search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் தொல்லை"

    • சிறுமி தலைமை ஆசிரியரிடம் இருந்து தப்பி வீட்டிற்கு ஓடிச்சென்றார்.
    • மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளிக்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், பெட கொத்தப்பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஓங்கோல் அடுத்த காலாவுப்பேட்டையை சேர்ந்த சுந்தர்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

    இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற சுந்தர் பாபு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    சிறுமி தலைமை ஆசிரியரிடம் இருந்து தப்பி வீட்டிற்கு ஓடிச்சென்றார்.நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

    மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளிக்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.

    மேலும் தலைமை ஆசிரியரை போலீசில் ஒப்படைத்தனர். சுந்தர் பாபு ஏற்கனவே சில பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    குற்றச்சாட்டில் சிக்கிய சுந்தர்பாபு இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் பேக்கரி கடை முன்பு சம்பவத்தன்று இரவு மூதாட்டி ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
    • பல்லடம் ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் பொன்னம்மாள், பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் பேக்கரி கடை முன்பு சம்பவத்தன்று இரவு மூதாட்டி ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

    அதுசமயம் அந்த வழியே சென்ற இரண்டு பேர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் பொன்னம்மாள், பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மரிய தைரிய நாடார் என்பவரது மகன் அந்தோணி முத்து (வயது 58) மற்றும் ஜெகதாளன் என்பவரது மகன் வினோத் (வயது 32) ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
    • போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சகாதவேன் புகார் கொடுக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்த புகாரில் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடினர். பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் உதவி ஆய்வாளர் சகாதவேன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
    • தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28).

    இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம் நடந்தது. அந்த சிறுமிக்கு 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.

    இதில் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் (55) என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.

    விசாரணையின்போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டியும், பாலியல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவர் பழனிசாமிக்கு தெரிந்ததால், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், வழிகாட்டுதலின்படி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதற்காக, பழி வாங்கும் நடவடிக்கையாக, சிறுமியை திருமணம் செய்ததாக பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

    காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்துள்ள புகாரில் ஏரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

    பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் மன்மத லீலையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    வேலியே பயிரை மேய்ந்தது போல் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசே சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைதான சம்பவம் ஏரியூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • திருப்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 41 வயது கூலி தொழிலாளி
    • 15 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

    பல்லடம் : 

    திருப்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 41 வயது கூலி தொழிலாளி தனது 15 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 1.10.23 அன்று புகார் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அதிகாலை 1 மணி அளவில் பஸ் திண்டிவனம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது.
    • தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு திருநெல்வேலிக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் சென்னையில் இருந்து பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    அதிகாலை 1 மணி அளவில் இந்த பஸ் திண்டிவனம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது. அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் குடித்துவிட்டு பஸ்சில் ஏறி வந்து கொண்டிருந்தனர். தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணை 11 பேர் கொண்ட கும்பலில் 2 பேர் மட்டும் பெண் மீது தவறான கண்ணோட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    அந்தப் பெண் விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கவே அவரது உறவினர்கள் விழுப்புரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் பஸ் நிற்காமல் செல்லவே ஆத்திரமடைந்த உறவினர்கள் சினிமா பட பாணியில் பஸ்சை இரு சக்கர வாகனம் மூலம் 8 கிலோமீட்டர் துரத்தி விழுப்புரம் அடுத்த பிடாகம் என்ற இடத்தில் மடக்கினர். அதில் இருந்த 11 பேர்களை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்து அந்த பஸ் மற்றும் அதிலிருந்த அனைவரையும் விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற பயணிகளையும் பஸ்சையும் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஈரோடு சம்பத் நகரில் பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மசாஜ் சென்டரின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் சமீப காலமாக மசாஜ் சென்டர் அதிகரித்து வருகிறது. இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வடமாநில பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

    இதில் ஒரு சில மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து போலீசார் அவ்வப்போது மசாஜ் சென்டர்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் பாலியல் தொழில் ஈடுபட்ட பெண்களை மீட்டுள்ளனர். அதற்கு காரணமான இடைத்தரகர்களையும் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு சம்பத் நகரில் பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 1000 ரூபாய் முதல் மசாஜ் செய்யப்படும் என கூறி பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அந்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது மசாஜ் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அந்த மசாஜ் சென்டரின் ஊழியர்களான, ரவிக்குமார், விமல்ராஜ் மற்றும் செல்வின் சச்சு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 6 இளம்பெண்களை மீட்டு, மசாஜ் சென்டரை பூட்டி சீல் வைத்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மசாஜ் சென்டரின் உரிமையாளர் சுமன்சிவாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    • கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தக் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த ஜெனிகர் பிரபு (வயது 40) பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில், மாணவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் ஜெனிகர் பிரபு, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஆசிரியர் ஜெனிகர் பிரபு கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவிக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2021 ம் ஆண்டு, ஜூன் மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
    • விசாரணை நடத்திய காவல் துறையினா் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    திருப்பூா்:

    திருப்பூரை அடுத்த பல்லடத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து விரைவு மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

    திருப்பூா் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதூரை சோ்ந்தவா் ஆா்.குமாா் (வயது 66), இவா் கடந்த 2021 ம் ஆண்டு, ஜூன் மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோா் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை திருப்பூா் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில் குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

    • பாதிக்கப்பட்ட மாணவிகள் பயந்து போய் நடந்த சம்பவம் பற்றி வெளியே கூறாமல் இருந்துள்ளனர்.
    • போலீசார் பள்ளி முதல்வர் மீது போக்சோ உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 56 வயதான பள்ளி முதல்வர், மாணவிகளை தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    மேலும் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் செய்முறை தேர்வில் தோல்வி அடைய செய்து விடுவேன் என மாணவிகளை மிரட்டி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    அதோடு, இதுபற்றி வெளியே கூறினாலும் உங்களை பெயிலாக்கி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பயந்து போய் நடந்த சம்பவம் பற்றி வெளியே கூறாமல் இருந்துள்ளனர்.

    இதனையும் தனக்கு சாதகமாக்கி கொண்ட பள்ளி முதல்வர் ஏராளமான மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் சிலர் இதுபற்றி தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையத்திற்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநில மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது.

    பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரை செய்ததது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி முதல்வரின் பாலியல் தொல்லைகள் அம்பலமானது.

    பின்னர் போலீசார் பள்ளி முதல்வர் மீது போக்சோ உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி ரேணு பாட்டியா கூறியதாவது:-

    60 மாணவிகளிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்தது. இதில் 50 மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 மாணவிகள் பள்ளி முதல்வரின் தவறான நடத்தை பற்றி எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
    • இதுப்பற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

    இதுப்பற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர். பின்னர் அவர்கள் ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    கைது

    இதுப்பற்றி தெரியவந்ததும் நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுக வார்த்தை நடத்தினர்.

    . இந்த நிலையில் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து அழைத்து சென்றனர்.

    சஸ்பெண்டு

    பின்னர் ஆசிரியர் ராமமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கி கைதான ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை கல்வி துறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    • வியாபாரி மீது வழக்கு
    • போலீசார் விசாரணை நடத்தி பாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்

    குளச்சல், அக்.30-

    நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதி யை சேர்ந்தவர் பாலகிரு ஷ்ணன் (வயது 42). இவரது தனது தாய் நடத்தி வந்த பெட்டிக்கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்து ள்ளார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வந்து ள்ளார். அவருக்கு மிட்டாய் கொடுத்த பாலகி ருஷ்ணன் பாலியல் தொல்லை கொடு த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பயத்தில் கூச்சலிட்டார். அதனைக் கேட்டு அக்கம்ப க்கத்தினர் திரண்டதால் பாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இது குறித்து சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகிவி ட்ட அவரை தேடி வருகின்றனர்.

    ×