search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிகே சேகர்பாபு"

    • முதலமைச்சர் வட னெ்னையில் தனிக்கவனம் செலுத்தி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருக்கின்றார்.
    • நிச்சயம் அந்த பணிகள் அனைத்தையும் மேற்கொண்டால் வடசென்னை தென் சென்னைக்கு நிகராக உயரும்.

    சென்னை:

    சென்னை, அகரம், ஜெகநாதன் தெருவில், வட சென்னை பாராளுமன்ற இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தளவில் தினந்தோறும் தேர்தல் பணியை எப்போதும் செய்து கொண்டிருக்கின்ற கழகத் தோழர்கள் நிறைந்த பகுதி, மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவரின் நல்வழியை பின்பற்றுகின்ற மக்கள் நல விரும்பிகள் தான், இந்த தொகுதியில் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களாகவும், கட்சியினுடைய முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் மக்களோடு தினசரி மக்களுடைய பிரச்சினைகளை அணுகுவதால் இந்த முறை இந்த கொளத்தூர் தொகுதியிலேயே பதிவாகின்ற வாக்குகளில் 75 சதவீதம் அளவிற்கு தி.மு.க. உதயசூரியன் சின்னம் பெறும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.

    கலாநிதி, நமது ஆட்சி வந்த பிறகு 34 மாதங்கள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஆட்சி இல்லாத போது அரசிடம் போராடி பல்வேறு நலத்திட்டங்களை பெற்றவர், பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்துவதற்குண்டான நடவடிக்கையில் ஈடுபட்டவர். ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய காலத்தில் கொடுங்கையூர் குப்பைகள் கொட்டும் வளாகம், கணேசபுரம் மேம்பாலம். ஆர்.கே. நகர் மேம்பாலம் போன்ற, மக்களுக்கு கால காலத்துக்கும் பயன்படுகின்ற பல நலத்திட்டங்களை கொண்டு வந்தவர்.

    மீண்டும் அவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த வட சென்னை பாராளுமன்ற தொகுதியினுடைய வளர்ச்சிக்கும், தேவைகளுக்கும் கட்டமைப்புகளை உயர்த்துவதற்கும் தொடர்ந்து இப்போது போல் பாடுபடுவார்.


    முதலமைச்சர் வட னெ்னையில் தனிக்கவனம் செலுத்தி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருக்கின்றார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தற்போது வட சென்னையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பூங்காக்கள், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள், கடற்கரையை அழகுபடுத்துகின்ற பணிகள், சந்தைகள், வணிக வளாகங்கள் அதேபோல டயாலிசிஸ் அமைப்புகள் என்று கிட்டத்தட்ட மாநகராட்சி சமூக நலக்கூடங்கள் என்று 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக, ஏற்கனவே வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    இந்த மாதம் 14-ந் தேதி, சென்னை தங்க சாலை மணிக் கூண்டு அருகிலே ரூபாய் 4,414 கோடி அளவிற்கு வளர்ச்சி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார். அறிவித்தார் என்பதைவிட பிரகடனப்படுத்தி இருக்கின்றார்.

    நிச்சயம் அந்த பணிகள் அனைத்தையும் மேற்கொண்டால் வடசென்னை தென் சென்னைக்கு நிகராக உயரும்.

    அனைவருடைய மேம்பாட்டிற்காகவும் நிச்சயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கின்ற இந்த திட்டங்களை நிறைவேற்றுவார்.

    தொடர் பயணமாக 20 ஆண்டுகளுக்கு இந்த மாவட்டத்தை முன்னேற்றத்துடன் கூடிய ஒரு மாவட்டமாக கொண்டு வருவதற்கு அனைத்து பணிகளையும் தொலைதூர நோக்கோடு திட்டமிட்டு இருக்கின்றார். இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் இனி கால் நூற்றாண்டுகள் தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்திலேயே என்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலை நோக்கு திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கின்ற மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ஓர் திட்டம்.
    • அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய பாலிடெக்னிக், ஐ.டி.ஐ போன்ற படிப்புகள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

    சென்னை:

    சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவரும் மற்றும் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு இன்று நம்மாழ்வார்பேட்டை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:-

    சென்னை, நம்மாழ்வார்பேடை, அரசு தொழில்நுட்ப கல்லூரியில் "வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்" ஒரு பகுதியாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் வடசென்னை இளைஞர்களின் திறன் பயிற்சிக்காகவும் மற்றும் கூடுதல் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் "திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்" அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கின்ற மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ஓர் திட்டம். அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய பாலிடெக்னிக், ஐ.டி.ஐ போன்ற படிப்புகள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இப்பாலிடெக்னிக் கல்லூரியில் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள், அடிப்படை தேவைகள், மாணவர்கள் பயிலும் வகுப்பறைகளை மேம்படுத்துதல், அதற்குண்டான உபகரணங்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவைகள் குறித்து இன்றைக்கு துறை சார்ந்த செயலாளர் சி.சமயமூர்த்தி, உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, ஆணையாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அதேபோல் ஐஏஎஸ் அதிகாரிகள் திவ்யா மாநகராட்சி ஆர்டிசி சென்ட்ரல் பிரவீன் அவர்களுடனும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தொழில் பயிற்சிக்காக திறன் மேம்பாட்டு சார்பில் தையல் பயிற்சியும், கணினி பயிற்சியும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இப்பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்குவதற்கு இக்கல்லூரி முதல்வர் உறுதியளித்திருக்கிறார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழே அதிகமாக மக்கள் வசிக்கின்ற பகுதி என்பதால் பயனுள்ள ஒரு செயலாக இந்த செயல் அமையும் என்பது நம்பிக்கையோடு இருக்கிறோம்.

    இந்த தொழில் பயிற்சிக்கு வருபவர்களுக்கு தொழில் பயிற்சி முடித்தவுடன் சான்றிதழும், தொழில் பயிற்சி வருகின்றவர்களுக்கு ஊக்கதொகையும் வழங்கப்பட இருக்கின்றது. அதுவே இது ஒரு அரிய வாய்ப்பாக பயன்படுத்தி இந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவோடு இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன.

    மேலும் இந்த பாலிடெக்னிக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தர முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. துறை சார்பில் தருகின்ற நிதியையும், அதேபோல் கூடுதலாக சி.எஸ்.ஆர். பணத்தையும் பெற்று இந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இருக்கிறோம். இந்த கட்டித்திலேயே இருக்கின்ற இந்த கேம்பஸ் 5.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் என்பதால் பயன்பாட்டில் இல்லாத இடத்தில் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற கட்டமைப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். இன்றைய ஆய்வின் தொடர்ச்சியாக இம்மாதம் நவம்பர் 13, 14, 15 ஆகிய மூன்று தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

    • சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவில்களை புனரமைத்து, பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • ஆய்வின்போது சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, சென்னை மாவட்டக் குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    சென்னை:

    சென்னையில் சிதிலம் அடைந்த நிலையில் உள்ள கோவில்களை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் சென்னை மண்டல இணை ஆணையர்-1 ல் சேதமடைந்து இருக்கும் 25 கோவில்கள் பட்டியலிடப்பட்டு அதில் முதல் கட்டமாக 7 கோவில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

    சூளை பகுதியில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களான வெங்கடா ஜலபதி பரிபாலன சபா, லட்சுமி அம்மன் கோவில், தர்மராஜா கோவில், திரவுபதி அம்மன் கோவில், வேம்புலி அம்மன் கோவில், சுந்தரராஜ பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் குட முழுக்கு நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கோவிலின் மேற்கூரை மற்றும் சுவர்கள் ஆலமர விழுதுகளால் சிதிலடைந்தள்ளதாலும் மண்டல மற்றும் மாநில வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிதிலமடைந்த கோவில்களை புனரமைத்திட திட்ட மதிப்பீடுகள் தயாரித்து, 2024-25 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் சேர்த்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    மேலும், சூளை, லட்சுமி அம்மன் கோவில் சுற்றுச் சுவருக்கு உள்ளே பூங்கா நகர், சென்னமல்லீஸ்வரர் கோவிலின் அடிமனை தாரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அமைக்கப்பட்டு உள்ள கடைகள் மற்றும் இரும்பு பட்டறைகள், திரவுபதி அம்மன் தர்மராஜா கோவில் சுற்றுச்சுவருக்கு உட்புறம் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள 10 கடைகள், வேம்புலி அம்மன் கோவிலின் சுற்றுச்சுவருக்கு முன்புறம் கோவில் மற்றும் அதற்கு செல்லும் பாதையை மறைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ள 2 கடைகள் ஆகியவற்றை சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். தர்மராஜா கோவிலுக்கு எதிரே சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்படி சுவா தீனம் பெறப்பட்ட கந்தக்கோட்டம், முத்துகுமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தினை புனரமைத்து மீண்டும் பயன் பாட்டிற்கு கொண்டுவரவும், சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவில்களை புனரமைத்து, பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, சென்னை மாவட்டக் குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • திருத்தணியில் புதிய வெள்ளித்தேர் கடந்த வாரம் வீதிவுலா தொடங்கி வைக்கப்பட்டது.
    • பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர்களை ஓட வைத்த ஆட்சி இந்த ஆட்சியாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை, நங்கநல்லூர், ஆதிவ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத் தேர் செய்திட ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் உருவாக்கும் திருப்பணியை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறையானது திருக்குளங்களை சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல், நந்தவனங்களை உருவாக்குதல், ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த கோவில்களுக்கு குடமுழுக்கு மேற்கொள்ளுதல், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு நன்னீராட்டு பெருவிழா நடத்துதல், கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான முடிகாணிக்கை மண்டபம், விருந்து மண்டபம், திருமண மண்டபம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவில்களுக்கு புதிய தேர்கள் செய்தல், பழுதடைந்த தேர்களை மராமத்து பணி செய்தல், பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தேர்களை உலாவர செய்தல் குறிப்பாக சமயபுரம், மாரியம்மன் கோவில், ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவில்களில் பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர்களை ஓட வைத்த ஆட்சி இந்த ஆட்சியாகும்.

    மேலும், திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் பங்களிப்புடன் புதிய வெள்ளித்தேர் ரூ.4 கோடி செலவில் செய்யப்பட்டு கடந்த வாரம் உலா வர செய்யப்பட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.31.24 கோடி மதிப்பீட்டில் 51 புதிய மரத்தேர்கள் செய்வதற்கும், ரூ.4.12 கோடி மதிப்பீட்டில் 13 மரத்தேர்களை மராமத்து செய்வதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பெரியபாளையம், பவானியம்மன் கோவில், புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவில், நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்வதற்கும், இருக்கண்குடி, மாரியம்மன் கோவில், சென்னை, காளிகாம்பாள் கோவில், கருக்காவூர், கர்ப்பகரட் சாம்பிகை கோவில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தணியில் புதிய வெள்ளித்தேர் கடந்த வாரம் வீதிவுலா தொடங்கி வைக்கப்பட்டது.

    இன்றைய தினம் நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் செய்திட ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் உருவாக்கும் பணி உபயதாரர் பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்து பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்துவதற்கு ஏதுவாக புதிய தங்கத் தேர் உலா வர துரித நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்ஆர்.எஸ். பாரதி, கூடுதல் ஆணையர் ந.திருமகள், சென்னை மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, அலுவலர் கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • புன்செய் நிலங்கள் 20 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
    • மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடியாகும்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமூக நீதி கோட்பாட்டினை செயல்படுத்திடும் வகையில் கோவில்கள் சார்பில் 8 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள், 4 ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், 3 வேத ஆகம பாடசாலை, 3 தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள் மற்றும் 2 பிரபந்த விண்ணப்ப பாட சாலை என மொத்தம் 20 பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    2022-2023 ஆண்டில் பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்த 94 மாணவர்களுக்கும், மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 4 மாணவர்களுக்கும் ஆக மொத்தம் 98 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று வழங்கினார்.

    மேலும், 2023 2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, கோவில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்கள் பணி அனுபவம் பெற்று தங்களை செம்மைப்படுத்தி கொள்ளும் வகையில் மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓராண்டிற்கு அனுபவ பயிற்சி பெற மாத ஊக்கத் தொகையாக ரூ.8 ஆயிரம் பயிற்சிப் பெறும் கோவில்களில் இருந்து வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவில்களில் பணிபுரியும் மூத்த அர்ச்சகர்களின் கீழ் அனுபவ பயிற்சி பெறுவதற்கு 2007 2008-ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி நிறைவு செய்த 71 மாணவர்களும், 2022-2023-ம் ஆண்டு பயிற்சி நிறைவு செய்த 94 மாணவர்களும் ஆக மொத்தம் 165 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு அனுபவ பயிற்சி வழங்க அரசாணையில் தெரிவித்துள்ள வழி காட்டுதல்களின்படி செயல்பட சம்மந்தப்பட்ட மண்டல இணை ஆணையர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நகரப்பகுதியில் அமைந்துள்ள 2 ஏக்கர் 72 சென்ட் நிலம் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதே போல மன்னார்குடி வட்டம், கோட்டூர், கொழுந்தீஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமாக 6 ஏக்கர் 89 சென்ட் பரப்பிலான புன்செய் நிலங்கள் 20 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த 2 ஆக்கிரமிப்புகளும் மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டு உள்ளது. அந்நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப் பட்டுள்ளன. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடியாகும்.

    • அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
    • சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ.க.-வினர் முயற்சித்தனர்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதற்கிடையே இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ.க.-வினர் முயற்சித்தனர்.

    தொடர்ந்து, நுங்கம்பாக்கம் பூங்காவை கடந்த செல்ல அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பின்னர், போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சட்டவிரோதமாக கூடுதல் , முறையற்று தடுத்தல், பொதுத் தொல்லை தருதல் உள்ளிட்ட பிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை நிச்சயம் ஒழித்துக் கட்டுவோம் என்று கூறுகிறார்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாவது..,

    "சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என பலதரப்பட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அனைத்து மக்களும் இந்த விவகாரத்தில் கண்டனக் குரல் பதிவு செய்துள்ளனர். சனாதனத்தை வேரறுப்போம் என்று கூறப்படும் மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்."

    "ஒருவர் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மற்றொருவர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இருவரும் பேசத் தொடங்குவதற்கு முன்பே, சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான். அது இரண்டும் வேறு வேறு இல்லை என்று திராவிடர் கழகம் தலைவர் வீரமணி பேசுகிறார். இவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை நிச்சயம் வேரறுப்போம், ஒழித்துக் கட்டுவோம் என்று கூறுகிறார்."

    "இருவர் பேசுவதையும், அதே மேடையில் அமர்ந்திருந்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்த்துக் கொண்டிருந்தார். இவர்களின் பேச்சுக்கு நாடு முழுக்க சாமானிய மக்கள் தொடங்கி, அனைவரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதன் பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து வேடிக்கையான அறிக்கை வெளியிட்டனர்."

    "அதில், சனாதன தர்மம் வேறு, இந்து தர்மம் வேறு. சனாதன தர்மத்தை நாங்கள் கொச்சைப்படுத்தும் போது சில விஷயங்களை மட்டும்தான் கொச்சைப்படுத்தினோம். இதை பா.ஜ.க. கட்சியும் இந்தியாவில் உள்ள தலைவர்களும் எங்களுடைய பேச்சை வெட்டி, ஒட்டி, சித்தரித்து எங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதாக கூறியுள்ளனர்."

    "நான்கு நாட்களில் அவர்களது கருத்துக்கு ஏற்பட்ட கண்டனக் குரலை பார்த்து, நாங்கள் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லி இருந்தோம் என்று கூறுகின்றனர். சனாதன தர்மம் எப்போதும், யாருக்கும் எதிரி கிடையாது. இதனால் தான், நாமாக வேறு நாட்டிற்கு போர் தொடுக்காமல் இருக்கிறோம். சனாதன தர்மம் யாருக்கும் எதிரான தர்மம் கிடையாது. இதற்கு ஆதியும் கிடையாது, முடிவும் கிடையாது எல்லா காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய தர்மம்," என்று கூறியுள்ளார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ.க.-வினர் முயற்சித்தனர்.

    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா 7.8.2023 முதல் 11.8.2023 வரை நடைபெற உள்ளது.
    • சோளீஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படும் இடத்தினை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆடிக்கிருத்திகை திருவிழா 7.8.2023 முதல் 11.8.2023 வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள், கழிப்பிட வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து அமைச்சர்கள் ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் விரிவான ஆய்வினை மேற்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து, அமைச்சர்கள் ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் கோவில் வளாகத்தில் ஆடிக் கிருத்திகை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை நினைவு மண்டபம், ரூ.34.60 லட்சம் மதிப்பீட்டில் தணிகை இல்ல வளாகத்தில் புதிய குடில் கட்டுதல், ரூ.27.50 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் 3 நிழல் மண்டபங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, தணிகை இல்ல வளாகத்தில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள குடில்களையும், விரிவுப்படுத்தப்பட்டுள்ள புதிய அன்னதானக் கூடத்தையும் திறந்து வைத்து, மலைக்கோவிலுக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்துள்ள பேட்டரி கார்களை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    பின்னர், தெக்களூர் நீரேற்று நிலையத்தில் 500 மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்கள், திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்லும் வகையில் கோவிலின் உபகோவிலான சோளீஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படும் இடத்தினையும் ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், வேலூர் மண்டல இணை ஆணையர் ரமணி, திருத்தணி நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) விஜயா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல அளவிலான சீராய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • ஒருகால பூஜைத்திட்ட கோவில்கள், மருத்துவ மையங்கள், நூலகங்கள், பணியாளர்களின் நலன் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

    சென்னை:

    இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல அளவிலான சீராய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-2023 சட்டமன்ற அறிவிப்புகளின்படி நடைபெற்று வரும் பணிகள், உபயதாரர் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திருக்குளங்கள் சீரமைப்பு, திருத்தேர் புனரமைப்பு, பெருந்திட்ட வளாக பணிகள், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களை தொன்மை மாறாமல் புனரமைத்தல், கோவில் நந்தவனங்களை பராமரித்தல், கோவில் யானைகள் பராமரிப்பு, அன்னதானத் திட்டம், பசுக்கள் காப்பகம் பராமரிப்பு, உலோக திருமேனி பாதுகாப்பு மையம் கட்டுமானப் பணிகள், திருத்தேர் கொட்டகை அமைத்தல், கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தல், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்கும் பணிகள், கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான வாடகை வசூல், சூரிய மின் விளக்குகள் பொருத்துதல், இடிதாங்கி அமைத்தல், அஞ்சல் வழி பிரசாதம் அனுப்புதல், ஒருகால பூஜைத்திட்ட கோவில்கள், மருத்துவ மையங்கள், நூலகங்கள், பணியாளர்களின் நலன் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

    நிறைவாக அமைச்சர் சட்டமன்ற அறிவிப்புகளின்படி நிறைவேற்றப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் தங்களது நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு ரூ.79 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • வரிசைமுறை பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து விரிவான ஆய்வு.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28.09.2022 அன்று திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    அதேபோல ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு ரூ.79 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள், ஒருங்கிணைந்த பெருந்திட்டப் பணிகள், பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வரிசைமுறை பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், வி.செந்தில்முருகன், ந.ராமதாஸ், இணை ஆணையர் பொ.ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×