search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupanis"

    • நேற்று 2 மற்றும் 3-ம் கால யாகசால பூஜைகள் நடைபெற்றன.
    • நாளை பகல் 11.45 மணிக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூக்கார தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

    பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு கடந்த 29-ந் தேதி விக்னேஷ்வர பூஜை நடைபெற்றது. 30-ந் தேதி கணபதி ஹோமம் நடந்தன.

    31-ந் தேதி சிவகங்கை பூங்காவில் இருந்து யானை மீது புனிதநீர் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது.

    அன்றைய தினம் மாலை முதல் கால யாக பூஜைகள் தொடங்கின.

    நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

    இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விஷேச ஹோமம், திரவியங்கள் ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று மாலை ஐந்தாவது கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.

    நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 6 மணிக்கு 6-வது கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    பின்னர் பூர்ணாஹூதி தீபாராதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் சாவடி காமாட்சி அம்மன், விநாயகர் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையடுத்து கடம் புறப்பாடு நடைபெற உள்ளது.

    காலை 10 மணிக்கு சுப்பிரமணியர் மற்றும் அனைத்து விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பகல் 11.45 மணிக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • இரண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.
    • மகா சாந்தி திருமஞ்சனம் ஹோமம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் வருடம் தோறும் இரண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பாலாலயம் கடந்த 5-ந்தேதி பாலாலயம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து பகவத் பிரார்த்தனை புண்ணியாவாஜனம், ஹோமம், பூர்ணாஹதி மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டன. நேற்று 6-ந் தேதி காலை புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், ஹோமம், பூர்ணா ஹதி, மாலை மகா சாந்தி ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனம் ஹோமம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இறுதி நாளான இன்று அக்னி பிரவேசம், மகா பூர்ணாஹதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். இதனைத் தொடர்ந்து பாலாலயம் நடைபெற்று கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.
    • மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்.

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோயில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.

    தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

    மகா பூர்ணாகுதியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில், மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிவ பாடகசாலை சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கனேசன், காசாளர் வெங்கடேசன் மற்றும் ஆன்மீக பொறுப்பாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×