் தணிவதற்காகவே தண்ணீராக உருவெடுத்ததாக கூறி மன்னித்தருளும்படி வேண்டினாள்.

    அனைவரும் இதனை ஈஸ்வரனின் விருப்பம் என்று எண்ணினர்.

    கயிலை நாதனும் காட்சி தந்து வேண்டிய வரம் அருளினார்.

    • அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.
    • இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

    படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலை செய்யும் விஷ்ணுவும்

    நானே பெரியவன் என்று வாதாடிப் போரிட்டனர்.

    அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.

    அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.

    இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

    அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று

    விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார்.

    இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

    • இது ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும்.
    • திருமாலின் 108 திவ்ய தேச திருத்தலங்களுள் முதன்மையானது.

    திருக்கண்டியூரில் உள்ள கபால தீர்த்தத்தில் சிவன் நீராடிய தால் கபாலம் நீங்கியது.

    இதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும் சிவபெருமான் முகமாக தானே இவ்விடத்தே கோவில் கொண்டார்.

    இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கியதைக் கண்டு மனமகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளார்.

    ஆக இது ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும்.

    ஸ்ரீரங்கம்

    திருமாலின் 108 திவ்ய தேச திருத்தலங்களுள் முதன்மையானது.

    திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் இங்கு மூலஸ்தான மண்டபத்திற்கு எதிரில் உள்ள கொடிக்கம்பத்துக்கு அருகில்

    கிழக்கு நோக்கி உள்ள சந்நிதியில் சரஸ்வதிதேவி அமர்ந்த திருக்கோலத்தில் உறைகிறாள்.

    அதே சந்நிதியில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வடக்கு நோக்கி சரஸ்வதி தேவிக்கு அருள் பாலித்தபடி அமர்ந்துள்ளார்.

    ஆக, இந்தியாவிலேயே சரஸ்வதி தேவி தன் குருவான திருமாலின் அவதாரமான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருடன்

    ஒரே சந்தியில் அமர்ந்து காட்சி தரும் ஒரே இடம் ஸ்ரீரங்கம் மட்டுமே.

    • பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
    • பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.

    திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது.

    இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர்.

    எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார்.

    தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது.

    ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

    பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.

    பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.

    இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன.

    மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

    • பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.
    • வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    பிரம்மா, விஷ்ணு, விஷ்ணு அவதார மூர்த்திகள், தருமன், காமன், அகத்தியர், கண்ணுவர், கவுடன்னியர், இலக்குமி, விசாலன், பார்க்கவி, கலைமகள் என பலர் பூசித்து முக்தி பெற்ற திருத்தலம், மயிலாடுதுறை.

    திலீபன், யோக வித்தமன், சிசன்மன், சயதுங்கன், தீர்த்த கங்கை, நாதசன்மன், அனவித்தை, கங்கை முதலியோரும் யானை, குதிரைகள், கரம், கழுகு, பாம்பு, நரி, குரங்கு, பூனை, கிளி என இவ்வுயிர்கள் அனைத்தும் மாயூரநாதேஸ்சுரரை வணங்கி வழிபட்டு முக்தி நிலை பெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.

    சைவப் பெருமக்களின் நாயகர்களாகிய திருஞான சம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசுப் பெருமானும் இத்தலத்திற்கு வந்து வாழ்த்தி வணங்கி பேறு பெற்றிருக்கின்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தி.

    ஆயிரம் ஊரானாலும் மாயூரம் போலாகுமா? என்பார்கள். ஆக அந்த அளவிற்கு சிறப்பும் சீறும் பெற்ற திருத்தலம் மயிலாடுதுறை.

    பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.

    வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    நந்திதேவர் சாபம் விலகிய தலம். திருமகளும் கலைமகளும் தொழுது நின்று பேறு பெற்ற திருத்தலம். கங்கை மகள் முத்தியடைந்த திருத்தலம்.

    ஐப்பசித் திங்கள் முதல் நாள் துலாக்காவேரி நீராடுவது தலை சிறந்தது.

    குடகின் குளத்திலே பிறந்த காவிரிப் பெண் அகண்ட காவிரியாக அகன்று ஏறத்தாழ 17.60 அடி அகலத்தில் பரந்து விரிந்து ஓடுவதைத் திருப்பாராய்ந்துறை என்ற திருத்தலத்திலே பார்க்க முடியும்.

    இத்தலத்தில் ஒவ்வொர் ஆண்டு ஐப்பசித் திங்கள் முதல் நாளன்று திருக்கோவிலிருந்து பராய்ந்துறை நாதரே அகண்ட காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது இன்றைக்கும் வழக்காற்றில் உள்ளது.

    என்றாலும் குடகுநாட்டின் தலைக்காவிரியலே குளிப்பதை விட, அரங்கத்து அரவணையாக கோவிலுக்கும் மேற்கே அகண்ட காவிரியிலே (திருப்பராய்ந்துறை) குளிப்பதைவிட மாயூரத்திலே குளிப்பது சிறப்பு எனச் சொல்லுவார்கள் சிலர்.

    • ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.
    • பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.

    நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம்பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்து சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.

    அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி,

    எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

    துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம்பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு சாத்துவார்.

    அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.

    ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.

    பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றி ஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.

    திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.

    எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள்.

    தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.

    மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள்.

    அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வு பெறுவீர்கள்.

    அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டு சொல்லுங்கள்.

    பக்தி பரவசத்துடன் பாமாலைப் பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.

    தீபாராதனை முடித்து அர்ச்சகர் அர்ச்சனைத் தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார்.

    அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

    பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு,

    அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.

    • பூஜை செய்யும் அறையில் முதலில் சக்தி மாகோலமிட வேண்டும்.
    • அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.

    துர்க்கை அன்னையை வீட்டிலேயே தீப பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் அனுசரித்து வழிபட வேண்டும்.

    பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும்.

    அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.

    வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் நடுவில் ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

    மஞ்சள் நிறமுடைய பத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி, பழங்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

    அந்த இருபது துண்டுகளில் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து சாறு பிழிந்து விட்டு பிழிந்த முடிகளை உள்பக்கம் வெளிப்பக்கம் வருமாறு திருப்பி குழிவான கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும்.

    அந்த எலுமிச்சம்பழக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துர்க்கா தேவியின் படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

    துர்க்கா தேவிக்கு நிவேதனைப் பொருளாக தயிர் சாதம், உளுத்துவடை, அவல், பாயாசம், எலுமிச்சம் பழச்சாதம் படைக்கலாம்.

    • துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.
    • தோஷம் அகல மாலை நேரம் அம்மனை வழிபட வேண்டும்.

    துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகல விதமான சம்பத்துகளும் வந்துசேரும்.

    குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.

    எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

    தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபட வேண்டும்.

    துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும்.

    இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்குரிய சிறப்பான நேரமாகும்.

    அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்கு பூச்சூடி,

    நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்கா தேவியை வழிபட கோவிலுக்கு செல்லவேண்டும்.

    துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.

    அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கி கொள்ளலாம்.

    • கறுப்பு நிறத்துடன் காணப்படும் இவளது முகம் பன்றியை ஒத்திருக்கும்.
    • தண்டநாத வாராகி பொன் நிறம் உடையவள்.

    வாராகி என்பவள் வாரகமூர்த்தியின் சக்தி ஆவாள்.

    கறுப்பு நிறத்துடன் காணப்படும் இவளது முகம் பன்றியை ஒத்திருக்கும்.

    இவளுக்கு மொத்தம் 6 கைகள் உண்டு.

    வலது கரத்தில் வரத முத்திரையும், இடது கரத்தில் அபய முத்திரையும் கொண்டிருக்கிறாள்.

    இவள் எருமையை வாகனமாக கொண்டிருப்பதாக ஸ்ரீதத்துவநிதி சொல்கிறது.

    வாராகி அம்சத்தில் தண்டநாத வாராகி, சுவப்ன வாராகி, சுத்த வாராகி என்று மேலும் 3 வகை வாராகிகள் உள்ளனர்.

    தண்டநாத வாராகி பொன் நிறம் உடையவள்.

    பன்றி முகத்துடன் காட்சி அளிக்கும் இவள் கைகளில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் ஆகியவற்றை ஏந்தி உள்ளாள்.

    சுவப்ன வாராகி மேகம் போன்ற நிறம் கொண்டவள்.

    இவளுக்கு 3 கண்கள் உண்டு. தலையில் பிறைச்சந்திரனை சூடி இருப்பாள்.

    கைகளில் வாள், கேடயம், அரிவாள் ஆகியவற்றை ஏந்தி இருப்பாள்.

    சுத்தவாராகி என்பவள் நீலநிறமாக இருப்பாள்.

    இவளது பன்றி முகத்தில் இருந்து வெள்ளை நிற கோர பற்கள் வெளியே நீண்டு கொண்டிருக்கும்.

    இவள் தலையில் பிறச்சந்திரனை சூடி இருப்பாள்.

    இவள் தன் கைகளில் சூலம், உடுக்கை, நாகம் போன்றவற்றை ஏந்தி இருப்பாள்.

    • ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி
    • ஓம் அகிலத்தின் காப்பே போற்றி

    ஓம் அறிவினுக்கறிவே போற்றி

    ஓம் ஞானதீபமே போற்றி

    ஓம் அருமறைப் பொருளே போற்றி

    ஓம் ஆதிமூலமாய் நின்றவளே போற்றி

    ஓம் புகழ்தரும் புண்ணியளே போற்றி

    ஓம் நறும்பாகின் சுவையே போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி

    ஓம் பரமனின் சக்தியே போற்றி

    ஓம் பாபங்கள் களைவாய் போற்றி

    ஓம் அன்பெனும் முகத்தவளே போற்றி

    ஓம் அகிலத்தின் காப்பே போற்றி

    ஓம் செம்மேனியளே போற்றி

    ஓம் செபத்தின் விளக்கமே போற்றி

    ஓம் தானியந் தருவாய் போற்றி

    ஓம் கல்யாணியம்மையே போற்றி

    • மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.
    • அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பல வடிவங்களெடுத்து போரிடுகிறான்.

    தூம்ரலோசனன், சும்பன், நிசும்பன் என்று தூதுவர்களை அனுப்பி அவர்களும் பராசக்தியுடன் போரிட்டு மாண்டதும் தானே போருக்குக் கிளம்பி வருகிறாள்.

    அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பல வடிவங்களெடுத்து போரிடுகிறான்.

    தன்னை மணக்கும்படி வேறு கூறுகிறான்.

    இறுதியில் பராசக்தி அவனைத் தன் காலடியில் போட்டு, தன் வாளால் வெட்டி வீழ்த்தினாள்.

    அசுரனாக இருந்தாலும் அவனும் மோட்சம் என்ற நற்கதியை அடைய அவன் தலை மீதே தன் திருப்பாதங்களை வைத்து அருள் பாலிக்கும் நிலையில் சூலம் ஏந்திய துர்கையாக வராகி வடிவத்தில் காட்சியளிக்கிறாள்.

    மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.

    தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.

    மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.

    மரிக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கலாம்.

    இந்த மலர்களால் அர்ச்சனையும் செய்யலாம்.

    • சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.
    • சர்க்கரைப் பொங்கல் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.

    நவராத்திரி 3ம் நாள் மகிஷாசூரனை வதம் புரிந்து, சூலமும் கையுமாய், மகிஷனின் தலைமீது வீற்றிருக்கும் தாயை மனதில் நினைத்துக் கும்பிடுவார்கள்.

    இவளை, இந்த நிலையில் "கல்யாணி" என்று அழைப்பார்கள்.

    சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.

    மனதில் உள்ள பக்தியை எல்லாம், சர்க்கரைப் பொங்கலாய் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.

    வெற்றியையே உகந்தளிக்கும் செல்விக்கு இனிப்பையே படைப்போம்.

    மகிஷாசுரனை வதம் செய்த தேவி வராகியாகவும் அம்பிகை காட்சி தருகிறாள்.

    ×