search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாரடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், தருமபுர ஆதீனம் கலந்து கொண்டதையும் காணலாம்.

    சாரடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • பரிவார தெய்வங்களான பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகர் சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தொப்படி மாரியம்மன் எனும் சாரடி மாரியம்மன் கோவில் உள்ளது.

    பழமையான இக்கோவிலில் நூறு ஆண்டுக்கு முன்ன தாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோவில் ஸ்தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிதிலமடைந்த இக்கோ வில் திருப்பணிகள் செய்திட முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நிறைவு பெற்றது.

    தொடர்ந்து திங்கட்கிழமை விக்னே ஸ்வர பூஜையுடன் முதல் கால யாக சாலை பூஜை கள் தொடங்கியது.

    விழா அன்று நான்கு காலயாக சாலை பூஜை நிறைவடைந்து பூர்ணா ஹூதி மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞாளனசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோவில் விமான கலசத்தில்புனித நீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களான பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகர் சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்செய்து தீபாராதனை காட்ட ப்பட்டது.

    இதில் திருஞானச ம்பந்த தம்பிரான் சுவா மிகள், சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சாமிகள், திருநாவுக்கரசு தம்பிரான் சாமிகள் மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ணன் நகர்மன்ற உறுப்பினர் நித்யா தேவி பாலமுருகன், டெம்பிள் டவுன் ரோட்டரி சேர்ந்த வீரபாண்டியன், ரோட்டரி சங்கம் சுசீந்திரன், மகாலிங்கம், திமுகவை சேர்ந்த அண்ணா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×