search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை மாயூரநாதசாமி கோவிலில் யாகசால பூஜைகள் தொடக்கம்
    X

    யாகசால பூஜைகள் திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் மடாதிபதிகள் தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாயூரநாதசாமி கோவிலில் யாகசால பூஜைகள் தொடக்கம்

    • 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • 82 மணிநேர அகண்ட பாராயண நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்தி ற்கு சொந்தமான சுமார் 1500 ஆண்டுகள் பழமையா ன மாயூரநாதசாமி கோவில் உள்ளது. அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறுகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 3-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மா ண்ட யாகசாலைகள் அமை க்கப்பட்டுள்ளது. இதற்காக கங்கை யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டது.

    புனிதநீர் அடங்கிய கடங்களில் கருவறையில் உள்ள சுவாமி- அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் பூஜை செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடங்க ளை தலையில் சுமந்து வந்து யாகசாலையில் பிரவேசம் செய்யப்பட்டு திருவா வடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் முதற்கால யாகசால பூஜைகள் தொடங்கியது.

    பின்னர், 123 யாக குண்டங்களில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, பட்டு வஸ்திர ஹோமம், பூரணாஹதி நடைபெற்று 16 வகையான சோடச தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து. ஓதுவார்களின் 82 மணிநேர அகண்ட பாராயணம், பன்னிரு திருமுறை, திருமுறை பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சொற்பொழிவுகள், சிறப்பு இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, 2,3 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    இதில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி, பல்வேறு மடங்களை சேர்ந்த மடாதிபதிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உபயதாரர்களை கொண்டு ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கி ணைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×