search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமிபூஜை"

    • பஸ் நிலையம் கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது.
    • நிகழ்ச்சியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என மாரிமுத்து எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

    பின், புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆணையர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, அலுவலக ஊழியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரிடர் ஆலோசனை குழு உறுப்பினர் செல்வகணபதி, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், அனைத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி னார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக் கம்பட்டி முதல் உசிலம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.2 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைப்ப தற்கான பூமி பூஜை, முடுவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப் பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி னார். அவைத் தலைவர் பாலசுப்ரமணி யன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக் குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா, ஈஸ்வரி, கோவிந்த ராஜ், சுமதி பாண்டியராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெய மணி, ஜெயமாலா, பால முருகன், நகர் செய லாளர்கள் ரகுபதி, மனோ கரவேல் பாண்டியன், ஒன்றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், அணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, யோகேஷ், தவ சதீஷ், ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 3 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி பூமி பூஜை நடந்தது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ராமநாதசுபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் முழு குடிநீர் தட்டுப் பாட்டை போக்கிடும் வகை யில் தமிழ்நாடு அரசு சார் பில் ரூ.2,819 கோடி மதிப் பீட்டில் சிறப்பு கூட்டு குடி நீர் திட்டம் ஒப்புதல் அளிக் கப்பட்டு கடந்த மே மாதம் 2-ந்தேதி நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தொடங்கப்பட் டுள்ளது.

    மேல்நிலை தொட்டிகள்

    அந்த வகையில், ராமநாத புரம் நகராட்சியில் ரூ.229 கோடி மதிப்பீட்டில் தொடங் கப்பட்ட சிறப்பு கூட்டு குடி நீர் திட்டப்பணிக்காக கான் சாகிப் தெரு, கோட்டை மேடு, சிங்காரம் தோப்பு ஆகிய மூன்று இடங்களில் 50 லட்சம் மதிப்பீட்டில் 14.5 லட்சம் லிட்டர் குடிநீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட இருக்கி றது.

    இதையொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜையை தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக கட்டுமான பணி பூமி பூஜைக்கு குடிநீர் வடிகால் வாரிய மண்டல ஒருங்கி ணைப்பாளர் ஜெ.பாலாஜி தலைமை தாங்கினார்.

    இந்த திட்டத்தின் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கி டலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்த லைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் ரெங்கராசு, ராமநாத புரம் யூனியன் சேர்மன் கே.டி.பிரபாகரன்,

    விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாள ரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான நகராட்சி கவுன்சிலர் முகம் மது ஜஹாங்கீர் (எ) ஜவா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் தொழிலதிபர் என்.திருமாறன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழ.பிரதீப் மற்றும் உள்ளாட்சி பிரதிநி திகள் கலந்துகொண்டனர்.

    • நகரமன்ற துணைத்தலைவருமான பா.மு.வாசிம்ராஜா கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    குன்னூர் மவுண்ட்பிளசண்ட் 2-வது வார்டு பகுதியில் நீலகிரி எம்.பி ராசாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில், ரேஷன் கடை அமைப்பதற்காக பூமிபூஜை நடந்தது.

    நகர செயலாளரும், 2-வது வார்டு நகரமன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமை தாங்கினார்.மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரும், நகரமன்ற துணைத்தலைவருமான பா.மு.வாசிம்ராஜா கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில்நகர துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் ஜெகநாத்ராவ், மாவட்டபிரதிநிதி மணிகண்டன், குன்னூர் எம்.எல்.ஏ தொகுதி ஒருங்கிணைப்பாளரும், கிளை கழக செயலாளருமான அல்போன்ஸ்மணி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சையத்மன்சூர், ராமன், கோவர்த்தனன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடல் அலைகள் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது.
    • ரூ. 6 கோடியே 83 லட்சம் மதிப்பில் மீன் இறங்கு தளம் அமைக்க உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவர் கிராமம் அமைந்துள்ளது.

    இந்த மீனவர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .

    தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள குட்டியாண்டியூர் கிராமத்தில் கடல் அலைகள் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது.

    இதனால் கரையில் படகுகளை நிறுத்த முடியாத நிலைமை உண்டானது. கரை அரிப்பை தடுக்கும் வகையில் கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதனை ஏற்று தமிழக அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 6 கோடியே 83 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

    கரையில் கருங்கல் கொட்டி தடுப்புச் சுவர் அமைக்கப்படுவது உடன் மீன் இறங்க தளமும் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான பூமி பூஜை குட்டியாண்டியூர் கடற்கரையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தரங்கை பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, மீன்வளத்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் பங்கேற்றனர்.

    • ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
    • தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதிய ளித்தார்.

    சூளகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவில் வேப்பனஹள்ளி தொகுதி ,சூளகிரி ஒன்றியம், இம்மிடி நாயக்கன பள்ளி ஊராட்சிக் குட்பட்ட கிராமங்களில் 15-வது நிதிகுழு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.34.12 லட்சம் மதிப்பீட்டில் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இம்மிடி நாயக்கனபள்ளி ஊராட்சிக் குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தங்கள் பகுதியில் சிமெண்ட் சாலைகள் மற்றும் தார் சாலைகள் பல வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ளதாகவும், மற்றும் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று கடந்த மாதம் சேர்மன் அவர்களிடம் ஒன்றிய குழு உறுப்பினர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    அதன் பின் ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் அதிகாரி களுடன் நேரில் சென்று பார்வையிட்டு தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதிய ளித்தார்.

    அதனடிப் படையில் கும்மனூர் சாலை முதல் வேட்டியம்பட்டி சாலை வரை தார் சாலை அமைக்க சுமார்.ரூ.21.62 லட்சம் மதிப்பிலும், கும்மனூர் கிராமத்தில் கோவில் அருகில் சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம் மதிப்பிலும், சீகலபள்ளி கிராமத்தில் ரட்சை முதல் நாராயன சாமி வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம் மதிப்பிலும், மேடுபள்ளி கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது. இதனை ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ேஹம்நாத் தொடங்கி வைத்தார். இதற்காக ஒன்றிய குழு தலைவருக்கு கிராம பொதுமக்கள் பாராட்டுக் களையும் தெரிவித்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபி பிரான்சினா, விமல் ரவிகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் லதா ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் நாராயன்சாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நவீன்ந்தரன், மாரியப்பன், ரவி கிரன், ஊராட்சி கழக செயலாளர் வெங்கட்ராஜ், ஊர் கவுண்டர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • வெயிலில் நின்று பஸ்சில் ஏறி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
    • நிழற்கூடம் அமைக்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஸ்வரன் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான் கோட்டை ஊராட்சி, தேவரசம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மாணவ, மாணவிகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், நோயாளிகள் பஸ்சுக்காக செல்ல தேவர சம்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வருகின்றனர். அவர்கள் வெயிலில் நின்று பஸ்சில் ஏறி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஸ்வரன் நிதி ஒதுக்கீடு செய்தார். அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தார். இதேபோல்

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் வரையுள்ள பழுதடைந்த கிராம சாலையை முதல்-அமைச்சர் கிராம சாலைகள் விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1கோடி 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலையாக அமைக்கும் பணிக்கு எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பா.ம.க. கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இரு வழி சாலையை நான்குவழி சாலையாக அகலபடுத்தும் பணிக்கு கெலமங்கலத்தில் பூமிபூஜை நடந்தது.
    • சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அத்திப்பள்ளி சாலை இருதாளம் முதல் மஞ்சளகிரி வரை ஒசூர் சாலையில் 11 கி.மீ நீளத்துக்கு ரூ.78 கோடி மதிப்பில் முதல்-அமைச்சர் சாலை விரிவாக்கம் திட்டத்தில் இரு வழி சாலையை நான்குவழி சாலையாக அகலபடுத்தும் பணிக்கு கெலமங்கலத்தில் பூமிபூஜை நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை தேன்கனிக்கோட்டை கோட்ட பொறியாளர் திருமால்செல்வன், கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், திம் ஜேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன், ஒப்பந்ததாரர் சேகர், தளி ஒன்றிய கவுன்சிலர் பிரசாந், முன்னால் கவுன்சிலர் நாகராஜ், நகர செயலாளர் மது குமார், துணைசெயலாளர் குருராஜ், மகளீர் அணி மஞ்சுளா, சீனிவாசன், உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானபேர்கள் கலந்து கொண்டார்கள்.

    • முகாமை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வை யிட்டார்.
    • மேலும் மகளிரிடம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பேசினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி 23-வது வார்டு ராசுவீதியில் உள்ள தொடக்க பள்ளியில் பொது நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் நிரந்தர சமையல் அறை கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது.

    இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நவாப், நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் வசந்தி, பொறியாளர் சேகரன், இளநிலை பொறியாளர்கள் அறிவழகன், உலகநாதன், கவுன்சிலர்கள் தேன்மொழி மாதேஷ், பாலாஜி, சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை 1-வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வை யிட்டார்.

    மேலும் மகளிரிடம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பேசினார். அப்போது நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர தி.மு.க. செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், நிர்வாகி அன்பரசன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

    • மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது.
    • ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது

    ஊத்துக்குளி, ஜூலை.19-

    ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது. ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் என். பிரபு தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக ஒன்றிய தலைவர் பி. பி.பிரேமா ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டார்.

    மேலும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் என். கணேஷ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலன், கலாமணி உள்பட பல கலந்து கொண்டனர்.

    • தானம்பட்டி முதல் கங்கலேரி வரை ரூ.30 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது.
    • பணிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியம் கொண்டேப்பள்ளி முதல் சின்னதானம்பட்டி வரை, கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 31 லட்சத்து 7ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது. அதே போல், கொண்டேப்பள்ளி ஊராட்சி தானம்பட்டி முதல் கங்கலேரி சாலை வரை 30 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது.

    இந்த சாலை பணிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது.
    • எண்ணே கொள்புதூர் அரசு உயர்நிலை ப்பள்ளியில் ரூ.18.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் கட்டிடத்தை மதியழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பனப் பள்ளி ஒன்றியம் எண்ணே கொள்புதூர் ஊராட்சியில் ரூ.1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. இதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து எண்ணே கொள்புதூர் அரசு உயர்நிலை ப்பள்ளியில் ரூ.18.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் கட்டிடத்தை மதியழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து வேப்பனப்பள்ளி ஒன்றியம் எண்ணே கொள்புதூர், சென்றா கவுண்டர் கிராமத்திற்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டுதல், கரிக்கல் நத்தத்தில் ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி அமைத்தல், பெரிய புளியரசி கிராமத்தில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அமைத்தல், பெரிய புளியரசி கிராமத்தில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மதியழகன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் கோவிந்தன், அன்பரசன், மேற்கு மாவட்ட பிரதிநிதி மாதேஸ்வரன், எண்ணே கொள்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×