search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruttani Temple"

    • கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படையாக திகழ்கிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 

    இந்த நிலையில் இன்று கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் திருத்தணி கோவிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பக்தர்கள் சரவண பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டு வழியாக நடந்து சென்றும் சுவாமியை வழிபட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக திருத்தணி நகரம், அரக்கோணம் சாலை, மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    • திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது.
    • மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆவணி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்தம் நாளான இன்று திருத்தணி முருகன் கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    இதனால் மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா 7.8.2023 முதல் 11.8.2023 வரை நடைபெற உள்ளது.
    • சோளீஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படும் இடத்தினை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆடிக்கிருத்திகை திருவிழா 7.8.2023 முதல் 11.8.2023 வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள், கழிப்பிட வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து அமைச்சர்கள் ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் விரிவான ஆய்வினை மேற்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து, அமைச்சர்கள் ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் கோவில் வளாகத்தில் ஆடிக் கிருத்திகை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை நினைவு மண்டபம், ரூ.34.60 லட்சம் மதிப்பீட்டில் தணிகை இல்ல வளாகத்தில் புதிய குடில் கட்டுதல், ரூ.27.50 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் 3 நிழல் மண்டபங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, தணிகை இல்ல வளாகத்தில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள குடில்களையும், விரிவுப்படுத்தப்பட்டுள்ள புதிய அன்னதானக் கூடத்தையும் திறந்து வைத்து, மலைக்கோவிலுக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்துள்ள பேட்டரி கார்களை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    பின்னர், தெக்களூர் நீரேற்று நிலையத்தில் 500 மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்கள், திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்லும் வகையில் கோவிலின் உபகோவிலான சோளீஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படும் இடத்தினையும் ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், வேலூர் மண்டல இணை ஆணையர் ரமணி, திருத்தணி நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) விஜயா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் திருத்தணிகை.
    • அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    திருப்பரங்குன்றம்:

    தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

    திருச்செந்தூர்:

    அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

    பழனி:

    ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக்கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

    சுவாமிமலை:

    தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

    திருத்தணி:

    சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

    பழமுதிர்ச்சோலை:

    தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    • திருத்தணி கோவிலில் தற்போது மாசி கிருத்திகை விழா தொடங்கி நடந்து வருகிறது.
    • திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள். திருத்தணி கோவிலில் தற்போது மாசி கிருத்திகை விழா தொடங்கி நடந்து வருகிறது. இதனால் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்யும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது. மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் துணை ஆணையர் விஜயா முன்னிலையில் கோயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரொக்கம் மற்றும் 612 கிராம் தங்கம், 10 கிலோ 487 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்து இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது
    • வெள்ளி 8862 கிலோ காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. தேவர் மண்டபத்தில் கோவில் பணியாளர்கள் மூலம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    இதில் கடந்த 19 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 82 ஆயிரம், தங்கம் 555 கிராமும், வெள்ளி 8862 கிலோவும் காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவில் கூட்டத்தை பயன்படுத்தி பக்தரிடம் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடந்து வருகிறது. நேற்று மாலை முதல் நாள் தெப்ப திருவிழா நடந்தது. இதையொட்டி திருத்தணி கோவிலில் 1 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் வந்திருந்தனர்.

    நேற்று மாலை பெங்களூரை சேர்ந்த பக்தர் ராஜானித் என்பவர் மூலவரை தரிசிப்பதாக வரிசையில் நின்றார். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

    இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் ராஜானித் கால்சட்டை பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பையுடன் அறுத்து திருடிச் சென்று விட்டனர்.

    பணம் கொள்ளை போயிருப்பதை அறிந்த ராஜானித் கூச்சலிட்டார். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து திருத்தணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பெங்களூரை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் நேற்று மாலை மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்லமாள் அணிந்திருந்த 5½ பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து தப்பினர்.

    ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி குற்றச் செயல்களை தடுக்க திருத்தணி நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் கொள்ளையர்கள் பக்தர்களிடம் கைவரிசை காட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெப்பத்திருவிழா இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

    பக்தர்கள் போல் புகுந்துள்ள நகை பறிப்பு, கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழிங்கநல்லூரை அடுத்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா நடை பெற்றது.

    அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் வந்தனர். அந்த பகுதியை சேர்ந்த முனியம்மாள்(75) என்ற மூதாட்டியிடம் 3 சவரன் தங்க செயின், கற்பகம்(46) அணிந்திருந்த 6 சவரன் தங்க செயின் என 9 சவரன் தங்க செயினை கூட்டத்தில் பறிகொடுத்தனர்.

    அம்மனை வழிபட்டு கொண்டிருக்கும்போது இருவர் கழுத்தில் இருந்து தங்க சங்கிலிகள் கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது.

    இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #TiruttaniTemple
    பள்ளிப்பட்டு:

    திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. 3-ந் தேதி அஸ்வினியும், 4-ந்தேதி பரணியும், 5-ந்தேதி ஆடிக் கிருத்திகை விழாவும் விமரிசையாக நடைபெற உள்ளது.

    இதைதொடர்ந்து 5-ந்தேதிமுதல் 7-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ஆடிக்கிருத்திகை விழாவுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் சரவண பொய்கை குளத்தில் இருந்து படிக்கட்டு வழியாக கோவிலுக்கு செல்லும் பகுதியில் ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து இருந்தனர். இந்த ஆக்கிரமிப்பால் காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து இன்று காலை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவில் பகுதியில் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். #TiruttaniTemple
    திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் வழங்கப்படும் காணிக்கை முறையில் மாற்றம்கொண்டு வரவேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #Tiruttanitemple
    திருத்தணி:

    திருத்தணியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு  வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.

    ஆனால் ஆன்லைன் மூலம் செலுத்தப்படும் காணிக்கைகள் ஒருமாதம் கழித்தே கோவில் கணக்கில் சேருவதாக பக்தர்கள் பலர் புகார் தெரிவிக்கின்றனர். தனியார் நிறுவனங்களிடம் இந்த திட்டத்தை ஒப்படைத்ததே இந்த காலதாமதத்திற்கு காரணம் எனவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே அரசு,  இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Tiruttanitemple
    கடந்த 26 நாட்களில் திருத்தணி கோவிலுக்கு உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 2 லட்சத்து 26 ஆயிரத்து 825 ரூபாய் கிடைத்திருக்கிறது.
    பள்ளிப்பட்டு:

    திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்கிறார்கள். கடந்த 26 நாட்களில் திருத்தணி கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காணிக்கையை எண்ணினார்கள்.

    இதில் கோவிலுக்கு கிடைத்த பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் தனித்தனியாக கணக்கிடப்பட்டது. இதன் விவரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    இதன்படி கடந்த 26 நாட்களில் திருத்தணி கோவிலுக்கு உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 2 லட்சத்து 26 ஆயிரத்து 825 ரூபாய் கிடைத்திருக்கிறது.

    882 கிராம் தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 5 கிலோ 75 கிராம் வெள்ளிப் பொருட்களும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
    ×