search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாகசாலை"

    • பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஏற்கனவே கட்டப்பட்டிருந்த யாகசாலைகளை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்தி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவில் வளாகத்தில் திருமாளிகை பத்தி அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
    • திருப்பணி நிறைவு பெற்ற நிலையில் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அவிநாசி:

    கொங்கு மண்டலத்தில் தேவார பாடல் பெற்ற ஏழு சிவாலயங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ஸ்ரீஅவிநாசி லிங்கேஸ்வரர் கோவில். கொங்கு சோழர்கள் கட்டிய இக்கோவிலில் பாண்டியர், ஹொய்சாளர், விஜயநகரம் மற்றும் மைசூர் மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2008 ஜூலை 14-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போதைய அறங்காவலர் குழு பொறுப்பேற்றதும் திருப்பணி செய்து கும்பாபிஷேக விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் திருமாளிகை பத்தி அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    கும்பாபிஷேக விழா பிப்ரவரி 2-ந்தேதி நடக்க உள்ள நிலையில், மயிலாடு துறையை சேர்ந்த குழுவினர், யாகசாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். கோவில் அன்னதான மண்டபம் அருகே 3 பகுதிகளாக 80 குண்டங்களுடன் யாகசாலைகள் அமைக்கப்படுகின்றன.

    அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மன் மற்றும் சுப்பிரமணியருக்கு நவாக்னி வேள்விசாலை அமைக்கப்படுகின்றன. விநாயகர், பாதிரியம்மன், கால பைரவருக்கு பஞ்சாக்னி யாகசாலையும் அமைக்கப்படுகிறது.

    விநாயகருக்கு பத்மவேதிகை, சிவபெருமானுக்கு, பஞ்சாசன வேதிகை, அம்மனுக்கு ஸ்ரீசக்ர வேதிகை, முருகப்பெருமானுக்கு சற்கோண வேதி கைகள் அமைக்கப்படுகின்றன. 150க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், யாகசாலை பூஜைகளை நிகழ்த்த உள்ளதாக சிவாச்சாரியர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறியதாவது:-

    கோவில் 2ம் பிரகாரத்தில் திருமாளிகை பத்தி மண்டபம், கருங்கல்தளம் அமைப்பது, கதவுகள் புதுப்பிப்பு பணி, கோபுரம் மற்றும் விமானம் பெயின்டிங் பணி முடிந்துள்ளது. தெப்பக்குளம், படிக்கட்டு களும் சீரமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பணி நிறைவு பெற்ற நிலையில் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக, மயிலாடுதுறையை சேர்ந்த குழுவினர் 80 குண்டங்களுடன் கூடிய யாகசாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். விரைவில் யாகசாலையை சுற்றிலும் முளைப்பாலிகை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில்களை புனரமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.
    • விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழைமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் புதிய கோபுரம் கட்டி புனரமைக்கவும், இதேபோல் அருகில் உள்ள விநாயகர், முருகன், பெருமாள் ஆகிய கோவில்களை புனரமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்கள் புனரமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனையடுத்து கோவில்க ளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொ ட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாவாஜனம், கும்ப அலங்காரத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    மேலும் நேற்று காலை பிம்பசுத்தி, ரக்ஸாபந்தனம், நாடி சந்தானம் ஆகிய பூஜைகளுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க கலசங்கள் புறப்பட்டு விநாயகர், முருகன், பெருமாள், மாரியம்மன் ஆகிய கோவில்களின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. இதனையடுத்து மூலவர் சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் குடியநல்லூர், தியாகை, கொங்கராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவி ற்கான ஏற்பாடுகளை அறநி லையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 1008 சங்குகளால் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோவில் உள்ளது.

    சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சகஸ்ரநாம அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

    பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, 1008 சங்குகளால் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை கள் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவாவடுதுறை ஆதீனம் 24-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி மற்றும் பாடகசாலை தலைமை சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதீன கண்காணிப்பாளர் குருமூர்த்தி, கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன், பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 3-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.
    • சொர்ண பைரவருக்கும், பைரவிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் பனையடிகுத்தகை பகுதியில் உள்ள மகா காலபைரவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு மருளாளிகள், தேய்பிறை அஷ்டமி உபயதாரா்கள், மார்கழி மாத உபயதாரா்கள் மற்றும் கிராமமக்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாககடந்த 20-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடந்தது.

    பின்னா், 3-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, இரவு மகா தீபாராதனை, மருந்து சாத்துதல், சொர்ண பந்தனம் நடைபெற்றது.

    பின்னர், காலை பரிவார தெய்வங்களுக்கு பூஜையும், புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமானம், ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து, மாலை சொர்ண பைரவருக்கும், பைரவிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
    • மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நாங்கூரில் மணி மாட கோவில் என்று அழைக்கப்படுகின்ற நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்தக் கோயில் 108 வைணவ திவ்ய தோஷ கோயில்களை ஒன்றாகும்.

    ஆண்டுதோறும் நாங்கூர் பகுதியை சுற்றியுள்ள 11 பெருமாள் கோவில் இந்தக் கோவிலில் தான் எழுந்தருளி கருட சேவை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த பெருமாளை பிரம்மா, இந்திரன் உள்ளிட்ட ஞானிகள் வழிபட்டதாகவும், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பூதத்தா ழ்வார் உள்ளிட்ட பல்வேறு ஆழ்வார்கள் இந்த பெரு மாளை பற்றி பாசுரங்கள் இயற்றியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவிலின் ராஜகோபுரம், சன்னதிகள், சுற்றுச் சுவர் உள்ளிட்டவைகள் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

    நேற்று காலை 7வது கால யாக பூஜை நடந்தது. பின்னர் மகாபூர்ணா வதி செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

    இதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய யாக குடங்கள் ஊர்வலமாக கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் கலசங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் ராஜகோபுரம், சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

    அப்போது அங்கே கூடி இருந்த ஆயிரக்கண க்கான பக்தர்கள் நாராயணா நாராயணா என சரண கோஷமிட்டனர்.

    இதை அடுத்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் மயிலாடுதுறை மாவட்ட எஸ் பி மீனா, தனி துணை ஆட்சியர் கண்மணி , கோட்டாட்சியர் அர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), தாசில்தார் செந்தில்குமார், கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், மாவட்ட திமுக நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடை பெற்றது
    • மாலையில் சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த டி.குமராபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற 41 அடி காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்க ப்பட்டு இன்று (ஞாயிற்று க்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி காலை மகா சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. மாலையில் தேவதா பிரதிஷ்டை நடைபெற்றது. நேற்று மாலை வாஸ்து சாந்தி ஹோமம், அங்கு ரார்பணம், வேத திவ்ய பிரபந்தம் தொடக்கம், அக்னி பந்தனம், மகா சாந்தி ஹோமம், முதல் கால யாகசாலை நடைபெற்றது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடை பெற்றது. பின்னர் யாக சாலையில் வைக்க ப்பட்டுள்ள புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமாக புறப்பட்டது. தொடர்ந்து "ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்" என்ற பக்தி முழக்க த்துடன் புனித நீர் கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரபந்த சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தி யுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • 2-ந் தேதி இரவு கடஸ்தாபனம் நடைபெற்றது.
    • 4-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த நரிமணத்தில் உள்ள பூர்ணபுஷ்கலா அழகிய ஐயனார், சந்திரமதி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 1-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, தன பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை மஹாலட்சுமி ஹோமம், தீப லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.

    தொடர்ந்து, 2-ந் தேதி இரவு கடஸ்தாபனம் நடைபெற்று, முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 3-ந் தேதி 2,3-ம் கால யாகசாலை பூஜையும், 4-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து சந்திரமதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • 6 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 -வது ஆலய மானபரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

    காவிரி வடக்கு பகுயில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ,சாரங்கம் உள்ளிட்ட ஐந்து அரங்கங்க ளில், ஐந்தாவது ஆலயமாக இது போற்றப்படுகிறது.

    இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 2009 -ம் ஆண்டு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியுள்ளன.

    இதற்காக கோபுரங்க ளுக்கு பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் நடை பெற்றது.

    6 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மகாபூர்ணாகுதி யுடன் பாலாலயம் செய்யப்பட்டது.

    பின்னர் புனித கடங்கள் சுபமுகூர்த்த பந்தல்கால் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலய முகப்பில் பந்தல்கால் நடப்பட்டது.

    இந்து அறநிலையத்துறையுடன் ராமானுஜ பக்த கைங்கரிய சபா இணைந்து நடைபெற்ற இந்த திருப்பணியில் தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், நகர மன்ற துணைத் சிவகுமார், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், செயல் அலுவலர் ரம்மியா, மேலாளர் விக்கினேஷ்வரன், நகர கவுன்சிலர் ரிஷி, ஒன்றிய கவுன்சிலர் மோகன் உள்ளிட்ட நூற்றுக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • குடமுழுக்கு விழா கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
    • இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார த்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு கோவிலில் குடமுழுக்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிந்து விட்டதால் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் ( ஞாயிற்றுக்கிழமை ) குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    இதையொட்டி குடமுழுக்கு விழா கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து நேற்று இரவு முதல்கால யாகாசாலை பூஜை தொடங்கியது.

    இன்று காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும், நாளை காலை 8.45 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6.30 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.

    நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் 10.15 மணிக்கு குடமுழுக்கு விழாவும் நடைபெறுகிறது. 11.45 மணிக்கு மகா அபிசேஷகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. 

    • 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • 82 மணிநேர அகண்ட பாராயண நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்தி ற்கு சொந்தமான சுமார் 1500 ஆண்டுகள் பழமையா ன மாயூரநாதசாமி கோவில் உள்ளது. அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறுகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 3-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மா ண்ட யாகசாலைகள் அமை க்கப்பட்டுள்ளது. இதற்காக கங்கை யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டது.

    புனிதநீர் அடங்கிய கடங்களில் கருவறையில் உள்ள சுவாமி- அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் பூஜை செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடங்க ளை தலையில் சுமந்து வந்து யாகசாலையில் பிரவேசம் செய்யப்பட்டு திருவா வடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் முதற்கால யாகசால பூஜைகள் தொடங்கியது.

    பின்னர், 123 யாக குண்டங்களில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, பட்டு வஸ்திர ஹோமம், பூரணாஹதி நடைபெற்று 16 வகையான சோடச தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து. ஓதுவார்களின் 82 மணிநேர அகண்ட பாராயணம், பன்னிரு திருமுறை, திருமுறை பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சொற்பொழிவுகள், சிறப்பு இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, 2,3 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    இதில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி, பல்வேறு மடங்களை சேர்ந்த மடாதிபதிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உபயதாரர்களை கொண்டு ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கி ணைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கோவில் அருகில் குண்டங்கள் அமைக்கப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மெலட்டூர்:

    பாபநாசம் அடுத்த மெலட்டூர் அடிச்சேரி தெருவில் மாணிக்க விநாயகர் கோவில் உள்ளது.

    இக்கோ விலில் கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பரம்பரை அறங்காவலர் பாலசுப்ரமணியன் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் உதவியால் திருப்பணிகள் நடைபெற்றது.

    பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று கும்பாபி ஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக கோவில் அருகில் குண்டங்கள் அமைக்க ப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்று, கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து மூலவர் மாணிக்க விநாயகர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின், விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலசுப்ர மணியன் குடும்பத்தினர் மற்றும் அடிச்சேரி தெரு கிராமமக்கள் செய்திருந்தனர்.

    ×