search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிறுத்தம்"

    • பஸ்கள் வரும் நேரத்தை காண்பிப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.
    • பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அறிவிப்புகள் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் எந்தெந்த பஸ் நிறுத்தத்துக்கு எப்போது வரும். அங்கிருந்து எப்போது புறப்படும் என்ற தகவலை வழங்குவதற்காக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இந்த தகவல்களை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள 7 போக்குவரத்து கழகங்கள் டெண்டர் விட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, சேலம், கோவை, மதுரை ஆகிய 7 போக்குவரத்து கழகங்களில் பஸ் நிறுத்தத்துக்கு பஸ்கள் வரும் நேரம், அங்கிருந்து புறப்படும் நேரம் ஆகியவை செல்போன் செயலி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்ப டும். இது அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், பஸ் வழித் தடங்களில் பஸ்களின் வருகை, புறப்படும் நேரம் பற்றிய தற்போதைய போக்குவரத்து தகவல்களை வழங்கும்.

    இந்த டெண்டரில் 7 போக்குவரத்து கழகங்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு, செயல்படுத்தும், ஒருங்கிணைப்பு, வாகன திட்டமிடல் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

    இந்த வசதி 2213 புதிய டீசல் பஸ்கள், 500 மின்சார பஸ்களில் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் அமைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். பஸ்கள் வரும் நேரத்தை காண்பிப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.

    மேலும் பஸ்கள் வரும்போது பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அறிவிப்புகள் வழங்க வேண்டும் என்றனர்.

    • கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
    • பூங்கா ரெயில் நிலைய சுரங்கப்பாதை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் சென்னை நகரம் முழுவதும் சோதனை செய்து ஒரு சில இடங்களில் புதிய பஸ் நிலையங்களை நிறுவவும், நடை பாதைகள் அமைக்கவும், பஸ் நிறுத்தத்தை மாற்றவும் பரிந்துரை செய்துள்ளனர்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முன்புறம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    அண்ணாசாலையில் உள்ள நடைபாதையை சிட்கோ பஸ்நிறுத்தம் வரை நீட்டிப்பதன் மூலம் ரெயில்வே நடைபாலத்தை ஒருங்கிணைக்க பரிந்துரை செய்துள்ளனர். இதே போல் நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் சாலை நடைபாதையாக மாற்றப்பட உள்ளது.

    கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் சின்ன மலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு நடைபாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பூங்கா ரெயில் நிலைய சுரங்கப்பாதை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

    இதற்கிடையே சில அமைப்புகள் சென்னையில் உள்ள 10 பஸ் நிறுத்தங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக கண்டறிந்து உள்ளன. சென்னை கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் கல்லூரி, அசோக் பில்லர், சின்னாண்டி மடம், ஐ.ஓ.சி. நகர், முத்தமிழ் நகர், வியாசர் பாடி மார்க்கெட், சிட்கோ, வாசுகி நகர், சைதாப்பேட்டை ஆகிய பஸ் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளன.

    சில பஸ் நிறுத்தங்கள் மதுக்கடை அருகில் அமைந்துள்ளன. சில பஸ் நிறுத்தங்களில் ஆண்கள் மது அருந்துகிறார்கள். விளக்குகள் இல்லாத சில பஸ் நிறுத்தங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளன.

    • பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை பாண்டியன் நகர் முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (49). இவர் தெற்குவாசல் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து உறவினர் சாகுல் ஹமீது கொடுத்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள ஐகோர்ட்டு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்தவர் பாரதிராஜா (41). இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி ஹேம சிவரஞ்சனி கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • பஸ் நிறுத்தத்தை சிறிது தொலைவில் அமைப்பது தொடர்பாக ஆலோசித்துள்ளோம்
    • இறைச்சி கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் சுகாதார சீர்கேடு, கழிவுநீர் பிரச்சனை, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சனைகளை விரைந்து தீர்க்க மேயர் மகேஷ் தினமும் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்.

    பால்பண்ணை சந்திப்பு பகுதியில் இருந்து இன்று தனது ஆய்வை மேயர் மகேஷ் தொடங்கினார். அப்போது அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் போக்குவரத்துக்கு இடை யூறாக இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த பஸ் நிறுத்தத்தை சிறிது தொலை வில் மாற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண் டார். பின்னர் டெரிக் சந்திப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்று அரசின் விதிமுறைக்குட்பட்டு செயல்படாதது தெரிய வந்தது. ஏற்கனவே அந்த இறைச்சி கடைக்கு நோட் டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    டெரிக் சந்திப்பு பகுதியில் மழை நேரங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சீரமைத்து சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரி யிடம் கூறினார்.

    பின்னர் ஜேக்கப் தெரு பகுதியில் ஆய்வு மேற் கொண்டபோது காலி இடத்தில் குப்பைகள் மழை போல் குவிந்து கிடந்தது. அந்த இடத்தில் கிடந்த குப்பைகளை உடனடியாக மாற்றுவது தொடர்பாக அதிகாரியிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பால்பண்ணை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் போக்கு வரத்துக்கு இடையூறாக இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.பஸ் நிறுத்தத்தை சிறிது தொலை வில் அமைப்பது தொடர் பாக ஆலோசித் துள்ளோம். இது தொடர்பாக ஆலோ சித்து நடவடிக்கை எடுக்கப் படும்.

    ஏற்கனவே நாகர்கோவில் மாநகர பகுதியில் இறைச்சி களை வெட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. தற்பொழுது இறைச்சி கடையில் உள்ள கழிவுகள் சாக்கடையில் கலப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் துர்நாற் றம் வீசுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இறைச்சிகளை வெட்டும் ேபாது அரசின் விதிமுறைகள் உட்பட்டு வெட்ட வேண்டும். இல்லாத இறைச்சி கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜேக்கப் தெரு பகுதியில் காலி இடத்தில் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டு இருந்தது. அந்த இடம் யாருக்கு சொந்தமான இடம் என்று தெரியவில்லை. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமா னோர் அந்த பகுதியில் குப்பைகளை தொடர்ந்து கொட்டி விடுவதால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. உடனடியாக அந்த குப்பை களை அகற்ற அதிகாரி களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரிடம் பேசி குப்பைகளை அங்கே கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் நகரில் மழை நேரங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் சாக்கடைகள் சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஆணை யாளர் ஆனந்த மோகன், நகர்நல அதிகாரி ராம் மோகன், என்ஜினீயர் பால சுப்ரமணியன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கமுதி முஷ்டகுறிச்சியில் பஸ் நிறுத்தம் கட்ட பூமிபூஜை நடந்தது.
    • இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-கீழ்குடி சாலையில் உள்ள முஷ்டகுறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் மெயின் ரோட்டுக்கு வந்து தான் மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும். இங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால், வெளியூர் செல்பவர்கள், வெயில் மற்றும் மழையில் நின்று சிரமப்படும் நிலை இருந்தது. இங்கு பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று தெற்கு மாவட்ட தி.மு.க. கவுன்சிலர் போஸ் சசிக்குமார் தனது மாவட்ட கவுன்சில் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட ஒப்புதல் அளி்ததார். இதையடுத்து பூமி பூஜை நடந்தது. இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக உடுமலை ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
    • பல ஆண்டு காலமாக சாலை ஓரம் நின்று பஸ்சில் ஏறி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு ட்பட்ட 29 வது வார்டு பகுதியில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளன. மேலும் அந்த பகுதியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவு உள்ளன. இந்த நிலையில் நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக உடுமலை ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மாதந்தோறும் மாத்திரைகள் வாங்குவதற்கும் தினமும் சிகிச்சைக்காகவும் பலர் தினம் வந்து செல்கின்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

    இந்த பகுதிக்கு அடிப்படை தேவைகளுக்காக வந்து செல்லும் பொதுமக்களுக்கு பேருந்துக்காக காத்திருக்க வேண்டிக்கும்போது தளி சாலையில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படாத காரணத்தால் பல ஆண்டு காலமாக சாலை ஓரம் நின்று பஸ்சில் ஏறி வருகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மழை, வெயில் காலங்களில் அருகில் உள்ள கடைகளில் ஒதுங்கி நிற்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் ஆக்கிரப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை அகற்றி பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் தற்பொழுது வரை பேருந்து நிறுத்த அமைக்கப்படவில்லை.ஆகையால் சம்பந்தப்பட்ட உடுமலை நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பஸ் நிறுத்தம் அடையாளம் தெரியாத நபரால் ஜே.சி.பி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • சந்தேகம் படும்படியாக ஜே.சி.பி எந்திரத்துடன் நின்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் அரசு விளையாட்டு அரங்கம் அருகே பஸ் நிறுத்தம் இருந்தது. கடந்த 7ந் தேதி நள்ளிரவு இந்த பஸ் நிறுத்தம் அடையாளம் தெரியாத நபரால் ஜே.சி.பி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அன்று நள்ளிரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் நகர போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி மர்ம நபர்களை கண்டுபிடித்து உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில், காரைக்கால் நகராட்சி பில் கலெக்டர் ஜோசப் என்பவர் நேற்று காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், கடந்த 7ந் தேதி இரவு விழுப்புரம் வானூர் பகுதியைச்சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம் படும்படியாக ஜே.சி.பி எந்திரத்துடன் நின்றார். அவர்தான் நகராட்சிக்கு சொந்தமான ரூ.2 லட்சம் மதிப்பிலான பஸ் நிறுத்தை இடித்திருக்கவேண்டும். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி போலீசார் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு செபத்தையாபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் ஆலயமணி, சங்கத் தலைவர் ஜெயராஜ் சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, கூட்டுறவு பண்டக சாலை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் த.அறவாழி, நகர தி.மு.க. செயலாளர் நா.கண்ணன், பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெப தங்கம் பிரேமா ஜெயக்குமார், எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், முத்துராஜ்,இந்திரா, சுமதி, அமுதா, ப்ளாட்டினா மேரி, மற்றும் சாயர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன், பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் பேரூராட்சி ஊழியர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க செயலர் சாலொமோன் பொன்ராஜ், செபத்தையாபுரம் ஊர் நலக் கமிட்டி தலைவர் அமிர்தராஜ் மற்றும் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஜக்கனாரை கிராமத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் குவியலாக உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீப காலம் வரை அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இந்நிலையில் கோத்தகிரி ஜக்கனாரை கிராமத்தில் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவியலாக உள்ளது.

    இதனால் காட்டு பன்றி, கரடி போன்ற வனவிலங்குகள் குப்பைகளை கிளரி விடுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஜக்கனாரை கிராமத்தில் பஸ் நிறுத்தம் பராமரிப்பின்றி குப்பைகளால் சூழ்ந்துள்ளது இதனால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஜக்கனாரை ஊராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குன்னத்தூர் ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
    • நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

    அன்னூர்,

    கோவை மாவட்டம்

    அன்னூர் வட்டத்திற்கு ட்பட்ட குன்னத்தூர் ஊராட்சியில் 6 குக்கிரா மங்களுடன் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியானது கோவை வழித்தடம் சத்தியமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஊராட்சி அலுவலகத்திற்கு எதிராக பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள மரத்தடியில் பயணிகள் நின்று பஸ் ஏறி செல்வார்கள்.

    திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் இந்த பஸ்நிறுத்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ஆனால் பல ஆண்டுகளாக இவர்கள் மரத்தடியில் நின்றபடியே பஸ் ஏறுகிறார்கள். மழை காலங்களில் நனைந்தபடியே நின்று பஸ் ஏறுவதை காண முடிகிறது. இதனால் இங்கு பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

    • கோயமுத்தூர், பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏற வேண்டும்.
    • பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் கோயமுத்தூர், பல்லடம்,பொள்ளாச்சி, உடுமலை ,பொங்கலூர். போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் நின்றுதான் பேருந்து ஏற வேண்டும்.

    ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் எப்பொழுதும் மழைநீரும் சாக்கடை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது. மேலும் பேருந்து ஏறுவதற்கு இந்த கழிவு நீரின் வழியாகத்தான் பேருந்தில் ஏற வேண்டும். இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் மனு கொடுத்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • டவுன் நயினார்குளம் பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் இல்லை.
    • இருக்கைகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நயினார்குளம் சாலையில் உள்ள சந்தி விநாயகர் கோவில் அருகே பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது.

    இந்த பஸ் நிறுத்தத்தின் மூலமாக சந்திப்பு, புதிய பஸ் நிலையம், சமாதானபுரம், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு டவுனில் இருந்து செல்லும் ஏராளமானோர் பயன் அடைந்து வருகின்றனர்.

    மேலும் டவுன் ரதவீதிகளை சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மாணவ-மாணவிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் புறப்பட்டு பாளை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவேண்டும்.

    நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கிச் சென்று மாநகர பகுதியில் வீடு, வீடாக விற்பனை செய்யும் வயதான பெண்களும் இந்த பஸ் நிறுத்தத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இந்த பஸ் நிலையத்தில் தற்போது இருக்கைகள் இல்லை. இதனால் பயணம் செய்ய வரும் பயணிகள் அமர்வதற்கு வழியில்லாமல் பஸ் வரும் வரை நின்று கொண்டே இருக்கின்றனர்.

    இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல மக்கள் நலசங்கத்தின் தலைவர் அயூப் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில் இன்று வரை பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனையடுத்து இன்று அவர் மீண்டும் மனு அளித்துள்ளார்.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றுவிட்ட நிலையில் இனியாவது அங்கு இருக்கை அமைக்க வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×