

பல்லடம் :
திருப்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 41 வயது கூலி தொழிலாளி தனது 15 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 1.10.23 அன்று புகார் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.