search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலூர்-திருவண்ணாமலை மண்டல திருப்பணிகள்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
    X

    வேலூர்-திருவண்ணாமலை மண்டல திருப்பணிகள்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனை

    • இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல அளவிலான சீராய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • ஒருகால பூஜைத்திட்ட கோவில்கள், மருத்துவ மையங்கள், நூலகங்கள், பணியாளர்களின் நலன் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

    சென்னை:

    இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல அளவிலான சீராய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-2023 சட்டமன்ற அறிவிப்புகளின்படி நடைபெற்று வரும் பணிகள், உபயதாரர் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திருக்குளங்கள் சீரமைப்பு, திருத்தேர் புனரமைப்பு, பெருந்திட்ட வளாக பணிகள், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களை தொன்மை மாறாமல் புனரமைத்தல், கோவில் நந்தவனங்களை பராமரித்தல், கோவில் யானைகள் பராமரிப்பு, அன்னதானத் திட்டம், பசுக்கள் காப்பகம் பராமரிப்பு, உலோக திருமேனி பாதுகாப்பு மையம் கட்டுமானப் பணிகள், திருத்தேர் கொட்டகை அமைத்தல், கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தல், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்கும் பணிகள், கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான வாடகை வசூல், சூரிய மின் விளக்குகள் பொருத்துதல், இடிதாங்கி அமைத்தல், அஞ்சல் வழி பிரசாதம் அனுப்புதல், ஒருகால பூஜைத்திட்ட கோவில்கள், மருத்துவ மையங்கள், நூலகங்கள், பணியாளர்களின் நலன் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

    நிறைவாக அமைச்சர் சட்டமன்ற அறிவிப்புகளின்படி நிறைவேற்றப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் தங்களது நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    Next Story
    ×