என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வைத்தீஸ்வரன் கோவிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்
    X

    வைத்தீஸ்வரன் கோவிலில் வழிபாடு செய்த வெளிநாட்டினர்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷ்யா, இங்கிலாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த 30 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் வந்தனர்.
    • நவகிரக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கோவிலுக்கு வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சீடர் சுவாமி பிரணவானந்தா தலைமையில் தைவான், ஸ்பெயின், கஜகஸ்தான், குரோஷியா, ரஷ்யா, இங்கிலாந்து, பங்களாதேஷ், அர்ஜென்டினா, உருகுவே ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த 30 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் வந்தனர்.

    அவர்கள் சுவாமி, அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி, செவ்வாய் பகவான் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    முன்னதாக வெளிநாட்டினர் நவகிரக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    கோவில் கோபுரங்கள் மற்றும் சிற்பங்களை பார்த்து வியந்த வெளிநாட்டினர் சுவாமி சன்னதிகள் கோபுரங்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×