search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thamo anbarasan"

    • பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.
    • காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்று நாளை (7-ந் தேதி) காலை தாயகம் திரும்பும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் தங்களது தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

    தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.

    குறிப்பாக சரக்கு முனையங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹைபக் லாய்டு நிறுவனத்துடன் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இதுபோன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க முன்வரும் படியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்க தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (7-ந் தேதி) காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையம் முன்பு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மாபெரும் தொழில் புரட்சியை செய்து வரும் தொழில் புரட்சி நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது "நமது கடமை, நமது உரிமை" என்ற அந்த உணர்வோடு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து கழகத் தோழர்கள் அனைவரும் தமது கரங்களில் கழகத்தின் இருவண்ண கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் ஏந்தி, மேள-தாளம், பேண்ட் வாத்தியம் முழங்க மிகவும் கோலாகலமான முறையில் எழுச்சியான வரவேற்பு அளித்திடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பட்டா வழங்க பரிந்துரைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
    • 1,245 ஏக்கர் நிலம் பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று சென்னை, கிண்டி, சிட்கோ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 208 தொழில் முனைவோர்களுக்கு பட்டா வழங்கி பேசியதாவது:-

    தொழில் முனைவோர்கள் நிலத்தினை வைத்து கடன் பெறுவதும், தொழிலை விரிவுபடுத்தவும் முடியாமல் பல சிக்கல்களை சந்தித்து வந்தனர். கழக அரசு பொறுப்பேற்றவுடன், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அரசிடம் தொழில் முனைவோர்கள் கோரிக்கை வைத்தனர்.

    முதல்கட்டமாக 32 தொழிற் பேட்டைகளில் 1,569 ஏக்கர் நிலங்களுக்கான வகைப்பாட்டினை மாற்றி, பட்டா வழங்க பரிந்துரைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், 1,245 ஏக்கர் நிலம் பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து, 28.3.2023 அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கிண்டி, அம்பத்தூர் தொழிற் பேட்டையை சேர்ந்த 5 தொழில் முனைவோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்று 9 தொழிற்பேட்டைகளில் உள்ள 280 தொழில் முனைவோர்க ளுக்கு 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஏனையோர்க்கு படிப்படியாக பட்டா வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்".

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான இரு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், சிட்கோ தொழிற் பேட்டையில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் 25 தூய்மை பணியாளர்களுக்கு சீருடையும் அமைச்சரால் வழங்கப்பட்டது.

    • கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.
    • மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தார். நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் பிற துறைகளில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகள் காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற திட்டப் பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி, பொது சேவை மையங்களின் பயன்பாடு, நெடுஞ்சாலை நீர்வழிப்பாதை மற்றும் சுரங்க செயல்பாடுகள், மாவட்ட தொழில் மையம், செயல்படுத்தும் திட்டங்கள், மாற்று திறனாளிகளுக்கான திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவை பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் மழைநீர் வடிவதற்காக செயல்படுத்தும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்த டி.ஆர்.பாலு எம்.பி. மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    • அருள்முருகன் டவர்ஸ் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி சிறப்பு வாழ்த்தரங்கம் நாளை (6-ந்தேதி) மாலை 5 மணிக்கு பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அருள்முருகன் டவர்ஸ் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பாராளுமன்ற குழுத் தலைவர் கழக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    'எந்த பந்தயத்திலும் முந்தி வரும் முதல்வர்' என்ற பொதுத் தலைப்பில் சிறப்பு பேச்சாளர்கள் புலவர் இராமலிங்கம் இளைஞர் எழுச்சியாளர் என்ற தலைப்பிலும், டாக்டர் சுதந்திர ஆவுடையப்பன் தமிழின மீட்சியாளர் என்ற தலைப்பிலும், பேராசிரியர் அருள் பிரகாஷ் திராவிட மாடல் ஆட்சியாளர் என்ற தலைப்பிலும், திருச்சி அன்னலட்சுமி மகளிர் முன்னேற்ற மாட்சியாளர் என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர்.

    நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செல்வம் எம்.பி., மீ.ஆ.வைத்திலிங்கம், தமிழ்மணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை மனோகரன் உள்பட கட்சியின் அனைத்து பிரமுகர்களும் பங்கேற்கிறார்கள்.காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள இந்த வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் கழக செயல் வீரர்கள் பங்கேற்று சிறப்பிக் கும்படி மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    • எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடந்தது.

    செல்வம் எம். பி., வரலட்சுமி மதுசூதனன் எம். எல்.ஏ. , நகர் மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே. லோகநாதன், கவுன்சிலர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 6 பேருக்கு இஸ்திரி பெட்டி, 5 பேருக்கு தையல் எந்திரம், 5 பேருக்கு தள்ளுவண்டி, மற்றும் 3 குளிர்சாதன சவப்பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.

    முன்னதாக காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி தி.மு.க. சார்பில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து எம்.கே. தண்டபாணி நினைவிடம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் வண்டலூர் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ. சண்முகம்,கூடுவாஞ்சேரி எம்.கே.டி.சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக ஒன்றிய, நகர அளவில் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். #thamoanbarasan #dmk

    சென்னை:

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.கழக ஒன்றிய நகர , பேரூர் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் வாக்காளர் சேர்த்தல் , நீக்கல் பணிக்காக மாவட்டக் கழகத்தால் அனுப்பப்பட்டுள்ள பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

    தொடக்கத்தில் மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் விசுவநாதன், அன்புச் செழியன், பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் உரையாற்றினார். அவர் பேசிய தாவது:-

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணியை முடுக்கி விடுவதற்காக முதல்கட்ட பணியாக வருகிற நவம்பர் மாதத்தில் ஒன்றிய நகர, பேரூர் அளவில் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தை எழுச்சியுடன் கூட்டிட வேண்டும்.

    ஒன்றியங்களில் நடைபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சி வார்டு கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி வார்டு கழக இளைஞர் அணி , மாணவர் அணி மகளிர் அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வது.

    நகர பேரூர்களில் நடைபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் நகர பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி மகளிர் அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களை பங்கேற்கச் செய்வது. காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை மாற்றாரும் மிரளும் வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் கூட்டி தேர்தல் பணியை முனைப்புடன் தொடங்கி விட்டனர் என்ற பிரமிப்பை ஏற்படுத்திடும் வகையில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திட வேண்டும்.

    இவ்வாறு அன்பரசன் கூறினார். #thamoanbarasan #dmk

    ×