search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாதம்"

    • வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
    • 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர்,ஜூன்.29-

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு, நேரில் சென்று சுவாமியை தரிசிக்க முடியாத பக்தர்கள் வசதிக்காக, அவர்கள் வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாத சுவாமி கோவிலும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கோவிலில் கோடி தீர்த்தம், 100 மி.லி., செம்பில் அடைத்தும், 50 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் படம், விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாதம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

    தபால் செலவு தவிர்த்து, இதற்கு கட்டணம், 145 ரூபாய். பிரசாதம் வேண்டுவோர் www.hrce.tn.gov.inஎன்ற இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.இந்து சமய அறநிலையத் துறை - தபால் துறை இணைந்து ஏற்கனவே, 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை வாடிப்பட்டி அருகே துர்க்கை அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • 2-ம் நாள் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், 7 மணிக்கு பெண்கள்முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் ஆற்றங்கரையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் 23-ந் ஆண்டு உற்சவ விழா 3 நாட்கள் நடந்தது. இந்த விழாவிற்கு முதல் நாள் பாலன் நகர் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து துர்க்கை அம்மன் சிவப்பு பச்சை பட்டு உடுத்தி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். 2-ம் நாள் மாலை 4 மணிக்கு பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், 7 மணிக்கு பெண்கள்முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பூஞ்சோலையை அடைந்தது. மூன்றாம் நாள் பல்லையம் பிறித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி நிர்வாக்குழு நிர்வாகிகள் கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.

    • குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
    • தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருக்கானூர் ஸ்ரீ கரும்பீஸ்வர சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதன் பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் திராளாக பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து ஸ்ரீ வெற்றிவேல் முருகன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    ஸ்ரீ சொர்ண பைரவர் சன்னதியின் முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.

    அதன் பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு திறக்க அடைக்க பாடும் வரலாற்று திருவிழா, தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று இரவு மனோன்மணி சமேத சந்திரசேகர் வண்ண மலர்களாலும், மின் விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அப்போது தேவார பாடலி லும், நாதஸ்வரத்திலும் நலுங்கு பாடல்கள் இசைக்கப்பட்டது.

    பின்னர், சிறப்பு தீபாரா தனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் இளையவர் சபேசன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், தேவார வார வழிபாட்டு மன்றத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • காமன் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் 160 ஆண்டுகளுக்கு மேலாக காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவ பெருமான் தவத்தில் இருந்தார். தேவ லோகத்தில் தலைவனானவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் பலரை நாடினர். சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.

    அப்போது மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்துவிடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான்.

    தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார். இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதிதேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுத லாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர்மீது எந்த தவறுமில்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று முறையிட்டாள்.

    ரதிதேவியின் வேண்டு தலை ஏற்ற சிவபெருமான், ரதிதேவியிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார். இந்த புராண சம்பவத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி மாதத்தில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டும் காமன் பண்டிகையையொட்டி காமன் மேடையில் காப்பு கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படிதாரர்களால் பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காம தகனம் நடந்தது. அப்போது பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர்.

    குழந்தை இல்லாதவர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தர மூர்த்தி, உறுப்பி னர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராமமூர்த்தி, நாகராஜ், ராஜராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அருகே உள்ள முனியாண்டி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள பன்னிமுட்டி முனியாண்டிகோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சாலைக்கோபுரம் அனைத்திற்கும் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து புதிதாக மதுரைவீரன், சப்பானி இரு தெய்வங்களுக்கும் பீடம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த புதன்கிழமை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் நடந்து மாலை முதல் கால பூஜை தொடங்கியது. இரண்டாம் நாளில் இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால பூஜை நடந்தது. மகாபூர்ணாகுதி நடந்து, புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். காலை சரியாக 9.30 மணி அளவில் விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்து. மகா தீபாராதனை, கோ பூஜை, மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வேத ஆகம திருமுறை பாராயணம் நடைபெற்றது. கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது.

    • புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.
    • விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்க ப்பட்டன.

    பூதலூர்:

    பூதலூர் அருகே கோவில்பத்து சிவன் கோவில் தெருவில் உள்ள மழை தரும் வேம்பரசு விநாயகர் கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சிறப்பாக நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

    இரண்டு கால யாகசாலை பூஜைகளை திருப்பூர் திருநாமலிங்கேஸ்வர சிவம் தலைமையில் ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் பட்டாச்சாரியார், சந்தோஷ் சிவம் ஆகியோர் நிகழ்த்தினர்.

    மண்டபார்ச்சனை, வேதிகா சார்ச்சனை, பூர்ணாகுதி, உபசார பூஜைகள், வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாடி சந்தானம், ஸ்பரிசாகுதி, த்ரவ்யாகுதி ஆகிய பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.

    பின்னர், கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் ஐயப்ப குருசாமிகள், அய்யப்ப பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பூதலூர் கோவில்பத்து கிராம மக்கள் செய்திருந்தனர். குடமுழுக்கு விழா நடந்த சில‌ நொடிகளில் பலத்த மழை பெய்தது பக்தர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    • சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது.
    • சங்காபிஷேகம் செய்த புனிதநீர் பிரசாதம் அருந்தியும் சாமி அருள் பெற்றனர்.

    திருவையாறு:

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.

    முன்னதாக கோவில் பிரசங்க மண்டபத்தில் புனித நீர் மகா கலசம் மற்றும் புனித நீர் நிறைந்த சங்குகளை நான்கு மூலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு யாக வேள்வியும் வேதபாராயணமும் ஆராதனையும் நடந்தது.

    நேற்று பிரதோஷமும் சோம வாரமும் இணைந்த நாளில் நந்தியெம்பெருமானுக்கும் ஐயாறப்பருக்கும் பிரதோஷம் மற்றும் சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தும், சங்காபிஷேகம் செய்த புனித நீர் பிரசாதம் அருந்தியும் சுவாமி அருள் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • காலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி 6 மணியளவில் இரண்டாம் கால யாகபூஜை தொடங்கியது.
    • 10 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் சுந்தர வளநாடு வாளமர் கோட்டை மாதவமணி தவத்திரு காத்தையா சுவாமிகளின் 26 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் வாண்டையார் இருப்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜன் வரவேற்புரை ஆற்றினர்.

    மேலும் வாளமர் கோட்டை பகுதியை சேர்ந்த இளங்கோவன் மேடை மட்டும் பந்தல் அலங்காரம் செய்து கொடுத்தார்.

    ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் தவமணி அன்னதானம் வழங்கினார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பிஜேபி மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் கலந்து கொண்டனர்.

    சித்தர் வழி தோன்றல் மாதவமணி தவத்தில் காத்யதையா சுவாமிகள் என்ற தலைப்பில் கரந்தை தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் குருநாதன் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

    முன்னாள் அரசு வழக்கறிஞர் நமச்சிவாயம் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

    இந்த விழா காலை 5 மணிக்கு மங்கல இசை உடன் தொடங்கி 6 மணி அளவில் இரண்டாம் கால யாகபூஜை தொடங்கியது.

    மேலும் 10 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    மேலும் இந்த விழாவில் பக்தர்கள் திரளானோர் பங்கு பெற்று தரிசனம் செய்தனர்.

    இறுதியில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • திருவாசக பதிகங்களுடனும் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்பிகை சமேத திருக்கோட்டீஸ்வரர் கோயிலில் ஆழ்வார்களுக்கு திருப்பதி பெருமாளாக அம்பாள் காட்சி தரும் சிறப்பு நிகழ்வு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும் .

    அதன்படி நேற்று கோயிலின் மூலவர் அம்பா ளான திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகங்களும் தொடர்ந்து திருப்பதி வெங்கடாஜலபதி பெருமா ளாக சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு சிவா ச்சாரியா பெருமக்களின் வேத மந்திரங்களுடன் ஓதுவா மூர்த்திகளின் தேவார திருவாசக பதிகங்களுடனும் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

    திருப்பதி வெங்கடா ஜலபதியை தரிசனம் செய்ய முடியாதவர்கள் இக்கோயிலில் வந்து ஆழ்வார்களுக்கு பெருமாளாக காட்சி தந்த அம்மனை மனம் உருகி வேண்டினர்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்ப ட்டது.

    • விநாயகரை நன்றியுடன் போற்றும் விதமாக வீடுகள்தோறும் களிமண் விநாயகரை பூஜையறையில் வைத்து வழிபடுவது.
    • நீர் கொழுக்கட்டை, இனிப்பு வகை கொழுக்கட்டை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    திருவையாறு:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31 ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு திருவையாறு மற்றும் சுற்று வட்டாரங்களிலுள்ள விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடக்கிறது. கிராமங்களில் பொது இடங்களில் களிமண் முதலிய எளிதில் கரையும் பொருள்களால் தயாரிக்கப்பட்டபல்வேறு வடிவங்களில் பிரம்மா ண்டமான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

    பின்னர் அச்சிலைகள் ஆறுகளில் கரைக்கப்பட உள்ளது.

    அகத்திய முனிவர் சினம் கொண்டு கமண்டலத்தில் அடைத்து வைத்த காவிரியை, இரக்க மனம் கொண்டு காக்கை உருவெடுத்து வந்து விடுவித்து, விவசாயம் செழிக்கச் செய்து,குடிநீர் மற்றும் உணவுப்பொருள் விளைச்சலுக்கு வகை செய்த விநாயகரை நன்றியுடன் போற்றும் விதமாக, வீடுகள்தோறும் களிமண் பிள்ளையாரை பூஜையறையில் வைத் வழிபாடு செய்வது வழங்கம்..

    மேலும், விநாயகருக்கு பிடித்தமான வாழைப்பழம், சுண்டல், மோதகம் எனும் பிடி கொலுக்கட்டை, பூர்ணக் கொழுக்கட்டை, நீர்க் கொழுக்கட்டை முதலிய இனிப்பு வகைக் கொழுக்கட்டைகளை நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    பொதுமக்கள் வீடுகளில் பூஜையறையில் வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வதற்கு ஏற்ற வகையில் சிறிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகள் திருவையாறில் பானை வனையும் தொழிலா ளிகளால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக கடைவீதி களில் கொண்டு வந்து வைத்துள்ளனர்.

    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • வேலூர் செல்லாண்டி யம்மன் மற்றும் வேலூர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் , பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன், வேலூர் மகாமாரியம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம்,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மன், வேலூர் செல்லாண்டி யம்மன் மற்றும் வேலூர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்த்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், மகா மாரியம்மன் கோவில், திருவேலீஸ்வரர் கோவில் ,ராஜா கோவில், பாண்டமங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன் கோவில், கொந்த ளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவில், வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கோவில்களில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×