search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதானஓவிய ஆசிரியர் சஸ்பெண்டு
    X

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதானஓவிய ஆசிரியர் சஸ்பெண்டு

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
    • இதுப்பற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

    இதுப்பற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர். பின்னர் அவர்கள் ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    கைது

    இதுப்பற்றி தெரியவந்ததும் நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுக வார்த்தை நடத்தினர்.

    . இந்த நிலையில் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து அழைத்து சென்றனர்.

    சஸ்பெண்டு

    பின்னர் ஆசிரியர் ராமமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கி கைதான ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை கல்வி துறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    Next Story
    ×