search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shrine"

    • காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடை பெற்றது
    • மாலையில் சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த டி.குமராபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற 41 அடி காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்க ப்பட்டு இன்று (ஞாயிற்று க்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி காலை மகா சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. மாலையில் தேவதா பிரதிஷ்டை நடைபெற்றது. நேற்று மாலை வாஸ்து சாந்தி ஹோமம், அங்கு ரார்பணம், வேத திவ்ய பிரபந்தம் தொடக்கம், அக்னி பந்தனம், மகா சாந்தி ஹோமம், முதல் கால யாகசாலை நடைபெற்றது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடை பெற்றது. பின்னர் யாக சாலையில் வைக்க ப்பட்டுள்ள புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமாக புறப்பட்டது. தொடர்ந்து "ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்" என்ற பக்தி முழக்க த்துடன் புனித நீர் கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரபந்த சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தி யுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • 82 மணிநேர அகண்ட பாராயண நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்தி ற்கு சொந்தமான சுமார் 1500 ஆண்டுகள் பழமையா ன மாயூரநாதசாமி கோவில் உள்ளது. அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறுகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 3-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மா ண்ட யாகசாலைகள் அமை க்கப்பட்டுள்ளது. இதற்காக கங்கை யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டது.

    புனிதநீர் அடங்கிய கடங்களில் கருவறையில் உள்ள சுவாமி- அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் பூஜை செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடங்க ளை தலையில் சுமந்து வந்து யாகசாலையில் பிரவேசம் செய்யப்பட்டு திருவா வடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் முதற்கால யாகசால பூஜைகள் தொடங்கியது.

    பின்னர், 123 யாக குண்டங்களில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, பட்டு வஸ்திர ஹோமம், பூரணாஹதி நடைபெற்று 16 வகையான சோடச தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து. ஓதுவார்களின் 82 மணிநேர அகண்ட பாராயணம், பன்னிரு திருமுறை, திருமுறை பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சொற்பொழிவுகள், சிறப்பு இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, 2,3 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    இதில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி, பல்வேறு மடங்களை சேர்ந்த மடாதிபதிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உபயதாரர்களை கொண்டு ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கி ணைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தொடர்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
    • பெண்கள் முலைப்பாரி எடுத்து கோவிலின் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பிரஹன்நாயகி அம்பிகை சமேத அருணஜடேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் திருப்பணி கள் முடிவடைந்த நிலையில் வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதற்காக கோவிலின் அருகே 59 யாகம் குண்டங்களுடன் கூடிய பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, இன்று (3-ந் தேதி) முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு யாகசாலை மண்டபத்தில் புனிதநீர் கலசங்கள் வைக்கும் நிகழ்வு நடந்தது. திருப்ப னந்தாள் மன்னியாற்றில் இருந்து புனிதநீர் கொண்ட கலசங்களுக்கு திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் யானையின் மீது வைத்து, மேளதாளங்கள் முழங்க, பெண்கள் முலைப்பாரி எடுத்து கோவிலின் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து, கோவிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட யாகசாலையில் புனிதநீர் கலசங்கள் வைக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், காசித்திருமட அதிபர் எஜமான் சுவாமிகள், இளவரசு தம்பிரான் சுவாமிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • நாளை 3-ந் தேதி முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
    • சிறப்பு பூஜைகள் நடந்து, தொடர்ந்து, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் புகழ்பெற்ற ஸ்ரீ பிரஹன்னநாயகி அம்பிகை சமேத அருண ஜடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாக விளங்கும் இக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 7-ம் தேதி நடக்கிறது.

    வருகிற 3-ம் தேதி முதல் கால யாக பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து எட்டு காலை யாக பூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் நடந்தது.

    தருமபுரம் ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருமுன்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது தொடர்ந்து மகாபூர்ணாஹூதியும் தீபாராதனையும் நடந்தது.

    வருகிற 5ந் தேதி திருவீதி விநாயகர், தேரடி விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேகமும், 6ஆம் தேதி தருமை ஆதீனம் ஊருடையப்பர் கோயில், காசி திருமடம் ஸ்ரீ வீரியம்மன், ஸ்ரீ விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களின் கும்பாபிஷேகமும் வருகிற 7ந் தேதி பிரஹன் நாயகி அம்பிகை சமேத அருண ஜடேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழாவும் வெகு விமரிசையாக நடக்கிறது.

    • கடம் புறப்பாடு கோவிலை வலம் வந்து கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது.
    • கருடன் வட்டமிட விமா–னத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் என்பதால் இத்தலம் கார்க்கோடகன்குடி என்று வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கோடங்குடி என அழைக்கப்படுகிறது.

    1951-ஆம் ஆண்டு காஞ்சி பெரியவர் வந்து வழிபட்ட சிறப்புக்குரிய தலமான இக்கோயிலில் கடைசியாக 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    15 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்ட மிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி நிறைவுற்றது. இதையடுத்து, புதன்கிழமை காலை விக்னேஸவர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    கும்பாபிஷேக தினமான நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்து கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது.

    விக்னேஷ் சிவாச்–சாரியார் தலைமையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கருடன் வட்டமிட விமா–னத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் கருவறையில் உள்ள கார்கோடகநாதர் சிவலிங்கதிற்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் ஆலய அர்ச்சகர் கனேச சிவம் குருக்கள், ஐ.ஏ.எஸ். ஜெயந்தி ரவி, ராமமூர்த்தி ஐயர், சுந்தரேசர் ஐயர், ஆகியோர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஊராட்சி மன்ற தலைவர், கவிஞர் ராதா கிருஷ்ணன், தீயணைப்பு துறை கோட்ட அலுவலர் முத்துகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    • புனிதநீர் அடங்கிய கடம் யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.
    • விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலி லயன் கரை பகுதியில் சூடாமணி முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    புதிதாக பிரம்மாண்டமாக சூடாமணி முனியாண்டவர் சிலை அமைக்கப்பட்டு பரிவார தெய்வங்களான கருப்புசாமி, மதுரை வீரன், நாகாத்தம்மன், ஆகிய சந்நிதிகளுக்கு புதுவர்ணம்பூசி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி கோவிலின் அருகில் யாக சாலை அமைக்கப்பட்டு செம்மேனிநாத சிவாச்–சாரியார் தலைமையில் கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது. காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் யாகசாலையில் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.

    பின்னர் புனித நீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு சூடாமணி முனியாண்டவருக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு வாணவேடிக்கை நடைபெற்றது.

    குடமுழுக்கு விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புனிதநீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து பூஜிக்கப்பட்டது.
    • புனித நீர் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அபயாம்பி–கை உடனாகிய மயூரநாதர் கோவிலுக்கு 1972 ஆம் ஆண்டு 3 வயது குட்டியாக அபயாம்பிகை என பெயரிட்டு யானை அழைத்துவரப்பட்டது.

    இந்த யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொன்விழாவாக கொண்டாடினர்.

    இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவிரி ஆற்றுயிலிருந்து புனித நீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து அதில் புனித நீர் அடங்கிய கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது.

    சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணைக் கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், ராஜகுமார் எம்.எல்.ஏ, நகர் மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை விமான கும்பத்தை அடைந்தனர்.
    • வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க இரண்டு கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, ஆறுபாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ ஓம் சக்தி மா காளியம்மன் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கடந்த 9ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து மறுநாள் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேக தினமான நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.

    அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க இரண்டு கோவில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் விழா குழுவினர்கள் ரெத்தினசபாபதி சிவநேசன், தென்னரசு, சீனு, செந்தில், பழநிவேல், கலியமூர்த்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • யாகசாலை மண்டபத்தில் 45 புண்ணிய தீர்த்தங்களுக்கு சிறப்பு ஆராதனை.
    • புராதனமிக்க கோவில்களை சிறப்பான முறையில் திருப்பணி செய்து குடமுழுக்கு.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மருத்து வக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் 84 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.

    இதனையொட்டி யாக சாலை மண்டபம் அமைத்து பூர்வாங்க பூஜையின் முதல் நிகழ்வாக சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் மூலவர் சன்னதிகளில் திருவிளக்கு ஏற்றும் வைபவம் நடந்தது.

    மன்னார்குடி ஜீயர் இதனை மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் திருவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    சென்னை நங்கநல்லூர் பிரம்மஸ்ரீ ரமணி அண்ணா, ஆடு துறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், சிவஞா னசம்பந்த சிவாச்சாரியார் ஆகியோர் திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    யாகசாலை மண்டபத்தில் 45 புண்ணிய தீர்த்தங்களுக்கு சிறப்பு ஆராதனை செய்து பக்தர்களுக்கு மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கினார்.

    பின்னர் அவர் நிருப ர்களிடம் கூறி யதாவது:-

    பழமையான, புராதனமிக்க கோவி ல்களை சிறப்பான முறையில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்வது நாட்டிற்கும், மக்களுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் நல்லது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் அரசு, தலையிடுவது மிகவும் தவறானது. சமய பாரம்பரிய செயல்பாடுகளில் அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.

    கோவில்களில் வரக்கூடிய வருமானங்களை சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்று ம் பணியாளர்களுக்கு தர அரசு முன் வர வேண்டு ம். கோவில்களின் வருமா னத்தை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்ப டுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரஷ்யா, இங்கிலாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த 30 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் வந்தனர்.
    • நவகிரக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கோவிலுக்கு வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சீடர் சுவாமி பிரணவானந்தா தலைமையில் தைவான், ஸ்பெயின், கஜகஸ்தான், குரோஷியா, ரஷ்யா, இங்கிலாந்து, பங்களாதேஷ், அர்ஜென்டினா, உருகுவே ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த 30 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் வந்தனர்.

    அவர்கள் சுவாமி, அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி, செவ்வாய் பகவான் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    முன்னதாக வெளிநாட்டினர் நவகிரக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    கோவில் கோபுரங்கள் மற்றும் சிற்பங்களை பார்த்து வியந்த வெளிநாட்டினர் சுவாமி சன்னதிகள் கோபுரங்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
    • மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    மெலட்டூர் அருகே உள்ள காவளூர் கிராமத்தில் வீரனார் கோவில் திருப்பணி இளங்கோவன், சௌந்தராஜன், தீபக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் உதவியுடன் நடைபெற்று வந்தது. திருப்பணி முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவளூர் ஊராட்சிமன்ற தலைவர் செந்தில்குமார் உள்பட முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்து இருந்தனர்.

    • பரிவார தெய்வங்களான பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகர் சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தொப்படி மாரியம்மன் எனும் சாரடி மாரியம்மன் கோவில் உள்ளது.

    பழமையான இக்கோவிலில் நூறு ஆண்டுக்கு முன்ன தாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோவில் ஸ்தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிதிலமடைந்த இக்கோ வில் திருப்பணிகள் செய்திட முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நிறைவு பெற்றது.

    தொடர்ந்து திங்கட்கிழமை விக்னே ஸ்வர பூஜையுடன் முதல் கால யாக சாலை பூஜை கள் தொடங்கியது.

    விழா அன்று நான்கு காலயாக சாலை பூஜை நிறைவடைந்து பூர்ணா ஹூதி மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞாளனசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோவில் விமான கலசத்தில்புனித நீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களான பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகர் சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்செய்து தீபாராதனை காட்ட ப்பட்டது.

    இதில் திருஞானச ம்பந்த தம்பிரான் சுவா மிகள், சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சாமிகள், திருநாவுக்கரசு தம்பிரான் சாமிகள் மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ணன் நகர்மன்ற உறுப்பினர் நித்யா தேவி பாலமுருகன், டெம்பிள் டவுன் ரோட்டரி சேர்ந்த வீரபாண்டியன், ரோட்டரி சங்கம் சுசீந்திரன், மகாலிங்கம், திமுகவை சேர்ந்த அண்ணா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    ×