search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரஸ்வதி தேவி"

    • தலித் ஆசிரியர் இடைநீக்கத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
    • "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்"

    "கல்விக்கு கடவுள் சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை ஹேம்லதா பைர்வா மீதான இடைநீக்கம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவு நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக ஹேம்லதா பைர்வா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    அப்போது ஆசிரியை ஹேம்லதா பைர்வா இரு தலைவர்கள் உடன் சரஸ்வதியின் புகைப்படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், 'கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை' என்று ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷான்கஞ்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

    கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், பாரான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அந்த ஆசிரியைக்கு பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்தே இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தலித் ஆசிரியர் இடைநீக்கத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவருமான டிகா ராம் ஜூலி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆசிரியை ஹேம்லதா பைர்வாவை தடுத்த கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், அவரை இடைநீக்கம் செய்ததன் மூலம் பாஜக அரசு தலித் விரோத அரசு என்பதை நிரூபித்துள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, லவ் ஜிஹாத், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புகொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, கோட்டா மாவட்டத்தின் சங்கோட் பகுதியில் உள்ள அரசு மூத்த மேல்நிலைப் பள்ளி கஜூரியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் பணியில் சேர்க்க வேண்டும் என மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • “கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறிய ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
    • “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்”

    ராஜஸ்தானில் குடியரசு தினத்தின் போது மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மத்தியில் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க மறுத்து, "கல்விக்கு கடவுள் சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறிய ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக ஹேம்லதா பைர்வா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    அப்போது ஆசிரியை ஹேம்லதா பைர்வா இரு தலைவர்கள் உடன் சரஸ்வதியின் புகைப்படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், 'கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை' என்று ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷான்கஞ்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

    கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், பாரான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அந்த ஆசிரியைக்கு பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்தே இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில், லவ் ஜிஹாத், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 2 ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    • நான்முகக் கடவுள் ஓர் யாகம் செய்து பரமனின் அருள்பெற எண்ணினார்.
    • கயிலை நாதனும் காட்சி தந்து வேண்டிய வரம் அருளினார்.

    நான்முகக் கடவுள் ஓர் யாகம் செய்து பரமனின் அருள்பெற எண்ணினார்.

    வாக்தேவியான கலைமகளும் பிரம்மனும் தற்போதுள்ள சுருட்டபள்ளிக்கு மேற்கே ஒரு மலை பிரதேசத்தை அடைந்தனர்.

    சரஸ்வதி தேவி மலையில் இயற்கை அழகை கண்டு ரசித்து வெகுதூரம் சென்றுவிட்டாள்.

    பிரம்மன் செய்ய வேண்டிய நல்ல வேளை நெருங்கிவிட்டது.

    கலைமகள் அருகில் இல்லை. அதனால் உரத்த குரலில் கூவி அழைத்தும் கலைமகள் வரவில்லை.

    அதனால் சரஸ்வதி தேவியை தர்ப்பையில் ஆவாஹனம் செய்து அக்னியை மூட்ட ஆயத்தமானார்.

    இந்த விஷயம் கலைமகளின் நினைவிற்கு நினைவில் வந்தது.

    உடனே சூஷ்ம சரீரத்தில் அரணி என்னும் கட்டையில் புகுந்தாள்.

    அக்னிமூட்டி தொடங்கிய வேள்வியில் இருந்து நீர் பாயத்துவங்கியது.

    இதைக்கண்ட தேவர்களும், முனிவர்களும் அதிசயம் அடைந்தனர்.

    கலைவாணி நான்முகன் காலில் விழுந்து, சுவாமி, தங்களுக்கு உண்டாகும் சினம் தணிவதற்காகவே தண்ணீராக உருவெடுத்ததாக கூறி மன்னித்தருளும்படி வேண்டினாள்.

    அனைவரும் இதனை ஈஸ்வரனின் விருப்பம் என்று எண்ணினர்.

    கயிலை நாதனும் காட்சி தந்து வேண்டிய வரம் அருளினார்.

    • இது ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும்.
    • திருமாலின் 108 திவ்ய தேச திருத்தலங்களுள் முதன்மையானது.

    திருக்கண்டியூரில் உள்ள கபால தீர்த்தத்தில் சிவன் நீராடிய தால் கபாலம் நீங்கியது.

    இதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும் சிவபெருமான் முகமாக தானே இவ்விடத்தே கோவில் கொண்டார்.

    இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கியதைக் கண்டு மனமகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளார்.

    ஆக இது ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும்.

    ஸ்ரீரங்கம்

    திருமாலின் 108 திவ்ய தேச திருத்தலங்களுள் முதன்மையானது.

    திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் இங்கு மூலஸ்தான மண்டபத்திற்கு எதிரில் உள்ள கொடிக்கம்பத்துக்கு அருகில்

    கிழக்கு நோக்கி உள்ள சந்நிதியில் சரஸ்வதிதேவி அமர்ந்த திருக்கோலத்தில் உறைகிறாள்.

    அதே சந்நிதியில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வடக்கு நோக்கி சரஸ்வதி தேவிக்கு அருள் பாலித்தபடி அமர்ந்துள்ளார்.

    ஆக, இந்தியாவிலேயே சரஸ்வதி தேவி தன் குருவான திருமாலின் அவதாரமான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருடன்

    ஒரே சந்தியில் அமர்ந்து காட்சி தரும் ஒரே இடம் ஸ்ரீரங்கம் மட்டுமே.

    • தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை.
    • சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

    நரக உபாதைகளிலிருந்தும் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்று எண்ணுபவர்கள், நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்கிறது பாத்ம புராணம்.

    இதன்படி தீபாவளிப் பண்டிகை தினத்தன்று அதிகாலை (சுமார் 4.30 மணிக்கு முன்பாக) அனைவரும் உடல் முழுவதும் சுத்தமான நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். காலை எழுந்திருந்து பல் தேய்த்து விட்டு, சாமி சன்னதியில் கோலம் போட்ட ஆஸனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு, பாட்டி, தாயார், மாமியார், அக்கா முதலிய வயதான சுமங்கலிப் பெண்கள் மூலம் தலையில் நன்கு காய்ச்சிய நல்லெண்ணெய் வைக்கச் சொல்லி, உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு நாயுருவிக் கொடியால் தலையை மூன்று தடவை சுற்றி வாசலில் எறிந்துவிட்டு, இலைகள் போட்டு கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு பெரியோர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து தரச்சொல்லி அவர்களை வணங்கி புதிய ஆடைகள் (ஆடைகள்) பெற்றுக் கொண்டு, அவற்றை உடுத்திக்கொண்டு, விபூதி குங்குமம் நெற்றியில் இட்டுக்கொண்டு, சிறிதளவு பட்டாசு கொளுத்த வேண்டும்.

    இடையிடையே இனிப்புகள் சாப்பிட்டு, உறவினர்களின் ஆசிபெற்று அனைவருடனும் ஒன்று சேர்ந்து பூஜைகள் செய்தல் வேண்டும். நாளை நேரம் கிடைக்கும்போது ஆலயம் சென்று வர வேண்டும். மதியம் சாப்பிட்டு விட்டு மாலையில் மகாலட்சுமி பூஜை செய்து, தீபங்கள் வரிசை வரிசையாக நிறைய ஏற்றி வைத்தல் வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை. இதை சாஸ்திரப்படி அனுஷ்டித்தால் இந்த சந்தோஷம் வருஷம் முழுவதும் நீடிக்கும்.

    தீபாவளி நாளுக்கு சாஸ்திரங்களில் தரித்ரத்தைப் போக்கடிக்கும் நாள் என்று பெயர். அதாவது சாஸ்திரத்தில் நாயுருவிக்கொடிக்கு ஏழ்மையைப் போக்கடிக்கும் சக்தியும், விரோதிகளை விலக்கும் சக்தியும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    நாயுருவிக் கொடி அல்லது தும்பீம் எனப்படும் சுரைக்காய் கொடியை, நீராடல் செய்யும்போது தலையை மூன்று முறை சுற்றி தூக்கி எறிய வேண்டும். இதனால் நரக பயமும், நரகத்துக்கு நிகரான துக்கமும், நம்மை விட்டு விலகும்.

    யம தர்ப்பணம்

    தீபாவளியன்று யமதர்மராஜாவுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீபாவளியன்று காலை புனித நீராடல் செய்து முடித்து விட்டு காலை 7 மணிக்குள் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஆஸ்வயுஜ கிருஷ்ண சதுர்தசீ புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே என்று ஆரம்பிக்கும் 14 நாமாக்களைச் சொல்லி மஞ்சள் கலந்த அட்சதையால் தண்ணீர் விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ருதர்ப்பணம் போல் எள்ளு சேர்த்தல், தந்தை இருப்பவர்கள் தந்தை இல்லாதவர்கள் அனைவருமே இதைச் செய்ய வேண்டும்.

    மாலை தீபம் ஏற்றுங்கள்

    தீபாவளியன்று மாலை உங்கள் வீட்டிலும் அருகிலுள்ள சிவன், விஷ்ணு அம்பிகை ஆலயங்களிலும் நான்கு திரியுள்ள எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். சதுர்தசியில் நான்கு திரியுடன் கூடிய தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். ஆகவே பாவங்களை போக்கடித்து நரக பயத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நரக பயம் வராது. எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

    மகாலட்சுமி பூஜை

    சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். நெய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்ய வேண்டும். மேலும் கணக்கு எழுதப்பயன்படுத்தப்படும் பேனா பென்சில் முதலியவற்றையும் ஓர் தாம்பாளத்தில் வைத்து அவற்றில் காளியையும், அத்துடன் கணக்குகள் எழுதப்பயன்படுத்தப்படும் நோட்டுகளில் சரஸ்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து இந்திரனையும், குபேரனையும் பூஜை செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல், பால் நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும்.

    ×