search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தில்லை மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு
    X

    கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தில்லை மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு

    • யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது.
    • மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நெய்க்குப்பை ஊராட்சி வேலங்குடி கிராமத்தில் மகா கணபதி, தர்மசாஸ்தா, தில்லை மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

    முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.

    பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திருமருகல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×