என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜமுனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
ராஜமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
- மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள், யாகசாலை நடைபெற்றன.
- மேள, தாளங்கள் முழங்க ராஜமுனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அருகே உள்ள ஓடைமதகு ஸ்ரீராஜமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான அஷ்டபந்தன மருந்து திருநெறி தமிழ்மன்றம் சார்பில் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க ஸ்ரீராஜ முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்து இருந்தனர்.
Next Story






