search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் வகுப்பு அறைகள்
    X

    அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் வகுப்பு அறைகள்

    • ராஜபாளையம் அருகே அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் வகுப்பு அறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமிபூஜை நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை நடந்தது.

    தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி.முன்னிலை வகித்தார்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு சொந்த செலவில் நூலக வசதி ஏற்படுத்தி தர தயாராக இருக்கிறேன். அதேபோல அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் ஆண்டு விழா நடத்த மாவட்ட கல்வி அதிகாரியிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆண்டுவிழா போட்டி களில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளேன். ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக வழிநடத்திச்செல்வேன்.

    கல்விக்கு பெருந்தலைவர் காமராஜர் எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ, அதுபோல அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் கற்பகம்மாள் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், தங்கப்பான், சீதாராமன், வைரவன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×