search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balalayam"

    • 6 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 -வது ஆலய மானபரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

    காவிரி வடக்கு பகுயில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ,சாரங்கம் உள்ளிட்ட ஐந்து அரங்கங்க ளில், ஐந்தாவது ஆலயமாக இது போற்றப்படுகிறது.

    இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 2009 -ம் ஆண்டு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியுள்ளன.

    இதற்காக கோபுரங்க ளுக்கு பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் நடை பெற்றது.

    6 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மகாபூர்ணாகுதி யுடன் பாலாலயம் செய்யப்பட்டது.

    பின்னர் புனித கடங்கள் சுபமுகூர்த்த பந்தல்கால் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலய முகப்பில் பந்தல்கால் நடப்பட்டது.

    இந்து அறநிலையத்துறையுடன் ராமானுஜ பக்த கைங்கரிய சபா இணைந்து நடைபெற்ற இந்த திருப்பணியில் தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், நகர மன்ற துணைத் சிவகுமார், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், செயல் அலுவலர் ரம்மியா, மேலாளர் விக்கினேஷ்வரன், நகர கவுன்சிலர் ரிஷி, ஒன்றிய கவுன்சிலர் மோகன் உள்ளிட்ட நூற்றுக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
    • பாலாலய பூஜையை முன்னிட்டு நவக்கிரக சன்னதி அருகே 5 கோபுரங்களுக்காக 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    மதுரை:

    மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 8.4.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கான திருப்பணிகள் மேற்கொள்ள வசதியாக முதற்கட்டமாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 ஒன்பது நிலை கோபுரங்கள் மற்றும் அம்மன் ஏழுநிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) பாலாலயம் நடைபெற உள்ளது.

    முன்னதாக கடந்த 2018-ல் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுவாமி சன்னதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் கடுமையான சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடத்தவும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், பணிகள் அனைத்தும் முடிந்து 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பாலஸ்தாபன நிகழ்ச்சிகள் நேற்று (3-ந் தேதி) தொடங்கியது. அன்று காலை 8.30 மணி முதல் 11 மணி வரை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ் வர பூஜை, புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண் யாகவாசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், ராஜகோபுரங்கள் கலாகர்ஷணம், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

    இன்று (4-ந்தேதி) காலை 7.15 மணிக்கு மேல் 9.05 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு, 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் ராஜகோபுர பாலஸ்தாபன மகா கும்பா பிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    முன்னதாக பாலாலய பூஜையை முன்னிட்டு நவக்கிரக சன்னதி அருகே 5 கோபுரங்களுக்காக 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் புனித நீர் கலசங்கள் 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்தது. பின்னர் உற்சவர் சாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதையடுத்து அங்கு மாம்பலகையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள 5 கோபுரங்களும் வரையப்பட்டு அதற்கு பூஜை செய்து புனிதநீர் ஊற்றி பாலாலயம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    • 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • கோவிலில் உற்சவருக்கு மட்டும் வழிபாடு நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் அடுத்த ஒப்பிலியப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

    அதற்காக ரூ. 3 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி கோவில் விமான பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.

    இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் மூலவர் உள்ளிட்ட மற்ற சன்னதிகளுக்கு திருப்பணிகள் மேற்கொள்வதற்காக இன்று காலை மூலவர் பாலாலயம் நடைபெற்றது.

    இதனால் கோவிலில் உற்சவருக்கு மட்டும் வழிபாடு

    நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் சாந்தா கூறுகையில்:-

    ஒப்பிலியப்பன் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அதற்காக திருப்பணிகள் கடந்த ஆண்டில் விமான பாலாலயம் மேற்கொள்ளப்பட்டு,

    ராஜகோபுரம், மூலவர் விமானம், அர்த்தமண்டபம், புதிய கொடி

    மரம், திருக்கண்ணாடி பள்ளியறை உள்ளிட்ட 90 சதவீத

    பணிகள் தற்போது முடிவ டைந்துள்ளன. வருகிற 29-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்றார்.

    • பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.
    • மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்.

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோயில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.

    தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

    மகா பூர்ணாகுதியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில், மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிவ பாடகசாலை சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கனேசன், காசாளர் வெங்கடேசன் மற்றும் ஆன்மீக பொறுப்பாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இக்கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது.
    • வருகிற 16-ந்தேதி பாலாலயம் செய்து பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட த்தொடரில் நடைபெற்ற விவாதத்தின் போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ. இரா.காமராஜ் பேசியதாவது:-

    வாஞ்சிநாத சுவாமி கோவில்

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியத்தில் வாஞ்சிநாத சுவாமி கோவில் உள்ளது. காசியை விட ஒரு வீசம் அதிகம் உள்ளது என்ற பெருமை கோயிலுக்கு உண்டு.

    இக்கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதியும் உள்ளது. வயல்வெளிகள், நாணல் புல் செடிகள் உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் இதுவரை ஒருவர் கூட பாம்பு கடித்து இறக்கவில்லை என்பது இப்பகுதியின் சிறப்புகளில் ஒன்று.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேக பணிகள் 6.3.22 தேதியில் ரூ.94.65 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது.

    ஓராண்டாக 20 சதவீதம் கூட பணிகள் நிறைவடை யவில்லை. ஆகவே கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இக்கோவில் வெளிப்புற சுற்றுச்சுவரை அறநிலையத்துறை சார்பில் கருங்கல் கொண்டு அமைத்து தர வேண்டும்.

    அவலியநல்லூர் சட்டநாத கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

    விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அபய வரதராஜ பெருமாள் கோவில்

    அதுபோல் ஆலங்குடியில் உள்ள அபய வரதராஜ பெருமாள் கோவில் மொட்டை கோபுரமாக உள்ளது. இதற்கு ராஜகோபுரம் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவிலில் வெளிப்புற சுற்றுச் சுவர் உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்நேரத்தில் கருங்கல் சுவராக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டால் உபயோதாரர்களிடம் ஆட்சேபம் ஏற்படும்.

    எனவே இக்கோவிலில் மீதமுள்ள இரண்டு சுற்று பிரகாரங்களை கருங்கல் சுவர்களாக அமைக்க கருத்துரு கேட்டு பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    அவலியநல்லூர் சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக ரூ .34.30 லட்சம் திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    பணிகள் 16.4.2023 அன்று பாலாலயம் செய்து தொடங்கப்பட உள்ளது.

    இதில் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் ஆலங்குடி அபய வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது.

    அதிலுள்ள மொட்டை கோபுரம் தொல்லியல் துறை மூலம் ஆய்வுகள் நடத்தி, மொட்டை கோபுரத்தின் உறுதித்தன்மையை அறிந்து அதற்கேற்ற வகையில் ராஜகோபுரம் கட்டி தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.
    • 27-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகாமக விழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. பழமையான இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவில் விமான பாலாலய விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யா யாகவாசனம், கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.

    தொடர்ந்து 25-ந் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    26-ந் ேததி 3-ம் கால யாகசாலை பூஜைகளும், 27-ந் தேதி நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.

    தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விமான பாலாலய விழா குழுவினர் மற்றும் மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • மதுரை முள்ளிபள்ளத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது.
    • பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புணரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இங்கு கும்பாபிஷேக புணரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதற்காக கோவில் முன்பு பாலாலய பூஜையை ஸ்ரீவத்சன் குழுவினர் நடத்தினர். நிர்வாக அதிகாரி இளமதி, சோழவந்தான் கோவில் சரக ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற பாலாலய விழாவில் கணக்கர் பூபதி, ஆலய பணியாளர் வசந்த், திருப்பணிக்குழு நிர்வாகிகள் தலைவர் கோபாலன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×