என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SEXUALLY HARASSING"

    • மது போதையில் தனது மூத்த மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • கோபாலகிருஷ்ணனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    அவினாசி : 

    அவினாசியை அடுத்து குறும்பபாளையத்தில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன்(வயது 48) .இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் மது போதையில் தனது மூத்த மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவரது மனைவி கவிதா அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கோபாலகிருஷ்ணனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

    • விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
    • திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    திருப்பூர் :

    தருமபுரியை சோ்ந்தவா் முருகன் (வயது 38). இவா் திருப்பூா் முருகானந்தபுரத்தில் சொந்தமாக கோழிக் கடை வைத்திருந்தாா். கடந்த 2020 பிப்ரவரி 19ந்தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா்.

    இதில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

    • 7 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர், பலவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் ஞானேஸ்வரன் (26). இவர் வீரபாண்டி பகுதியில் டையிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் பணியின் இடைவேளையில் வெளியே வந்த போது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி நடத்திய விசாரணையில் சிறுமியிடம் ஞானேஸ்வரன் அத்துமீறியது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 14 வயது சிறுவன் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • விக்னேஷ் சிறுவனை பொது கழிப்பிடத்துக்கு அழைத்து சென்றார்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று சிறுவன் தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ் (வயது 27) என்பவர் சிறுவனை அந்த பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்குள்ள குளியல் அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டினர்.இதனை தொடர்ந்து விக்னேஷ், சிறுவனின் வாயில் பேப்பரை வைத்து அடைத்தார். பின்னர் அவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனையடுத்து விக்னேஷ் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.சிறுவன் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சிறுமியை பெற்றோர் சிறுமியின் பெரியம்மா வீட்டில் விட்டு வெளியூருக்கு சென்றனர்.
    • போலீசார் சாமிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி.

    சிறுமியை சம்பவத்தன்று அவரது பெற்றோர் சிறுமியின் பெரியம்மா வீட்டில் விட்டு வெளியூருக்கு சென்றனர். இதையடுத்து சிறுமி, தனது பெரியம்மாவுடன், அவரது வீட்டில் இருந்தார்.

    சிறுமியின் பெரியம்மா வீட்டின் அருகே சாமிநாதன்(வயது68) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி தனது பெரியம்மா வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சாமிநாதன், சிறுமியிடம் நைசாக பேசி, தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சாமிநாதன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியான சிறுமி, அவரிடம் இருந்து தப்பி பெரியம்மா வீட்டிற்கு வந்து, நடந்த சம்பவங்களை கூறி அழுதார்.

    இதை கேட்டு அதிர்ச்சியான சிறுமியின் பெரியம்மா சம்பவம் குறித்து கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சாமிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • புகாரின் பேரில் நத்தம் போலீசார் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • ராமலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    நத்தம்:

    நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது59). இவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக சைகை காட்டி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நத்தம் போலீசார் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இது குறித்த விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் நத்தம் போலீசார் மற்றும் அரசு வக்கீல் ஆகியோர் போதிய ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி கருணாநிதி ராமலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    • வீட்டில் தனியாக இருந்த என்னிடம் எனது மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார்.
    • போலீசார் நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொமரலிங்கத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் ஆர்.டி.ஓ.விடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    கொமரலிங்கம் பகுதியில் மகன், மகளுடன் வசித்து வருகிறேன். எனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த என்னிடம் எனது மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். இது பற்றி கொமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன்.

    அதன்பேரில் எனது மாமனார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் எனது மாமனாரை கைது செய்ய முன்வரவில்லை. இதை சாதகமாக கொண்டு அவர் என்னை அச்சுறுத்தி வருகிறார். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

    • திருப்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 41 வயது கூலி தொழிலாளி
    • 15 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

    பல்லடம் : 

    திருப்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 41 வயது கூலி தொழிலாளி தனது 15 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 1.10.23 அன்று புகார் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
    • புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 46 வயது நபருக்கு ஒரு ஆயுள் மற்றும் ஆறாண்டு சிறை தண்டனையும், இரண்டு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு (வயது 46). இவர் கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் உன் குடும்பத்தை கொன்று விடுவேன் என்று மிரட்டி அதை பயன்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதில்சிறுமி கர்ப்பமானார். இதனால் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றங்கள் உண்டானதை உணர்ந்த பெற்றோர், அவரிடம் விசாரணை செய்த போது சிறுமி நடந்துவற்றை கூறியுள்ளார். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்த போது, கர்ப்பமாக இருந்தது உறுதியானது.

    இதனையடுத்து இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் விராலிமலை காவல் துறையினர் குழந்தைவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குழந்தைவேலு மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஒரு ஆயுள் மற்றும் ஆறாண்டு சிறை தண்டனையும் இரண்டு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7.50 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து குற்றவாளி குழந்தைவேலு காவல்துறை பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்

    ×