search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ பதிவு- தலைமை ஆசிரியருக்கு அடி-உதை
    X

    பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ பதிவு- தலைமை ஆசிரியருக்கு அடி-உதை

    • சிறுமி தலைமை ஆசிரியரிடம் இருந்து தப்பி வீட்டிற்கு ஓடிச்சென்றார்.
    • மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளிக்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், பெட கொத்தப்பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஓங்கோல் அடுத்த காலாவுப்பேட்டையை சேர்ந்த சுந்தர்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

    இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற சுந்தர் பாபு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    சிறுமி தலைமை ஆசிரியரிடம் இருந்து தப்பி வீட்டிற்கு ஓடிச்சென்றார்.நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

    மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளிக்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.

    மேலும் தலைமை ஆசிரியரை போலீசில் ஒப்படைத்தனர். சுந்தர் பாபு ஏற்கனவே சில பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    குற்றச்சாட்டில் சிக்கிய சுந்தர்பாபு இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×