search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவாஞ்சியம் கோவில் கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த வேண்டும்- சட்டபேரவையில் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    இரா.காமராஜ் எம்.எல்.ஏ.

    ஸ்ரீவாஞ்சியம் கோவில் கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த வேண்டும்- சட்டபேரவையில் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • இக்கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது.
    • வருகிற 16-ந்தேதி பாலாலயம் செய்து பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட த்தொடரில் நடைபெற்ற விவாதத்தின் போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ. இரா.காமராஜ் பேசியதாவது:-

    வாஞ்சிநாத சுவாமி கோவில்

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியத்தில் வாஞ்சிநாத சுவாமி கோவில் உள்ளது. காசியை விட ஒரு வீசம் அதிகம் உள்ளது என்ற பெருமை கோயிலுக்கு உண்டு.

    இக்கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதியும் உள்ளது. வயல்வெளிகள், நாணல் புல் செடிகள் உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் இதுவரை ஒருவர் கூட பாம்பு கடித்து இறக்கவில்லை என்பது இப்பகுதியின் சிறப்புகளில் ஒன்று.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேக பணிகள் 6.3.22 தேதியில் ரூ.94.65 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது.

    ஓராண்டாக 20 சதவீதம் கூட பணிகள் நிறைவடை யவில்லை. ஆகவே கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இக்கோவில் வெளிப்புற சுற்றுச்சுவரை அறநிலையத்துறை சார்பில் கருங்கல் கொண்டு அமைத்து தர வேண்டும்.

    அவலியநல்லூர் சட்டநாத கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

    விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அபய வரதராஜ பெருமாள் கோவில்

    அதுபோல் ஆலங்குடியில் உள்ள அபய வரதராஜ பெருமாள் கோவில் மொட்டை கோபுரமாக உள்ளது. இதற்கு ராஜகோபுரம் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவிலில் வெளிப்புற சுற்றுச் சுவர் உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்நேரத்தில் கருங்கல் சுவராக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டால் உபயோதாரர்களிடம் ஆட்சேபம் ஏற்படும்.

    எனவே இக்கோவிலில் மீதமுள்ள இரண்டு சுற்று பிரகாரங்களை கருங்கல் சுவர்களாக அமைக்க கருத்துரு கேட்டு பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    அவலியநல்லூர் சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக ரூ .34.30 லட்சம் திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    பணிகள் 16.4.2023 அன்று பாலாலயம் செய்து தொடங்கப்பட உள்ளது.

    இதில் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் ஆலங்குடி அபய வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது.

    அதிலுள்ள மொட்டை கோபுரம் தொல்லியல் துறை மூலம் ஆய்வுகள் நடத்தி, மொட்டை கோபுரத்தின் உறுதித்தன்மையை அறிந்து அதற்கேற்ற வகையில் ராஜகோபுரம் கட்டி தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×