search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணி கோவிலில் இன்று 50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம்
    X

    திருத்தணி கோவிலில் இன்று 50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம்

    • திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது.
    • மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆவணி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்தம் நாளான இன்று திருத்தணி முருகன் கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    இதனால் மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×