என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சீமானுக்கு மறதி அதிகம்..! அமைச்சர் பி.கே.சேகர்பாபு
- தமிழ் கடவுள் முருகன் மகிழ்ச்சி பெரும் வகையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெறும்.
- 19 கோவிலுக்கு ரூ.1200 கோடியில் புனரமைக்கும் பணி பெருந்திட்ட வரைவு நடந்து வருகிறது.
மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
மாங்காடு காமாட்சி அம்மன், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், பழனி தண்டாயுதபாணி, பெரியபாளையம் பவானி அம்மன், திருவெற்றியூர் வடிவுடையம்மன் ஆகிய 5 கோவில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக 2 கோவில்களில் இருந்த திட்டத்தை 13 கோவில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் நடந்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 3 கோடியே 50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளார்கள். 19 கோவிலுக்கு ரூ.1200 கோடியில் புனரமைக்கும் பணி பெருந்திட்ட வரைவு நடந்து வருகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு 95 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. பக்தர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதி, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் கடவுள் முருகன் மகிழ்ச்சி பெரும் வகையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெறும். திருச்செந்தூர் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நாங்கள் நடத்துவோம் என்று தெரிந்துதான் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
சீமானுக்கு மறதி அதிகம். ஏற்கனவே பழனி, மருதமலை கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். சீமான் போன்றோர் உபதேசத்தால் இந்த ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






