search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமோ அன்பரசன்"

    • பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.
    • காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்று நாளை (7-ந் தேதி) காலை தாயகம் திரும்பும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் தங்களது தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

    தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.

    குறிப்பாக சரக்கு முனையங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹைபக் லாய்டு நிறுவனத்துடன் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இதுபோன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க முன்வரும் படியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்க தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (7-ந் தேதி) காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையம் முன்பு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மாபெரும் தொழில் புரட்சியை செய்து வரும் தொழில் புரட்சி நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது "நமது கடமை, நமது உரிமை" என்ற அந்த உணர்வோடு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து கழகத் தோழர்கள் அனைவரும் தமது கரங்களில் கழகத்தின் இருவண்ண கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் ஏந்தி, மேள-தாளம், பேண்ட் வாத்தியம் முழங்க மிகவும் கோலாகலமான முறையில் எழுச்சியான வரவேற்பு அளித்திடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை வரவேற்று வழியனுப்பி வைத்தார்.
    • பாடல் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46-வது பிறந்த நாள் விழாவை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 1 மாதம் விளையாட்டு போட்டிகள் நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்து உள்ளார்.

    இதையொட்டி நேற்று ஆலந்தூரில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை பரிசாக வழங்கினார்.

    இதன் பிறகு தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை வரவேற்று வழியனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழ்பாடும் 'மாமன்னா' பிரசார பாடலையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.

    பம்மல் நகர இளைஞரணி நிர்வாகி ராஜசேகர் உருவாக்கிய இந்த பாடல் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த பாடலை வெளியிட்டதும் வாட்ஸ்-அப், யூ டியூப்பில் மாமன்னா பாடல் வைரலானது.

    • திருத்தணியில் புதிய வெள்ளித்தேர் கடந்த வாரம் வீதிவுலா தொடங்கி வைக்கப்பட்டது.
    • பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர்களை ஓட வைத்த ஆட்சி இந்த ஆட்சியாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை, நங்கநல்லூர், ஆதிவ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத் தேர் செய்திட ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் உருவாக்கும் திருப்பணியை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறையானது திருக்குளங்களை சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல், நந்தவனங்களை உருவாக்குதல், ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த கோவில்களுக்கு குடமுழுக்கு மேற்கொள்ளுதல், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு நன்னீராட்டு பெருவிழா நடத்துதல், கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான முடிகாணிக்கை மண்டபம், விருந்து மண்டபம், திருமண மண்டபம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவில்களுக்கு புதிய தேர்கள் செய்தல், பழுதடைந்த தேர்களை மராமத்து பணி செய்தல், பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தேர்களை உலாவர செய்தல் குறிப்பாக சமயபுரம், மாரியம்மன் கோவில், ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவில்களில் பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர்களை ஓட வைத்த ஆட்சி இந்த ஆட்சியாகும்.

    மேலும், திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் பங்களிப்புடன் புதிய வெள்ளித்தேர் ரூ.4 கோடி செலவில் செய்யப்பட்டு கடந்த வாரம் உலா வர செய்யப்பட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.31.24 கோடி மதிப்பீட்டில் 51 புதிய மரத்தேர்கள் செய்வதற்கும், ரூ.4.12 கோடி மதிப்பீட்டில் 13 மரத்தேர்களை மராமத்து செய்வதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பெரியபாளையம், பவானியம்மன் கோவில், புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவில், நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்வதற்கும், இருக்கண்குடி, மாரியம்மன் கோவில், சென்னை, காளிகாம்பாள் கோவில், கருக்காவூர், கர்ப்பகரட் சாம்பிகை கோவில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தணியில் புதிய வெள்ளித்தேர் கடந்த வாரம் வீதிவுலா தொடங்கி வைக்கப்பட்டது.

    இன்றைய தினம் நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் செய்திட ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் உருவாக்கும் பணி உபயதாரர் பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்து பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்துவதற்கு ஏதுவாக புதிய தங்கத் தேர் உலா வர துரித நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்ஆர்.எஸ். பாரதி, கூடுதல் ஆணையர் ந.திருமகள், சென்னை மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, அலுவலர் கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • மண்ணிவாக்கம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
    • எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை, பல்லாவரம் கருணாநிதி, வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ. 76.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கூட்டமைப்பு கட்டிடம், மண்ணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.69 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.

    வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் துணைத்தலைவர் ஆராமுதன், ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்ணிவாக்கம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு அரசு கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை, பல்லாவரம் கருணாநிதி, வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பெரியார், அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களை கொச்சைபடுத்தி சீமான் ஆவேசமாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
    • கலைஞரின் பேச்சை பாருங்கள், அவரின் வரலாற்றை படியுங்கள்.

    மாமல்லபுரம்:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூர் தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    பெரியார், அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களை கொச்சைபடுத்தி சீமான் ஆவேசமாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. ஆவேசமாக ஒருவர் பேசுவதால் தலைவர் ஆகிவிட முடியாது. இந்த ஆவேசமான நாடக அரசியல் பேச்சையும், மூளைச்சலவை வீடியோக்களையும் தற்போது இளைஞர்கள் அதிகளவில் பொபைல் போன்களில் பார்த்து வருகிறார்கள். இது ஆபத்தானது இதற்கு இளைஞர்கள் அடிமையாக கூடாது.

    கலைஞரின் பேச்சை பாருங்கள், அவரின் வரலாற்றை படியுங்கள். அப்போதுதான் அவர் இளைஞர்களுக்கு செய்த நலத்திட்டங்கள் உங்களுக்கு தெரியவரும் என்று பேசினார்.

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், தலைமை கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், ஒன்றிய கழக செயலாளர் தமிழ்மணி, ஆர்.டி.அரசு, இளங்கோ, மாமல்லபுரம் வெ.விசுவநாதன், அரவிந்த் சம்பத்குமார் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • பட்டா வழங்க பரிந்துரைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
    • 1,245 ஏக்கர் நிலம் பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று சென்னை, கிண்டி, சிட்கோ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 208 தொழில் முனைவோர்களுக்கு பட்டா வழங்கி பேசியதாவது:-

    தொழில் முனைவோர்கள் நிலத்தினை வைத்து கடன் பெறுவதும், தொழிலை விரிவுபடுத்தவும் முடியாமல் பல சிக்கல்களை சந்தித்து வந்தனர். கழக அரசு பொறுப்பேற்றவுடன், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அரசிடம் தொழில் முனைவோர்கள் கோரிக்கை வைத்தனர்.

    முதல்கட்டமாக 32 தொழிற் பேட்டைகளில் 1,569 ஏக்கர் நிலங்களுக்கான வகைப்பாட்டினை மாற்றி, பட்டா வழங்க பரிந்துரைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், 1,245 ஏக்கர் நிலம் பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து, 28.3.2023 அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கிண்டி, அம்பத்தூர் தொழிற் பேட்டையை சேர்ந்த 5 தொழில் முனைவோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்று 9 தொழிற்பேட்டைகளில் உள்ள 280 தொழில் முனைவோர்க ளுக்கு 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஏனையோர்க்கு படிப்படியாக பட்டா வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்".

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான இரு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், சிட்கோ தொழிற் பேட்டையில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் 25 தூய்மை பணியாளர்களுக்கு சீருடையும் அமைச்சரால் வழங்கப்பட்டது.

    • பஸ் நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநக ராட்சிக்குட்பட்ட சித்தேரிமேடு மற்றும் காரைப்பேட்டை ஆகிய பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-

    காரைப்பேட்டை மற்றும் சித்தேரிமேடு ஆகிய பகுதிகளில் உத்தேச பஸ் நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழுத்தலைவர் மலர்கொடி குமார் உடன் இருந்தனர்.

    • கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.
    • மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தார். நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் பிற துறைகளில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகள் காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற திட்டப் பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி, பொது சேவை மையங்களின் பயன்பாடு, நெடுஞ்சாலை நீர்வழிப்பாதை மற்றும் சுரங்க செயல்பாடுகள், மாவட்ட தொழில் மையம், செயல்படுத்தும் திட்டங்கள், மாற்று திறனாளிகளுக்கான திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவை பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் மழைநீர் வடிவதற்காக செயல்படுத்தும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்த டி.ஆர்.பாலு எம்.பி. மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் தி.மு.க. ஆட்சியில் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
    • எந்த சாலையும் பளிச் என்று காணப்படாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    நகராட்சியாக இருந்த தாம்பரம் 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 70 வார்டுகளை உள்ளடக்கிய இந்த மாநகராட்சியில் 55க்கும் மேற்பட்ட வார்டுகளில் தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் வெற்றி பெற்று உள்ளனர். மேயராக வசந்த குமாரி, துணை மேயராக காமராஜ் உள்ளனர். இருவரும் தி.மு.க. தான்.

    இந்நிலையில் கவுன்சிலர்கள் பதவி ஏற்று ஓராண்டு கடந்தும் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இன்னும் அடிப்படை பிரச்சினையான சாலை வசதி கூட சரி செய்ய முடியாத நிலையில் மாநகராட்சி உள்ளதாக தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒவ்வொரு சாலையும் பள்ளம்-மேடாக காட்சி அளிக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் தி.மு.க. ஆட்சியில் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    ஒவ்வொரு சாலையும் நடுநடுவே பாதாள சாக்கடைக்காக வெட்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் மூடப்படாமல் உள்ளதுடன் சாலை ஓரம் மணல் மற்றும் கட்டிட இடிபாடுகளும் காணப்படுகிறது.

    எந்த சாலையும் பளிச் என்று காணப்படாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது போல கழிவு நீர் பிரச்சினை, குப்பை பிரச்சினையும் தீர்க்கப்படாமல் உள்ளது.

    இது தொடர்பாக புகார்கள் தொகுதி அமைச்சரான தா.மோ. அன்பரசன் கவனத்திற்கு சென்றுள்ளது. இதை தொடர்ந்து அவர் வருகிற 20-ந் தேதி தாம்பரம் மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலர்களின் கலந்தாய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். குரோம்பேட்டையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ.க்களான இ.கருணாநிதி, எஸ்.ஆர். ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு புகார் தெரிவிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அருள்முருகன் டவர்ஸ் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி சிறப்பு வாழ்த்தரங்கம் நாளை (6-ந்தேதி) மாலை 5 மணிக்கு பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அருள்முருகன் டவர்ஸ் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பாராளுமன்ற குழுத் தலைவர் கழக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    'எந்த பந்தயத்திலும் முந்தி வரும் முதல்வர்' என்ற பொதுத் தலைப்பில் சிறப்பு பேச்சாளர்கள் புலவர் இராமலிங்கம் இளைஞர் எழுச்சியாளர் என்ற தலைப்பிலும், டாக்டர் சுதந்திர ஆவுடையப்பன் தமிழின மீட்சியாளர் என்ற தலைப்பிலும், பேராசிரியர் அருள் பிரகாஷ் திராவிட மாடல் ஆட்சியாளர் என்ற தலைப்பிலும், திருச்சி அன்னலட்சுமி மகளிர் முன்னேற்ற மாட்சியாளர் என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர்.

    நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செல்வம் எம்.பி., மீ.ஆ.வைத்திலிங்கம், தமிழ்மணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை மனோகரன் உள்பட கட்சியின் அனைத்து பிரமுகர்களும் பங்கேற்கிறார்கள்.காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள இந்த வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் கழக செயல் வீரர்கள் பங்கேற்று சிறப்பிக் கும்படி மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    • எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடந்தது.

    செல்வம் எம். பி., வரலட்சுமி மதுசூதனன் எம். எல்.ஏ. , நகர் மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே. லோகநாதன், கவுன்சிலர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 6 பேருக்கு இஸ்திரி பெட்டி, 5 பேருக்கு தையல் எந்திரம், 5 பேருக்கு தள்ளுவண்டி, மற்றும் 3 குளிர்சாதன சவப்பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.

    முன்னதாக காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி தி.மு.க. சார்பில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து எம்.கே. தண்டபாணி நினைவிடம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் வண்டலூர் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ. சண்முகம்,கூடுவாஞ்சேரி எம்.கே.டி.சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தண்ணீர் வெளியேறுவதற்கு திட்டம் தயாரித்தோம்.
    • நீதிமன்றம் உத்தரவிட்டும் முன்னாள் முதல்வர் எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளதாவது: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கொளப்பாக்கம்,கணேஷ் நகர், முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகர் ஆகிய பகுதிகளில்தான் தண்ணீர் தேங்கியுள்ளது. மதுரவாயில் புறவழிச் சாலையில் தண்ணீரை உரிய கல்வெர்ட் அமைக்காததால் தண்ணீர் வெளியேற முடியவில்லை.

    இதனால் ஐய்யப்பன் தாங்கல், பரணிப்புத்தூர், சின்னபனிச்சேரி, கொளத்துவான்சேரி ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். இதற்கு எல்லாம் காரணம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து திட்டம் தயாரித்தோம். தேசிய நெடுஞ்சாலைத் துறை கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, பொதுப் பணித்துறை இத்திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றது.

    இவ்வழக்கில் 2017 ஆம் ஆண்டு இரண்டு துறைகளும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் பொதுப் பணித்துறைக்கு பொறுப்பேற்றிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த சட்டசபையில் கோரிக்கை வைத்தேன். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்காததுதான் இன்றைய நிலைக்கு காரணம்.  

    கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக என்னை அழைத்து சென்று இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, அதிகாரிகளுக்கு எல்லாம் உத்தரவிட்டு இந்த நிலைய முற்றிலுமாக போக்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கி தந்தார்.

    செம்பரம்பாக்கதில் இருந்து வரும் தந்தி கால்வாய்க்கு கட் அண்டு கவர் அமைக்கும் பணியும், போரூரிலிருந்து ஒரு கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மதுரவாயில் புறவழிச்சாலையில் ஒரு புஸ்- கல்வெர்ட்டு நேற்று தான் அந்த சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்தில் வெளி வந்தது. தற்போது இதன் வழியாக 400 கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×