என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PK Sekar Babu"

    • முதலில் தன்னையும், தன்னை சார்ந்து இருக்கும் இயக்கத்தையும் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
    • மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துவிட்டுதான் முதல்வர் நடவடிக்கையை மேற்கொள்வார்.

    பரந்தூர் விமான நிலையம் குறித்து தவெக தலைவர் விஜய் பேசியதற்கு அமைச்சர் பி.கே. சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது:-

    தவெக தலைவர் விஜயை முதலில் மக்களை நோக்கி பயணத்தை தொடங்க சொல்லுங்க. பயணத்தையே செப்டம்பரில் தான் தொடங்குவேன் என்றார்.

    நேற்று காத்திருந்த தொண்டர்களைக் கூட பார்க்கவில்லை என்கிற செய்திகளும் வந்தது. அவர் முதலில் தன்னையும், தன்னை சார்ந்து இருக்கும் இயக்கத்தையும் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

    மக்களை பாதுகாக்க எங்கள் மக்களின் முதல்வர் இருக்கிறார். நிச்சயமாக அவரது முன்னெடுப்பிலே யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், அதேநேரத்தில், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில்தான் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்புகளை அமைக்கின்றபோது, மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துவிட்டுதான் முதல்வர் நடவடிக்கையை மேற்கொள்வார்.

    எடுத்தேன் கவுத்தேன் என்பது போல், கடந்த காலங்களைப்போல் எங்கள் முதல்வர் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி ஒரு திட்டத்தை கொண்டுவருவதற்கு நிச்சயமாக முற்படமாட்டார்.

    அதனால், தேவையில்லாமல் முதல்வரை சந்திப்பேன் என்ற அரைக்கூவல் எல்லாம், அரைக்குள் இருந்தே விட்டுக் கொண்டிருக்கிறார்.

    யாராக இருந்தாலும் முதல்வர் எளிதாய கையாண்டுவிடுவார். ஆங்கிலத்தில் சொல்லவார்களே முதல்வர் Left Hand-ல் டீல் செய்துவிடுவார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ் கடவுள் முருகன் மகிழ்ச்சி பெரும் வகையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெறும்.
    • 19 கோவிலுக்கு ரூ.1200 கோடியில் புனரமைக்கும் பணி பெருந்திட்ட வரைவு நடந்து வருகிறது.

    மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

    மாங்காடு காமாட்சி அம்மன், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், பழனி தண்டாயுதபாணி, பெரியபாளையம் பவானி அம்மன், திருவெற்றியூர் வடிவுடையம்மன் ஆகிய 5 கோவில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு உள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக 2 கோவில்களில் இருந்த திட்டத்தை 13 கோவில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் நடந்து வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் 3 கோடியே 50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளார்கள். 19 கோவிலுக்கு ரூ.1200 கோடியில் புனரமைக்கும் பணி பெருந்திட்ட வரைவு நடந்து வருகிறது.

    திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு 95 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. பக்தர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதி, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழ் கடவுள் முருகன் மகிழ்ச்சி பெரும் வகையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெறும். திருச்செந்தூர் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நாங்கள் நடத்துவோம் என்று தெரிந்துதான் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

    சீமானுக்கு மறதி அதிகம். ஏற்கனவே பழனி, மருதமலை கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். சீமான் போன்றோர் உபதேசத்தால் இந்த ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    • ரேணுகா தேவி துணை ஆணையர் நித்யா, மாநகராட்சி மன்ற உறுப்பினர் காமராஜ் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சென்னை, திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சுவாமி கோவிலில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், அழகர்கோவில் கள்ளழகர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் 5 கோவில்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15,000 பக்தர்களும், விசேஷ மற்றும் திருவிழா நாட்களில் சுமார் 50,000 பக்தர்களும் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள். பிரசாதங்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளதோடு, அவற்றை பக்தர்களுக்கு வழங்கிட அந்தந்த கோவில்களில் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே 2 கோவில்களில் இருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு திருவண்ணாமலை திருச்செந்தூர் உட்பட மேலும் 6 கோவில்களில் இந்த முழு நேர அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி 8 கோவிலில் அந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கின்றது.

    பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், மேல் மலையனூர் அங்காளம்மன் கோவில், ஆனைமலை மாசாணி அம்மன் ஆனைமலை கோவில் ஆகிய 3 கோவில்கள் இணைக்கப்பட உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் இந்த மூன்று கோவிலிலும் முழு நேர அன்னதான திட்டத்தை துவக்கிட உள்ளார்.

    அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் சன்னிதானத்தில் தைப்பூசத்தன்று இருபதாயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கிட திட்டமிடப்பட்டு இந்த ஆண்டு அதை துவக்க வைக்க இருக்கின்றோம்.

    இதோடு மட்டுமல்லாமல், ஒருவேளை அன்னதான திட்டத்தில் ஏற்கனவே இருந்த 754 கோவிலோடு இணைத்து இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 10 கோவில்கள் கூடுதலாக இணைக்கப்பட்டன. இந்த ஆண்டு 7 கோவில்கள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன.

    கோவில்களின் பிரசாதம் மற்றும் அன்னதான உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிப்பதை உறுதிப்படுத்தி ஒன்றிய அரசினால் வழங்கப்படுகின்ற தரச்சான்றிதழ்களை 523 கோவில்களுக்கு இதுவரையில் பெற்று இருக்கின்றோம். இந்தியாவிலேயே அதிகமான கோவில்களுக்கு உணவு தர கட்டுப்பாட்டுக்காக வழங்கப்பட்ட சான்று தமிழகத்தில் தான் அதிகம்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசிக்கு 73 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்த போதும் சிறு அசம்பாவிதம் இல்லாமல் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்கின்ற நல்ல சூழலை உருவாக்கி தந்தோம். அதுபோல் ஆங்கில புத்தாண்டிற்கு கடந்த ஆண்டுகளில் எந்தெந்த கோவில் எல்லாம் இரவு 12 மணிக்கு திறக்கப்பட்டிருந்ததோ, ஒரு சில கோவில் காலையில் திறக்கப்பட்டதோ அந்த நடைமுறையை பின்பற்ற சொல்லியும் எந்த கோவிலிலும் அர்ச்சகர்களுக்கு அழுத்தம் தராமல் பக்தர்களுக்கு இலகுவான தரிசனத்தை ஏற்படுத்தித் தர உத்தரவிடப்பட்டிருந்தது.

    48 முதுநிலை கோவில்களுக்கும் சிசிடிவி பொருத்தப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம். அதிகமான பக்தர்கள் வருகின்ற கோவில்களை ஆணையாளர் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றார்.

    ஆகவே கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆங்கில புத்தாண்டிற்கு சிறப்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றோம். மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தவரை சுமார் 30-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அவை முறையாக ஆய்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீதிமன்றத்தில் என்னென்ன விதி மீறல்கள் இருக்கிறது என்பதை சமர்ப்பிக்க இருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் வட னெ்னையில் தனிக்கவனம் செலுத்தி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருக்கின்றார்.
    • நிச்சயம் அந்த பணிகள் அனைத்தையும் மேற்கொண்டால் வடசென்னை தென் சென்னைக்கு நிகராக உயரும்.

    சென்னை:

    சென்னை, அகரம், ஜெகநாதன் தெருவில், வட சென்னை பாராளுமன்ற இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தளவில் தினந்தோறும் தேர்தல் பணியை எப்போதும் செய்து கொண்டிருக்கின்ற கழகத் தோழர்கள் நிறைந்த பகுதி, மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவரின் நல்வழியை பின்பற்றுகின்ற மக்கள் நல விரும்பிகள் தான், இந்த தொகுதியில் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களாகவும், கட்சியினுடைய முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் மக்களோடு தினசரி மக்களுடைய பிரச்சினைகளை அணுகுவதால் இந்த முறை இந்த கொளத்தூர் தொகுதியிலேயே பதிவாகின்ற வாக்குகளில் 75 சதவீதம் அளவிற்கு தி.மு.க. உதயசூரியன் சின்னம் பெறும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.

    கலாநிதி, நமது ஆட்சி வந்த பிறகு 34 மாதங்கள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஆட்சி இல்லாத போது அரசிடம் போராடி பல்வேறு நலத்திட்டங்களை பெற்றவர், பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்துவதற்குண்டான நடவடிக்கையில் ஈடுபட்டவர். ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய காலத்தில் கொடுங்கையூர் குப்பைகள் கொட்டும் வளாகம், கணேசபுரம் மேம்பாலம். ஆர்.கே. நகர் மேம்பாலம் போன்ற, மக்களுக்கு கால காலத்துக்கும் பயன்படுகின்ற பல நலத்திட்டங்களை கொண்டு வந்தவர்.

    மீண்டும் அவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த வட சென்னை பாராளுமன்ற தொகுதியினுடைய வளர்ச்சிக்கும், தேவைகளுக்கும் கட்டமைப்புகளை உயர்த்துவதற்கும் தொடர்ந்து இப்போது போல் பாடுபடுவார்.


    முதலமைச்சர் வட னெ்னையில் தனிக்கவனம் செலுத்தி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருக்கின்றார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தற்போது வட சென்னையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பூங்காக்கள், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள், கடற்கரையை அழகுபடுத்துகின்ற பணிகள், சந்தைகள், வணிக வளாகங்கள் அதேபோல டயாலிசிஸ் அமைப்புகள் என்று கிட்டத்தட்ட மாநகராட்சி சமூக நலக்கூடங்கள் என்று 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக, ஏற்கனவே வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    இந்த மாதம் 14-ந் தேதி, சென்னை தங்க சாலை மணிக் கூண்டு அருகிலே ரூபாய் 4,414 கோடி அளவிற்கு வளர்ச்சி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார். அறிவித்தார் என்பதைவிட பிரகடனப்படுத்தி இருக்கின்றார்.

    நிச்சயம் அந்த பணிகள் அனைத்தையும் மேற்கொண்டால் வடசென்னை தென் சென்னைக்கு நிகராக உயரும்.

    அனைவருடைய மேம்பாட்டிற்காகவும் நிச்சயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கின்ற இந்த திட்டங்களை நிறைவேற்றுவார்.

    தொடர் பயணமாக 20 ஆண்டுகளுக்கு இந்த மாவட்டத்தை முன்னேற்றத்துடன் கூடிய ஒரு மாவட்டமாக கொண்டு வருவதற்கு அனைத்து பணிகளையும் தொலைதூர நோக்கோடு திட்டமிட்டு இருக்கின்றார். இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் இனி கால் நூற்றாண்டுகள் தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்திலேயே என்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலை நோக்கு திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • தங்கக் கட்டிகளை வங்கியில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று திருச்சி சமயபுரம், மாரியம்மன் கோவிலில் ஓய்வு பெற்ற நீதியரசர்கள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர். மாலா ஆகியோர் முன்னிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில், நாமக்கல், நரசிம்ம சுவாமி கோவில், சேலம், கோட்டை மாரியம்மன் கோவில், கோட்டை அழகிரிநாத சுவாமி கோவில், காருவள்ளி, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 541 கிலோ 781 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளர் அதுல் பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்தனர்.

    மேலும், சமயபுரம், மாரியம்மன் கோவிலில் இருப்பில் இருந்த 30 கிலோ 596 கிராம் சுத்த தங்கக் கட்டிகளை வங்கியில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர், அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த திட்டத்தின்கீழ் ஆண்டு இறுதிக்குள் 1,000 கிலோ தங்கக் கட்டிகளை முதலீடு செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டிற்கு ரூ.10 கோடி வட்டித் தொகையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், சமயபுரம், மாரியம்மன் கோவிலின் முழுநேர அன்னதானத் திட்டத்தில் வடை மற்றும் பாயசம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஏற்கனவே காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டிருந்த நிலையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தையும், அழகர்கோவில் மற்றும் மருதமலை கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    இதனையும் சேர்த்து 13 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் 150 கோடி ரூபாய் செலவி டப்படுகிறது. இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் செயல்படுகின்ற அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வருவதற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×