என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்
- கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தக் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த ஜெனிகர் பிரபு (வயது 40) பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில், மாணவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் ஜெனிகர் பிரபு, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து ஆசிரியர் ஜெனிகர் பிரபு கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவிக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்