search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாதம்"

    • சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு திருமண விருந்து.
    • கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் மொய் எழுதி விட்டு சென்றனர்.

    சுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வழங்குவதற்காக சேதுபதி பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் உணவு சமைக்கப்பட்டது.நேற்று இரவு மாப்பிள்ளை விருந்து நடந்தது.

    திருக்கல்யாணம் முடிந்ததும் இன்று காலை மற்றும் மதியம் கல்யாண விருந்து நடந்தது. இந்த விருந்தில் கல்கண்டு சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெண்பொங்கல், தயிர் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், பச்சடி, வடை ஆகியவை இடம் பெற்றிருந்தன.

    இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டனர். திருக்கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் திருமண மொய் எழுதி விட்டு சென்றனர்.

    10 டன் எடையில் வண்ண மலர்கள்

    மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக திருமணம் நடைபெற்ற திருக்கல்யாண மண்டபம் மற்றும் சுவாமிகள் எழுந்தருளும் பழைய திருமண மண்டபம் நறுமண மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரூ.30 லட்சம் செலவில் மொத்தம் 10 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊட்டி மற்றும் பெங்களூருரில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திருக்கல்யாணத்திற்காக பிரத்யேகமாக வரழைக்கப்பட்டிருந்த அரியவகை மலர்களும் இடம் பெற்றிருந்தன.

    ஒரு லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம்

    சுவாமி திருக்கல்யாணத்தை காண சித்திரை வீதிகள் முழுவதும் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அங்கேயே அமர்ந்து எல்.இ.டி. திரையில் ஒளி பரபரப்பப்பட்ட திருக்கல்யாணத்தை பார்த்தனர். திருக்கல்யா ணத்தை காண வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத பை மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது.

    5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. 11 சூப்பிரண்டுகள், 17 கூடுதல் சூப்பிரண்டுகள், 35 டி.எஸ்.பி.க்கள், 96 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுரை மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்த சித்திரை வீதிகளில் 30 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் அசம்பாவி தங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

    மேலும் மதுரை மாநகரில் பல இடங்களில் தயார் நிலையில் ஆம்புலன்சு வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. இவை தவிர சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. அதற்காக ஏராளமான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருக்கல் யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு வசதியாக 70 குடி நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    சுகாதாரத்துறை சார்பில் 22 துப்புரவு மேற்பார்வையாளர்கள் தலைமையில் 2 ஆயிரம் பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.
    • கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு மலை மீது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கோயிலுக்கு சொந்தமான லாரியில் 30 க்கும் மேற்பட்ட கேன்களில் அடைத்து பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்ததும் அடிவாரம் பகுதி மக்கள் லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாமிர்தம் கெட்டுப்போன நிலையில் எடுத்துச் செல்லப்படுகிறதா? அல்லது முறைகேடாக வேறு இடத்திற்கு பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டதா என கேள்வி எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அடிவாரம் போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஏற்கனவே தைப்பூச காலத்தில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் தேக்கம் அடைந்து கோயிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் மீண்டும் பஞ்சாமிர்தம் விற்பனையாகாமல் தேக்கமடைந்து அதனை அழிப்பதற்காக கோவில் ஊழியர்கள் எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பொதுவாகவே பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாது என்ற எண்ணம் பக்தர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொட்டி அழிக்கப்படுவதாக வரும் தகவல்களால் பக்தர்களும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். 

    • மகாராஷ்டிராவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 600 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
    • அவர்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 600 கிராம மக்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. பற்றாக்குறை காரணமாக பலருக்கும் மருத்துவமனைக்கு வெளியே உள்ள மரங்களின் அடியில் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.

    நூற்றுக்கணக்கான நோயாளிகள் தரையில் கிடத்தப்பட்டு கயிறுகளில் டிரிப்ஸ் பாட்டில்கள் கட்டப்பட்டிருந்தன. மேலும் சிலருக்கு மரங்களில் பாட்டில்கள் பிணைக்கப்பட்டு டிரிப்ஸ் ஏற்றப்பட்டது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கோவில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் திடீரென மயக்கமடைந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சேகர்ரெட்டி தகவல்
    • இதற்காக ரூ.3 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2-வது வருடாந்திர பவித்ர உற்சவ திருவிழா கடந்த 22-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று காலையில் யாகசாலைபூஜை, உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதல், அபிஷேகம் தீபாராதனை போன்றவை நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர்ரெட்டி, துணை தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மோகன்ராவ், யுவராஜ், துணை செயல் அலுவலர் விஜயகுமார், ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி, வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா, பக்த சேவா தலைவர் ஜெயராம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    அதைத்தொடர்ந்து மதியம் அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்தை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் முன்னிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாலையில் யாகசாலை பூஜையும், இரவு பூர்ணாகுதி மற்றும் விசேஷ பூஜையும் நடந்தது. பின்னர் பகுமானம் அர்ச்சனை, ஏகாந்த சேவை போன்றவை நடைபெற்றது.

    இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் ஸ்ரீ விஷ்ணு பட்டாச்சார்யலு தலைமையில் 7 அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.

    பின்னர் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய அறங்காவலர் குழு தலைவர் சேகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 3 நாட்கள் நடந்தது. இந்த பவித்ர உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் சராசரி 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை அன்று பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் திருப்பதி லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

    படிப்படியாக வாரந்தோறும் லட்டு பிரசாதம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். லட்டு ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும். கன்னியாகுமரியில் இருந்து விவேகானந்தபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வருகிற ஜனவரி மாதம் கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் திருப்பதியில் நடப்பது போன்று 10 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடத்தப்படும். இதற்காக சுவாமிகள் பவனி வருவதற்கான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்கள் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 3 திருமணங்கள் நடந்து உள்ளது. இதற்காக ரூ.3 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூரசம்ஹார விழா நடந்தது.
    • உற்சவருக்கு தீபாரதி காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள திருமேனிநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ் டியை முன்னிட்டு சூர பத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழாவானது அனைத்து சிவாலயங்க ளிலும், முருகப்பெருமான் கோவில்களிலும் நடைபெறு வது வழக்கம். சூரனை வதம் செய்து அசுரர்களிடம் இருந்து தேவர்களை காப்பதே சூரசம்ஹாரம் ஆகும்.

    அந்த வகையில் திருச்சுழி பூமிநாதன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாள் நடை பெறும் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி யில் முருக பெருமான் சூரனை வதம் செய்தார்.முன்னதாக கந்தசஷ்டி விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக முருகப்பெரு மான் அம்பிகையிடம் இருந்து சக்தி ஆயுதமான வேலாயுதம் பெறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனையடுத்து நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் சோழ வந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 12-ம் ஆண்டு சூரசம்ஹார விழா நேற்று மாலை கோவில் முன்பு நடை பெற்றது. பக்தர்கள் வெற்றி வேல்முருகா, வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். இன்று காலை 11 மணியளவில் பாவாடை தரிசனம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரதோசம் கமிட்டியினர் செய்து வருகின்றனர். கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன்-வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மனிடம் இருந்து பூஜிக்கப்பட்ட வேல் வழங்கப்பட்டது. அங்கு சூரன் ஆடு, யானை, சிம்மம் வடிவில் உருமாறி காட்சி அளிக்க முருகன் சூரனை வதம் செய்தார். இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் உற்சவருக்கு தீபாரதி காண்பி க்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்
    • சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக நடைபெறுகிறது

    கன்னியாகுமரி, நவ.2-

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணி கள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னி யாகுமரிக்கு சுற்றுலா பயணி கள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும்.

    இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடு முறை என்பதாலும், கிறிஸ்து மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட் டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும். இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை யொட்டியும் சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர் கள் கூட்டம் அலைமோதும்.

    எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டும். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சபரிமலை சீசனையொட்டி கன்னியா குமரி பகவதி அம்மன் கோவி லில் தினமும் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர் களுக்கு வசதியாக திருக்கோ வில் நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் பக்தர்கள் வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்வதற்கு வசதி யாக "கியூ செட்" அமைந்து உள்ள பகுதியில் சிமெண்ட் தரைத்தளம் அமைக்கும் பணி, மின்விளக்கு வசதி மேல் கூரை சீரமைக்கும் பணி போன்ற பணிகள் நடை பெற்றுள்ளன. கோவிலின் வெளிப்பிரகா ரத்தில் உள்ள நடைபாதை குண்டும், குழியுமாக கிடந்தது. பிரகார நடைபாதையில் சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப் பட்டு சீரமைக்கப் பட்டுள்ளது. கோவிலின் கிழக்கு வாசல் பகுதியும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலை யில் வருகிற 17-ந்தேதி சபரி மலை சீசன் தொடங்குகிறது.

    இந்த சீசனையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வருவார்கள். இதைத்தொ டர்ந்து பக்தர்களுக்கு வசதி யாக கோவிலில் நடை திறக்கும் நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்க திருக்கோவில் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. மேலும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் அய்யப்ப பக்தர்களுக்கு பிரசாதமாக விற்பனை செய்யப்பட்டு வரும் லட்டு, அரவணை, முறுக்கு, பஞ்சா மிர்தம், அதிரசம் போன்ற பிரசா தங்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த சபரிமலை சீசனையொட்டி 1 லட்சம் லட்டு தயாரிக்கும் பணியும் இப்போதே தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார். ஆய்வின் போது நாகர் கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப் பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சர்க்கரை பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
    • பெருமாளுக்கு அக்கார அடிசல் செய்து வணங்கினால் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

    ''மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு அண்டா அக்காரசஅடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...'' திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள். அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.

    ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரஅடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது. உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா?

    நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்கார அடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார். ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார். அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.

    இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்சவமாக கொண்டாடுகிறார்கள். அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு.

    அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரை பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

    புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார அடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை பொய்யாமொழி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
    • மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே நல்லூரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

    விழாவை யொட்டி நல்லூர் பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் பாபநாசம் ஸ்ரீகலைக்கோயில் இசை பள்ளியை சேர்ந்த மாணவிகள் இணைந்து ராதே, கிருஷ்ணன் வேடமணிந்து பங்கேற்ற கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து உறியடி உற்சவமும் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை நல்லூர் ராஜா பாடசாலை நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    • நாச்சியம்மன்-விநாயகர்-காமாட்சி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அரிபுரம் கிராமத்தில் நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அரிபுரம், காலாங்கரைப்பட்டி, வைரவபுரம், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் காரையூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரி சையாக நடந்தது. குன்றக் குடி பொன்னம்பல அடி களார் தலைமையில் உமாபதி சிவாச்சாரியார்கள் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி னர்.

    விழா குழு பணிகளில் குமாரசாமி, தர்மசீலன், கண்ணன், துர்வாசன், கனகரத்தினம், சண்முகம், உமாபாலன், சடையாண்டி, சாந்ததேவன், செல்வ ராஜ்,யசோதரன், ஜெக நாதன், சிவபெருமாள் மாரி யம்மாள் மற்றும் வளர்பிறை விளையாட்டு குழுவினர் ஆகியோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் கண்டவராயன் பட்டி காவல் ஆய்வாளர் அய்ய னார் தலைமையில் காவ லர்கள் ஈடுபட்டனர்.

    வேலங்குடியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகள், லட்சுமி ஹோமம் போன்றவை நடத்தப்பட்டது. நேற்று கணேஷ், குருசாமி குருக்கள் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வீரணமு டையார் மகரிஷி கோத்திர பங்காளி வகையறாக்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சபரிமலைக்கு மாலை அணிவிந்த பக்தர்களும் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு செல்வார்கள்.
    • சுமார் 850 கிலோ பச்சரிசி பலமுறை பயன்படுத்தப்பட்டு கெட்டுப்போன நிலையில் இருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பழமை வாய்ந்த குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி குற்றால சீசன் காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    தரமற்ற பொருட்கள்

    இதேபோன்று சபரி மலைக்கு மாலை அணிவிந்த அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு செல்வார்கள். குற்றாலநாதர் கோவிலில் சுவாமிக்கு படைக்கப்படும் உணவும், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

    இந்நிலையில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நாக சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் குற்றாலநாதர் கோவிலில் உணவு மற்றும் பிரசாதம் தயாரிக்கும் அறையில் திடீர் ஆய்வை செய்தனர். அப்போது அங்கு சுமார் 850 கிலோ பச்சரிசி பலமுறை பயன்படுத்தப்பட்டு கெட்டுப்போன நிலையில் இருந்தது. மேலும் 48 லிட்டர் எண்ணெய் மற்றும் 15 கிலோ பச்சரிசி மாவு, 21/2 கிலோ வெல்லம் உள்ள உள்ளிட்ட தரமற்ற பல்வேறு பிரசாதம் தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அவர்கள் தகவல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர் .

    ஏற்கனவே குற்றாலத்தில் பல ஓட்டல்களில் உணவுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தரம் இல்லாத உணவுகளை அழித்த நிலையில் தற்போது குற்றாலநாதர் கோவிலில் தரமற்ற உணவுப் பொருட்களை உணவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளளர்.

    • சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தனர்.
    • கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநா தசுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் அருள்பாலி க்கிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ப. சிதம்பரம் வருகை புரிந்தார்.

    தொடர்ந்து அவர் தையல்நாயகி அம்மன், வைத்தியநாதசுவாமி, செல்வமுத்துக்குமா ரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.

    அப்போது காங்கிரஸ் கட்சி பிரமுகர் சரச்சந்திரன் உடன் இருந்தனர். 

    ×